Saturday, December 29, 2012

'#ஒரு துயரத்தின் இன்னுமொரு கோடு - தில்லை

எனது உடல் தழுவி
ஒத்திகை பார்த்தவர்கள்
தசைகளைத் தின்று
ஒருவர் பின் ஒருவராய்
உணர்வுகளை மட்டும்
துப்பி சென்றனர்
ஆயினும் நான்
அடியெடுத்து நடக்கின்றேன்

இனிய சகோதரியே
என்னை மன்னியுங்கள்
நீங்கள் விரும்பாத மொழியை
நான் பேசுவதற்காக

சாட்சியங்கள் ஏதுமின்றி
தேசாந்திரியாய்
தனித்த பயணத்தில்
எல்லைகளற்ற பெருவெளிகளில்
நீண்ட குரலெடுத்து
நிர்வாணமாய் அப்பி
நிரம்பி வழிகிறது
எனது கவிதை
நேற்றே நான் இறந்து விட்டேன் ( படித்து பகிருங்கள்

சற்றே வியந்துதான் போகிறேன் உன் மனதின் நிறம் மாறும்குணத்தை எண்ணி....

அளவில்லா ப்ரியங்களுடன்அணுஅணுவாய் என்னை காதலிக்கமுடிந்த உன்னால் எப்படி இன்னொருஇதயத்தையும் காதலிக்க முடிந்தது?

நேற்று விளையாட்டாய் உன் கைப்பேசியைஎடுத்துப் பார்க்கையில்தான் என் மனம்தற்கொலை செய்துகொண்டது.

எனக்கு மட்டுமே சொந்தமானஉன் Sent items' ல் யாரோ ஒருவருக்குநீ அனுப்பிய ஐலவ்யூக்களும், உம்மாக்களும்என்னுள் ஏற்படுத்திய வலியைஉன்னால் உணரக்கூடுமா?

என் குரல் சேமித்து வைக்கப்பட்டிருந்தஉன் ரெக்கார்டிங்கில் இப்போதுஇன்னொருவர் குரல்...உன் தொலைபேசியில் இருந்த என்அத்தனை புகைப்படங்களும் எங்கே போயிற்று?உன்னால் பதில் சொல்ல முடிகிறதா?

என் முன்னாலே நீ உன் புதுக்காதலுடன்சிரித்து பேசுகையில் நொடிக்கொருமுறைஉன் காதலின் நினைவுகளால்கற்பழிக்கப்படுகிறேன்.என் எதிரிக்கும் வேண்டாம்இப்படி ஒரு வேதனை.

எனக்கு நிச்சயமாய் தெரிகிறதுஉன் ஸ்பரிசங்களும், உன் முத்தங்களும்இனி இன்னொருவருக்கு தான் சொந்தம் என்று...மூளைக்கு புரியும் இந்த உண்மையைமனம் அடம்பிடித்து ஒப்புக்கொள்ள மறுக்கிறது.

உன் வாசம் படிந்த கைக்குட்டை..உன்னுடன் கண்டு களித்த சினிமா டிக்கெட்..ஓயாமல் சிரிக்கும் உன் புகைப்படம்..காதலுடன் நீ வரைந்த கிரீட்டிங் கார்ட்என உன்னை மட்டுமே நினைத்துக் கொண்டேஇருக்க வேண்டும் என நான் பத்திரப்படுத்தியஉன் நினைவுகள் அனைத்தும் வெறும்நினைவுச் சின்னங்களாக மட்டுமே இருக்கும் எனசத்தியமாய் நினைக்கவில்லை...

என் வசந்த காலத்தின்
ஒரு பக்கத்தை முற்றிலும்
இலையுதிர் காலமாய் செய்தாய்.

மனம் வலிக்கும் நேரங்களில்
உன் நினைவுகள் மட்டுமே சுகமாய் இருக்கும்.
ஆனால் இன்றோ என் மனவலிக்கு
முழுமுதற் காரணமும் நீயாய்...

அழுவது அவமானச் சின்னம்
என்பது என் கொள்கை.
ஆனால் இன்றோ என் கண்ணீர்
சுரப்பிகள் கூட வற்றிவிட்டன.

தற்கொலை செய்துகொள்வது
கோழைத்தனத்தின் உச்சம் என நினைத்திருந்தேன்.
கண் முன்னே இப்படி ஒரு வலியை
உணர்கையில்தான் தோன்றுகிறது
தற்கொலை பாலைவனத்தில் நீரைப்போல்...

உன் மனதின் கொடூரத்தை தாங்க இயலாமல்
ஒரு நொடியில் மணிக்கட்டை
கூரிய பிளேடால் அறுத்துக் கொண்டேன்.
நீ கொடுத்த வலியைவிட அது ஒன்றும்
வேதனை நிறைந்ததாய் இருக்கவில்லை.

என் காதல் நரம்புகளை அறுத்துவிட்டு,
நீ வீணை வாசிக்கிறாய்.
என் சந்தோஷ சிறகுகளுக்கு தீ வைத்துவிட்டு,
நீ குளிர்காய்கிறாய்.

