Saturday, January 12, 2013

பொங்கல்

இனிக்கும் இன்பத் திருநாளில்
இதயம் மகிழ வாழ்த்துகின்றேன­்!
கனிக்குள் நுழைந்த சுவையாக
கவிக்குள் அமர்ந்த இனிமையாய்
பனிக்குள் நனைந்த பூச்சூடிப்
பொங்கி மகிழும் பெருநாளில்
இனிக்கும் இன்பம் பெருகிடவே
எழுந்த கதிரை வாழ்த்துகிறேன்!


No comments:

Post a Comment