என் கவிதைகளின் இரகசியம்
நீ, நான், நிறைய காதல்
அவளவுதான்..!
யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Monday, July 29, 2013
Friday, July 26, 2013
Wednesday, July 24, 2013
Friday, July 19, 2013
Friday, July 12, 2013
Wednesday, July 10, 2013
நீ உண்ணும் பொழுது ஒரு வாய் ஊட்டிவிட சொல்லி
உன் எச்சிலை சாப்பிடம் சுகம் !
தினமும் காலை உன்னிடம் திட்டுக்கள் வாங்கிவிட்டு
பள்ளி செல்லும் சுகம் !
மாலை வீடு திரும்பியதும் ஒன்றுமே நடக்காதது போல்
என்ன தலையை வருடிக் கொடுக்கும் சுகம் !
நான் தூங்கி விட்டேன் என்று எண்ணி
என் நெற்றியில் நீ முத்தம் கொடுக்கும் சுகம் !
இது அனைத்தும் இன்று வரை அனுபவித்துகொண்டிருக்கிறேன்
என் தாயிடம் இருந்து.
ஏழு கழுதை வயசாச்சு இன்னம் பிள்ளைய
கொஞ்சிகிட்டு இருக்கனு யாரு சொனாலும்
என் பிள்ளை கிழவன் ஆனாலும் எனக்கு அவன்
குழந்தைதான் என்று சொல்லி
என்னை தன் வாழ்நாள் முழுக்க சுமந்துகொண்டிருக்கும்
என் அன்னையை கடைசி காலம் வரை
சுகமாகசுமப்பது நான் செய்த பாக்கியம்.
Sunday, July 7, 2013
முதல் ஸ்பரிசம் அது!
சிரித்தேன் சிரித்தாள்
தொட்டேன் தடுத்தாள்
விட்டேன் அணைத்தாள்!
ஆறாம் அறிவும்
பாழாய் போனது!
நெருங்கினாள் நான்
நொறுங்கினேன்!
இமை வருடினாள் நான்
இதழ்'கள் பருகினேன்!
வேண்டாமென எச்சரித்தாள்
இது போதாதென நச்சரித்தேன்!
காதலும் காமமும்
ஒரு புள்ளியில் சேர்த்துவிட்டாள்!
சம்மதம் கேட்கவில்லை
சங்கடமும் அவளுக்கில்லை!
அகம் புறம் எங்கெங்கும்
முத்தமிட்டு சிலிர்க்கவைத்தாள்!
அகவை அது மறந்து
நித்தம் நித்தம்
தேகம் துளிர்க்கவைத்தேன்!
வெட்கத்தில் முகம் மலர்த்தாள்!
சொர்க்கத்தை நானும் கண்டேன்
பக்கத்தில் அவளும் இருந்தாள்!
மடியினிலே சில நேரம்
மார்பினிலே சில நேரம்
முதுகோடு சில நேரம்
மூர்ச்சைனேன் அந்நேரம்!
ஆகா, மோச்சமானேன் எந்நாளும்!
அச்சம் அது மறந்து
மிச்சமின்றி அள்ளிக்கொடுத்தாள்
சொச்சமும் ருசித்துவிட்டு
மச்சம் கூட சிவக்க வைத்தேன்!
மலராக மாறிவிட்டாள்
மகரந்தம் நானும் கொண்டேன்!
சிலையாகி அவள் கிடந்தாள்
செதுக்கும் போதே சிற்பியானேன்!
நாணத்தில் தலைகுனிந்தாள்
நானும் அதில் பாதி அடைந்தேன்!
Thursday, July 4, 2013
அம்மா
ரத்தத்தில் நனைந்து வந்த
என்னை முத்தத்தால் நனைத்த
உன் இதழ்களில்
முதல் முறை என் பெயரை
எப்பொழுது உச்சரித்தாயோ
அன்றிலிருந்து இன்று வரை
அந்தக் குரலில் கலந்து வரும்
உரிமையை உணர்வை
வேறு எந்த குரலிலும்
நான் உணர்ந்ததில்லை.......அம்மா