யாரை நோக்கியோ உன் பார்வைகள்.
குருடாய் போனது என் உலகம்.
யார் பெயரையோ உச்சரிக்க தயாராய் உன் இதழ்கள்,
ஊமையாகிப் போனது என் தேசம்.
என் SMS சேமித்து வைத்திருப்பாய்.
எதற்கு என்று கேட்டால்,

உன் நினைவுகள் வரும் போது
எடுத்து படித்து கொள்ள என்பாய்..
இப்போது உன் Outbox' ல் கூட என் SMS இல்லை.
ஏன் இப்போதெல்லாம் என் நியாபகம்
உனக்கு வருவதில்லையா?

நான் அனுப்பிய
சில காதல் மெசேஜ்களையும்,
படங்களையும் சேமித்து வைத்திருந்தாய்.
சில நொடிகள் சந்தோஷப்பட்டது என் மனம்.
பிறகுதான் தெரிந்து கொண்டேன்

யாரோ ஒருவருக்கு Forward செய்ய அதை
எல்லாம் நீ பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாய் என்று..
"மனம் மரணமடைந்தது" என்ற ஷெல்லியின்
வார்த்தையை அனுபவித்து உணர்ந்தேன் அன்று.

வாழ்ந்துகாட்டு! வாழ்ந்துகாட்டு
என்று என் உறவுகள் எனக்கு
ஆறுதல் சொல்கின்றனர்.
இனி நான் எத்தனை கோடிகள் சம்பாதித்தாலும்
நீ எனக்கு கொடுத்த அந்த காதலை
என்னால் சம்பாதிக்க முடியுமா?

என்னதான் நான் பென்ஸ் காரிலே வந்து
உன் முன்னால் இறங்கினாலும்
உன் துணையுடன் உன்னை பார்க்க நேர்கையில்
என்னால் சிரிக்க முடியுமா?
அவளை பார்த்து அதான் காதல்

வேறு யாரை நான் கட்டி அணைத்தாலும்
அந்த அணைப்பில் உன் வெப்பத்தை
என்னால் மறந்துவிட முடியுமா?
எத்தனையோ அழகான கவிதைகளை
என்னை எழுத தூண்டியது நீதான்.

இன்று துயரங்களையும் சுமக்கும் பக்குவத்தை
எனக்கு தந்து இப்படியும் கவிதைகள் எழுதலாம்
என புதிய அனுபவத்தையும் எனக்கு கற்று தந்தாய்.
உனக்கு நன்றி.

என் பெயர் சொல்லி அழைக்க மறந்து,
யாரோ ஒருவர் பெயரை சொல்லி நீ அழைத்தாய்,
அந்த ஒரு நொடியில் லேசாய் உதடு கடித்து
ஒற்றை வார்த்தையில் "சாரி" என்று
சொல்லிவிட்டு போய் விட்டாய்.
நேற்றே நான் இறந்து விட்டேன்.

வேஷம் இல்லாத உண்மையான அன்பு தான் இந்த உலகத்தில் எல்லா நோய்களுக்கும் மருந்து..
அந்த அன்பே பொய்யானால், உலகில் அதை விட கொடிய நோய் வேறு எதுவும் இல்லை.. ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

போலியான அன்பு வைக்காதீங்க
உண்மையா இருங்க எல்லோரிடமும்

Friday, December 28, 2012

என்னை தேடியதுண்டோ உன் கண்கள் ?

உன் கல்லூரி விடும் வேளையில்
ஒராயிரம் பெண்களில்
உன்னைத் தேடும் என் கண்களை போல்
என்னை தேடியதுண்டோ உன் கண்கள் ?

அன்பின் அர்த்தம்

நீ நேசிக்கும் இதயத்தில்
பல ஆண்டுகள் வாழ்வதைவிட....
உன்னை நேசிக்கும் இதயத்தில்
சில நொடிகள் வாழ்ந்து பார்...
அன்பின் அர்த்தம் புரியும் !........

உயிரே...

உயிரே...
என்னை நான் மறக்கும் நிலை வந்தாலும்,
என் நினைவிலிருந்து
ஒரு துளி கூட மறந்திடாத
நினைவுகள் உனது!

கவியின் இரு வரிகள்!!

ஓ... ஓகோ... என்ன விழிகள்...?
இவை விழிகள் அல்ல
என்னை வியக்க வைத்த
கவியின் இரு வரிகள்!!

என் உதடு முணுமுணுத்த வார்த்தைகள்

ஒவ்வொரு தடவையும்
உன்னை பார்க்கும் போது
என் உதடு முணுமுணுத்த வார்த்தைகள்
உன் செவிகளை சென்றடையாமலே
கலைந்து போயின
என்ன செய்வது
புகைப்படங்களுக்குத்தான்
செவிகள் கிடையாதே...

சண்டை போடுவதன் சுகம்!

பிரிந்த போது தான் தெரிகிறது
உன்னுடன் சேர்ந்திருந்து
சண்டை போடுவதன் சுகம்!

ஒரு நிமிடம்

நீ பேச உனக்கு ஆயிரம் உறவுகள் இருக்கும்
அதனால் நீ என்னோடு பேச வேண்டாம் ...
உனக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும்
அதனால் நீ என்னை நினைக்க வேண்டாம் ...

ஆனால் எப்போதாவது எனக்காக ஒரு நிமிடம் ஒதுக்கு
நான் உனக்காக காத்திருக்கிறேன் என்பதை தெரிய படுத்த

நினைவே இல்லை

உன்னை விட 
என்னை யாரும் 
அதிகமாய் நேசிக்கவில்லை 
அதனால் தான் 
உன் பிரிவு 
என்னை வதைக்கின்றது 
என்னை விட 
யாரோ உன்னை 
அதிகமாக நேசிக்கின்றார்கள் 
அதனால் தான்
 உனக்கு என்
 நினைவே இல்லை !!

என் உயிரை பார்வையாலே குடிக்கிறாயே

நீ என்ன.....
எமனின் வேலையைக் குறைக்க
பிரம்மன் திட்டமிட்டு
செதுக்கிய சிலையா??
என் உயிரை பார்வையாலே
குடிக்கிறாயே...

உன் சுவாசம்

காலங்கள் மாறினாலும்
உன் மீது நான் கொண்ட
காதல் மாறாது..
என் முச்சினில் கலந்திருப்பது
உன் சுவாசம்தான்..

நீ ஏற்படுத்திய காயத்தினால்

இன்று என் கண்களிலிருந்து
கண்ணீர் வழிகிறது
நீ ஏற்படுத்திய காயத்தினால்..
மனம் நிலவில்லாத
வானம்போல் இருண்டு
கிடக்கிறது..

அழுவது பிடிக்காது!

உனக்கும் அழுவது
பிடிக்காது!
எனக்கும் அழுவது
பிடிக்காது!
உனக்காக நான் செய்தவைகளிலேயே
மிகவும் கடினமானது
இப்போது
உன் பிரிவிலே
அழாமல் இருப்பது தானடி
எந்தன் உயிர் காதலியே!
உனக்கும் அழுவது
பிடிக்காது!
எனக்கும் அழுவது
பிடிக்காது!
உனக்காக நான் செய்தவைகளிலேயே
மிகவும் கடினமானது
இப்போது
உன் பிரிவிலே
அழாமல் இருப்பது தானடி
எந்தன் உயிர் காதலியே!

அன்பை ரசிக்க

எல்லோரும் தனக்கு ஒரு இதயம் இருக்கிறது என்பதை உணர்வதே ..
யாரோ ஒருவரின் அன்பை ரசிக்க ஆரம்பிக்கும் பொழுதுதான்..!"

தனிமை

தனிமையாக
இருக்கிறாய் என்று
வருத்தப்படாதே..
ஒவ்வொரு நொடியும்
யாராவது உன்னை
நினைத்துக் கொண்டு
இருப்பார்கள்!
இப்பொழுது நான்...!

ஜனனம்..

சிலந்தி வலையில்
மாட்டினால் மரணம்!

சீமாட்டி வளையல்
மாட்டினால் ஜனனம்...! சிலந்தி வலையில்
மாட்டினால் மரணம்!

சீமாட்டி வளையல்
மாட்டினால் ஜனனம்...!!

ஒருநிமிடம் கூட................

உன்னை பிரிந்து
ஒருயுகம் கூட வாழ்வேன்
ஆனால் உன்னை இழந்து
ஒருநிமிடம் கூட
என்னால் வாழமுடியாது

என் காதல் உன்னோடு மட்டுமே

நிலவு தொலை தூரத்தில்
இருந்தாலும்,
அதன் வெளிச்சம் பூமிக்கு மட்டுமே,,,
உன்னை விட்டும் நான்
தொலைவாகி இருந்தாலும்
என் காதல் உன்னோடு மட்டுமே

உன்னை தவிர !!!


நீ பேசிப்போன 
வார்த்தைகள் எல்லாம் 
என்னுடன் தான் இருக்கின்றன 
உன்னை தவிர !!!
!

சுவாசிப்பது எப்படி

நேசிக்க இதயம் கேட்டேன்
சுவாசிக்க இதயம் கொடுத்தாய்
யோசிக்கிறேன் இப்போது ,
நேசித்த இதயம்
என் அருகில் இல்லாமல்
சுவாசிப்பது எப்படி என்று

காதலின் பிரிவை விட வாழ்வில் நரகம் ஏதும் இல்லை

அன்னையின் கருவறை விட தூய்மையானது உலகில் ஏதுவும் இல்லை காதலின் பிரிவை விட வாழ்வில் நரகம் ஏதும் இல்லை

நீ வேறு நான் வேறு

நீ வேறு நான் வேறு வாழ்ந்தாலும்
காற்றோடு சுவாசிக்கும்
உன் சுவாசக்காற்றில் கலந்து விட்டேன்,
இனி நீ என்னை நீங்கி எங்கே வாழ்ந்தாலும்
உன்னோடு வாழ்ந்துகொண்டே இருப்பேன்,
"உன் மூச்சுக்குள்

வாடியது நான்..!!!!

நிலவென்று உன்னைச் சொல்லி
தேய்ந்தது நான்..!!!
மலரென்று உன்னைச் சொல்லி
வாடியது நான்..!!!!

உன் நினைவு இருந்தாலே போதும்

நீ தான் வேண்டும்
என்றேல்லாம் இல்லை
உன் நினைவு இருந்தாலே போதும்
காலமெல்லாம் வாழ்வேன்...♥

விடுமுறை

நிலவுக்கும்
ஒரு நாள் விடுமுறை உண்டு!
ஆனால்,
உன் நினைவுக்கு
என்றும் விடுமுறை இல்லை!!
என் இதயத்திலிருந்து..

நீயும் நானும் நானும் நீயும்

கண்டுகொண்ட நம்மை..
காதலிக்கத் துவங்கினோம்
எனக்கென * நீயும் *
உனக்கென * நானும் *

இனிமே நீயும் நானும் நானும் நீயும் மட்டும் தான் ♥

ழும்பில்லா காயங்கள் நீ!!!!

என்னில் தழும்பில்லா 
காயங்கள் நீ
உன்மேல் வரம்பில்லா 
காதல் நான்!
என்னில் தழும்பில்லா 
காயங்கள் நீ
உன்மேல் வரம்பில்லா 
காதல் நான்!

வலிகள்

இதயம் இருக்கும்வரை வலிகள் இருக்கும்..

காயத்தின் மருந்தாய்

எனது காயத்தின் 
மருந்தாய் விலகி
 நிற்கிறேன் என்கிறாய்....
நீ விலகி இருப்பது தான்
 காயமே என்பதை 
எங்கனம் புரிய வைப்பேன்!

நான்அன்பானவன்

நீ ரசிக்கும் அளவிற்கு நான் அழகனவனாய் இல்லாமல் இருக்கலாம் ஆனால் உன்னை ரசிக்கும் அளவிற்கு நான்அன்பானவன்....♥

என்னுடைய வாழ்கையில் மண்ணள்ளிப் போடுபவள் நீ தான்

நீ கடற்கரையில்
என் தலையில் மண்ணள்ளிப் போட்டு விளையாடும் போதே நினைத்திருக்க வேண்டும்
என்னுடைய வாழ்கையில் மண்ணள்ளிப் போடுபவள்
நீ தான் என்று

மரணம் என்பது

மரணம் என்பது 
 
நீ மரணிக்கும் வரை அல்ல 
நீ நேசிப்பவர் உன்னை மறக்கும் வரை.....!!!
நீ இறந்த பின்னும் அவர்கள் நினைவில்
 நீ இருந்தால் உனக்கு மரணம் இல்லை....!!!
நீ இருக்கும் போதே 
நீ நேசிப்பவர்கள் உன்னை வெறுத்தால் 
நீ இருப்பதில் பலன் ஏதும் இல்லை....!!!

நீ வேண்டும்

என்னுடனே நீ வேண்டும் … 
என்றென்றுமே நீ வேண்டும் …
தோளுடனே.. தோளுடனே , 
சாய்ந்து கொண்டே ,
நீ வேண்டும் …
உயிராக , உயிராக , 
துடித்துக்கொண்டே , 
நீ வேண்டும் …
நீ வேண்டும் …நீ வேண்டும் …நீ ….. வேண்டும் …..

தாயைக்கண்ட பிள்ளை

யாரோ 
உன்
பெயரை
சொன்னாலும்
தாயைக்கண்ட 
பிள்ளை
 போல் 
என் 
உள்ளம் 
துள்ளி 
குதிப்பதை
 நீ 
அறிவாயா

உயிருள்ள வரை

உயிருள்ள வரை என்னால்
நிறுத்த முடியாத விஷயங்கள் இரண்டு உண்டு
ஒன்று காற்றை சுவாசிப்பது
இரண்டு உன்னை நேசிப்பது !!!

மிச்சமிக்ருகிறது

உயிர் மட்டும் இன்னும் மிச்சமிக்ருகிறது
ஒவ்வொரு நொடியும் உன் காதலை எதிர் பார்த்துக்கொண்டு !!!
!!!

ஒரு உண்மை

ஒரு உண்மையான அன்பை எவ்வளவுதான்
காயப் படுத்தினாலும் அது மறுபடியும் உன்னை இன்னும் அதிகமாக நேசிக்குமே தவிர உன்னை விட்டு விலகிச் செல்லாது....!!!

எதுவும் இல்லை

நினைப்பதற்கு பல நினைவுகள்
இருந்தபோதும் உன் நினைவை விட
இனிமையான நினைவுகள்
எதுவும் இல்லை

தொலைந்து போனவன்

எப்போதோ தொலைந்து போனவன் நான்
இப்போதும் உன் பாதையில் நடந்து கொண்டிருக்கிறேன்
விழிகளில் நீரை நீ தந்தாலும்....
உன் எண்ணங்கள் மட்டுமே மிச்சமாய் இருக்கிறது எனக்குள்...

உன்னை நேசிக்க மட்டும்

உன்னை நேசிக்க ஆரம்பித்த
நிமிடம் எனக்கு தெரியாது..
ஆனால் இனிமேல் வாழப்போகும்
நொடிகள் அனைத்தும்
உன்னை நேசிக்க
மட்டும் தான்
என்பது தெரியும்!

கவிதைகள்

உலகத்து உண்மைகளை உரக்கச் சொல்லுவது அறிவியல் ... உணர்ந்து சொல்லுவது கவிதைகள்~~~♥ ♥ ♥ ~~~

Thursday, December 27, 2012

கசந்த காதலின் நினைவு....!

வாய் கசப்பு
வேண்டாதிடத்தே
வளுத்து திணிக்கும் மருந்தாய்
வாட்டும் நோய்...! -அதனினொத்தது

நின் கசந்த காதலின்
நினைவும்....!

என் அந்தாதியானவளே,,,

என் அந்தாதியானவளே,,,

காற்றுப்பட்டு லேசாய் துளிர்விட்டெழும் இலைகளை
போல் என் குரல் கேட்கும் தருணம் அவள் அழகாய்
துயில் கொள்கிறாள்

குழம்பி குழம்பி குழம்பிக்கொண்டு வரும் அவளின்
குழந்தைத்தனம் என்னிடத்தில் ஏதோ சொல்ல துடிக்க
என் கட்டியணைப்பில் இருந்த தலையணையோ தடுமாறி
கீழே விழ என் காலை கனவும் கலைகிறது,,,அவள்
எங்கேயோ ,,,,நானிங்கே

பாலைத்தென்றலில் சுழலும் மெல்லிய மணர்காற்றும்
என் விழிகளில் தூரத் தெரிகின்ற அவளின் கானல்
உருவத்திற்கு ஒரு போர்வையாய் காட்சியளிக்கிறது

மூடிய திரைகளில் ஒரு மூடு பனி யாத்திரை
என் நிலவவளோ அதற்கப்பால் மெல்ல உறங்கி
மறைகிறாள்,,,பரவலாய் கிடக்கும் மூடுபனிகளை
விலக்குவதாய் நினைத்து என் விதியை நானே
ஏமாற்றுகிறேன்,,இதற்கு பெயர்தான் பைத்தியக்
காரத்தனமோ,,,???

மின்சாரமணி போல் பற்றவைத்த அனல் தெறிக்கும்
என் விளையாட்டு அனர்த்தத்துளிகள் அவள் மனதை
காயப்படுத்தியதோ என்னவோ,,,

இன்று என்னை வெறுத்தவளாய் அவள் புதைத்த அழகிய
நினைவுகளை பிடிவாதமாக என்னிலிருந்து கொய்து
சென்றுவிட்டாள்,,

அன்று பேசிய வார்த்தைகளை மறந்த என் இதயமோ
இன்றும் ஒரு தண்ணீர் நிரம்பிய வாளியாய்,,அவளின்
நினைவோட்டங்களை நிறுத்திவிடமுடியாமல் ஏனோ
தவித்து துடிக்கிறது

thiruvennai nallur


thiruvennai nallur


முற்றுப்புள்ளி

தோல்வியடையும் போது
துவண்டு விடாதே
தோல்வி ஒன்றும்
தொடர்கதை அல்ல;
தொடர்கதைக்கும் கூட
முற்றுப்புள்ளி உண்டு

முற்றுப்புள்ளி

தோல்வியடையும் போது
துவண்டு விடாதே
தோல்வி ஒன்றும்
தொடர்கதை அல்ல;
தொடர்கதைக்கும் கூட
முற்றுப்புள்ளி உண்டு

இதுதான் காதலா??

அன்று காதலை சொன்ன போது
நீ என்ன பைத்தியமா என்றவள்
கோவத்துடன்-இன்று
என் மேல் பைத்தியம் என்கிறாள்
வெட்கத்துடன்!!!

இதுதான் காதலா??

அன்று பைத்தியமா என்றபோது
உண்டான காயத்துக்கு
இன்று லூசு என்று கொஞ்சி
மருந்திட்டு ஆற்றுகிறாள் !!!

பைத்தியம்
லூசு
ஒரே அர்த்தம்
விளைவுகள்???



அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்!!!!!!!!!!!!!

தாய்


தன் வயிற்றில் தங்கிய என்னை
பத்துமாதம் பக்குவமாய் பத்தியமிருந்து
தன் பாதி உயிர் கொன்று
மீதி உயிரில் எனை ஈன்று
என் முகம் பார்த்து
மகிழ்ச்சியில் மயங்கியவள்
விழிக்கையில்......
புதிதாய் பிறக்கிறாள் அவளும்!!
உள்ளத்தில் கொண்டவனை தான்கி
உடலுக்குள் என்னுயிர் தான்கி
உலகுக்கு அறிமுகம் செய்து
இரத்தத்தை பாலாக்கி - என்
பசிதீர்த்து பாசத்தில்
பக்குவமாய் பகுத்தரிவூட்டி
பாசத்தை பங்குபோட்டவள்
அப்பா-அத்தை-மாமா என்றெல்லாம்!!
சந்திரனை வர்ணிக்காத கவிஞனில்லை
அதற்க்கு ஒளிதரும் உதயத்தை
கவனிப்பதில்லை எவரும்
ஈன்ற தாயும் இப்படித்தான்!!
கண்டவளை கொண்டு
பெத்தவளை பிரித்து
பாசத்தை நசுக்கி
வினை அறுக்கிறான் மானிடன்........

என்னைக்கேட்ட கேள்விகள்...


நிழலே நீதான் - என்
நினைவோ?
விடையே நீதான் - என்
கனவோ?
கனவே நீதான் - என்
வாழ்வோ?
வாழ்வே நீதான் - என்
புதிரோ?
பிழையே நீதான் - என்
உருவோ?
உருவே நீதான் - என்
சுமையோ?
சுமையே நீதான் - என்
சவமோ?
சவமே நீதான் - என்
சுதந்திரமோ?.......

ஈன்ற மகன்


தேரில் ஏற்றி
ஊர்சுற்றி
ஊர்மெச்ச தூக்கிச் சென்றான்....
ஈன்ற மகன் - பாதகி
பசி பசி என்றல்லவா
இறந்துப்போனாள்....

பணம்


பணம் பணம்
பாசத்தை பறித்து
மனதை மடித்து
உரவை உடைத்து
நேசத்தைக் கொன்று
நேர்மையை நொருக்கி
நேர்வழியை கோணலாக்கி
குருடனை போல் அழையவைக்கும்
ஓர் குருட்டு மூலக்கூரு

நீ

என் நினைவின் திரட்டல்
என் எண்ணத்தின் உருவம்
என் தேடலின் முடிவு
என் தேவையின் சங்கமம்
என் தாயின் சாயல்
என் தந்தையின் பிரதி
என் குழந்தையின் போட்டி
என் காதலின் அந்தாதி
என் உயிரின் முழுமை
என் மீதி வாழ்நாள் ........

நீ

என்ன ஆகப் போகிறது

இருந்து என்ன
ஆகப் போகிறது
செத்துத் தொலைக்கலாம்..........
செத்து என்ன ஆகப் போகிறது
இருந்து தொலைக்கலாம்.........

அவளின் பதிலுக்காக

இதயத்தின் வலியால்
கண்களிலே கண்ணீர்
காரணம் அறியேன்
இதுதான் காதலின் வலியோ
துடைத்து பார்த்தேன் கண்களில்
கண்ணீர் விடை தெரியாமல்
எங்கே போகிறது
என்னவ
ளின் பாதம் நோக்கியே
காத்திருக்கிறேன் அவ
ளின்
பதிலுக்காக

பெண்


அழகான பெண்,

கண்களுக்கு 
ஆனந்தமளிக்கிறாள்.

குணமான பெண் 
இதயத்திற்கு 
குதூகலமளிக்கிறாள். 

முதலாமவள் 
ஒரு ஆபரணம், 
இரண்டாமவள் 
ஒரு புதையல்

நட்பு...


உள்ளத்தில்
உன்னை வைத்து...
உயிரில் காதலை
வைப்பது காதல்...

ஆண்கள் பழகினால்
தோழர்கள்...
பெண்கள் பழகினால்
தோழிகள்...
ஆணும் பெண்ணும்
பழகினால் நண்பர்கள்...
நட்புக்கு தேவை இல்லை
ஆண் பெண் வித்தியாசம்...

பார்க்கும் விழிகளுக்கு
வேண்டும்...
நட்பு காதல் வித்தியாசம்.....

திருப்பிக் கொடுத்தேன்.

இரண்டு முத்தங்கள் கொடுத்து
இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.

" தத்துவம் "


நீ மெல்ல மெல்ல
உயரும் போது நீ யார் என்று
உன் நண்பர்கள் அறிவார்கள் .....!!!
ஆனால் ....
நீ கீழே போகும் போது உண்மையான
நண்பர்கள் யார் என்று நீ அறிவாய் ....!!!

உனக்கு துன்பம் வந்தால் அதை
உன் நண்பனிடம் சொல்லாதே ......!!!
அந்த துன்பதிடம் சொல் ,....
எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான் என்று ...!!!

அன்பை வெளிபடுத்த யோசிக்காதே ....!!!!!
கோபத்தை வெளிபடுத்துமுன் யோசிக்க
மறந்துவிடாதே ......!!!!!

Computer காதலனின் காதல்

எனது காதலை ஒருமுறை
"test" பண்ண மாட்டாயா?
இதயத்தை "cut" செய்தாயே!
"paste" செய்ய மாட்டாயா?

காவியக் காதலனின் முடிவை
"repeat" செய்யட்டுமா?
"ctrl+alt+delete" அடித்து
அப்பீட் ஆகட்டுமா?

ஆயிரம் கண்கள் மொய்த்தாலும்
அடியேன் கண்களை "pick" செய்வாயா?
என் இதயத்தின் "icon" மேலே
ஒரு முறை "double-click" செய்வாயா?

உன் இதயத்தில் காதலை
"boot" செய்தபோதெல்லாம்
வாரி வழங்குகிறாயே
"warning message"

சந்திக்கும்போதெல்லாம்
என் இதயத்தில் "sound"
ஆனாலும் உன் கண்சொல்வதோ
"your file not found!"

உனக்காக இதயத்தை
"format" செய்து வைத்திருக்கிறேன்.
ஆனால் உன் இதயத்திலோ
"no more disk space."

வேதனை "SPAM" நிரம்பி
வழிகிறது
எனது இதயமெனும் "mailbox"

உன் மனங்கவர்ந்த "module" எழுதி
எனது "OS" ஓய்ந்து விட்டதே!
"Debug" செய்ய வருவாயா?
நான் "wait" செய்கிறேன்!

உன் முகத்திலேன் எப்போதும்
"read only" அறிவிப்பு?
"time out" ஆவது போல் எனக்குத் தவிப்பு!

உன் "Ip address" வேண்டாம்
உன் "password" வேண்டாம்
இதயத்தில் எனக்காய் ஒரு
"folder" ஒதுக்க மாட்டாயா?

பெண்கள் காதலிப்பது???????

ஆண்கள் காதலிப்பது எப்படியாவது
நண்பர்கள் சேர்த்து வைப்பார்கள் என்று .....

பெண்கள் காதலிப்பது எப்படியாவது
பெற்றோர் பிரித்து வடுவார்கள் என்று .....

நான் உனக்கு எத்தனாவது விக்கெட்

பெண்ணே!
உனது
பவுலிங் பார்வையில்
நான் கிளீன் போல்டு
ஆகி விட்டேன்.

சொல்லு கண்ணே!
நான் உனக்கு
எத்தனாவது விக்கெட்

எவ்வளவு தேடியும் நீ மட்டும் கிடைக்கவில்லை

உன்னையே நினைத்திருந்து
உனக்காக வாழ்ந்திருந்து
நித்தம் காலை கண் விழிக்கையில்
விழிகள் உன்னை தேடிடுமே
தூங்கச்செல்லும் முன்பே
கைகள் உன்னை தழுவிடுமே
உன் வாயோடு என் உதடு வைத்து
மணிக்கணக்கில் சுவைத்திருப்பேன்
இன்று மட்டும் என்ன வந்தது....
எவ்வளவு தேடியும் நீ மட்டும்
கிடைக்கவில்லை..................
-
-
எவன்டா என் பீர் பாட்டில தூக்கி ஒளிச்சுவச்சது?!!

(இது ஒரு உண்மை நிகழ்வு இந்த கவிதையை என் அன்னைக்கு சமர்ப்பிக்கிறேன் .......................)

கடிதம் சமர்பிக்க வந்த தபால்காரரிடம்
என் முகவரி சொன்ன என் ஊர் மக்கள் இதோ ..........

ஒ! வாழத் தெரியாதவன் வீடா ?
அது நாலாவது வீதியில் இருக்கிறது என்றார் முதியவர் ஒருவர் ............

வீதியில் குழம்ப மீண்டும்
ஒருவரிடம் வினவினார் தபால்காரர்
என் முகவரியைக் காட்டி ............

அதற்க்கு அவர் அளித்த பதில்
எதற்கும் ஆகாதவன் வீடு
எதிர் வீதியில் உள்ளது என்றார் !

எதிர் சந்து வீதி எதுவென்று தெரியாமல்
எதிர்பட்ட நபரிடம் மீண்டும் கேட்டார் தபால்காரர்
என் விலாசம் எதுவென்று ?

ஏமாறப் பிறந்தவன் வீடு
இந்த வீதியில் இல்லையே! என்று
எதார்த்தமாக சொல்லிச் சென்றார் !

சரியான வீதி தெரியாமல் சோர்ந்து போன தபால்காரர் ........
சேர்ந்து வந்த இருவரிடம் மீண்டும் கேட்டார் என் முகவரியை காட்டி ........

அதற்க்கு அவர்கள் இருவரும்
சேர்ந்து சொன்ன பதில்
மூளை இல்லாதவன் வீடு
அடுத்த மூலையில் உள்ளதென்று .........

இப்படியாக .........

பிழைக்கத்தெரியாதவன் வீடு .........
படிக்கத்தேரியாதவன் வீடு ............
ராசியில்லாதவன் வீடு ..............

ரசனை இல்லாதவன் வீடு .............
ரசிக்கத்தெரியாதவன் வீடு .................
சிரிக்கத்தேரியாதவன் வீடு ...................

வீணாய் போனவன் வீடு ...............
விளங்காமல் போனவன் வீடு ............
வேலைக்குப் போகாதவன் வீடு ............

என்று பலரும் என் முகவரி சொல்ல
இறுதியாக வந்து சேர்ந்தார்
ஒரு வீட்டிற்கு ...........

அங்கு அமர்திருந்த பெண்மணியிடம்
இறுதியாக என் முகவரி கேட்க
அவள் உதிர்த்த வார்த்தைகள் இதோ!

அப்பா! தங்கம் ! உன்னப் பார்க்க
தபால்காரர் வந்திருக்காருடா
பவுனு! என்றாள்!

ஆச்சர்யமான அரசு ஊழியர்
அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்து
நீங்க ராஜேஷ்க்கு என்ன வேண்டும் என்றார்?

அதற்க்கு பாசத்துடன் அவள் சொன்ன பதில் !
அவன் என் மகன் தானுங்க
என்று!

(வியர்வை மழையில் நனைந்திருந்த அவருக்கு
ஒரு குவளை மோர் கொடுத்தவாறே .........)

தபால்காரரின் தொண்டையின் வறட்சி
ஒரு குவளை மோரால் விலகியது

ஒரு தாயின் பாசம் எப்படிஇருக்கும் என்று
என் அம்மா கூறிய வார்த்தை
அவருக்கு விளக்கியது !!!!!!!!!!!!!!!!

(இது ஒரு உண்மை நிகழ்வு இந்த கவிதையை என்
அன்னைக்கு சமர்ப்பிக்கிறேன் .......................)

பள்ளிக்கூடம்


ஒரு காலத்தில்
சந்தோசப்பறவைகளும்
நட்பு பறவைகளும்
குடியிருந்த
நினைவுக்கூடு.

மதிப்பு இல்லாதவை!


அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது.

பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை!

நண்பர்கள்


நண்பர்கள் எனும் சொல்
எழுதுகோல் கொண்டு
எழுதவேண்டிய சொற்கள் அல்ல
உளி கொண்டு செதுக்க வேண்டிய சொற்கள்..
காகிதத்தில் எழுதி கசக்க வேண்டிய
சொற்கள் அல்ல
கல்லறை செல்லும் வரை
நினைவில் சுமக்க வேண்டிய சொற்கள் .

படிக்கட்டு பயணம் !


படிக்கட்டு பயணம் - என்றும்
பரிதாப மரணம் !

நொடிப்பொழுதில் முடியும் - உன்
வாழ்கை பயணம் !

உன் வீட்டில் குடும்பம் - இன்னும்
உன்னை நம்பி சரணம் !

புரிந்தது கொள் இது திண்ணம்
வேண்டாம் பரிதாப எண்ணம் !

படிக்கட்டு பயணம் தவிர் !
பல்லாண்டு வாழ்ந்து நிமிர் !!

பெண்ணின் அழகு !!!!


மதியழகா , மலரழகா ,மங்கையவள் முகமழகா
நதியழகா கொடியழகா நங்கையவள் நடையழகா
குயில் அழகா , குழலழகா , கோதையவள் குரலழகா
கயல் அழகா , கணை அழகா , கன்னியவள் கண்ணழகா
நதியழகே , மதியழகே , மானவளோ பேரழகே !!!!!!!

நினைவுக் குதிரைக்கு ஓய்வில்லை


உன் பார்வைக்காக
காலங்கள் பல காத்திருந்தேன்
உன் பதிலுக்காக
யுகங்கள் பல கடந்தேன்

உன் சம்மதம் வாங்க
ஜென்மங்கள் பல எடுத்தேன்
பரிசாக உன் புன்னகை மட்டும்
எனக்கு கொடுத்தாய்

போதுமடி அது எனக்கு
உன் பிரிவென்பது பெரிதில்லை
என்னில் உன் நினைவுகள்
ஓய்வில்லா குதிரை போல

வருஷங்கள் பல முடியலாம்
பாதைகள் மாறி போகலாம்
உன் நினைவுகள் பத்திரமாய்
என் இதய அறையில்

உனக்கான வாழ்க்கை வேறு
எனக்கான வாழ்க்கை வேறு
என்று இரயில் பாதையாய்
பிரிந்த போதிலும்

நம் நினைவுகளின் பாதை
ஓரே தொடர்கதையாய்
எல்லை இல்லா அண்டத்தில்
என் படைப்புகள் போல

சேர்ந்து வாழ்ந்த நாட்களில்
சொன்னாய் வளர்பிறை என்று
சேர்ந்து வாழும் நாட்களுக்கு
எழுதினாய் முடிவுரை இன்று

யாரோடு நான் வாழ்ந்தாலும்
யாருக்காக நீ வாழ்ந்தாலும்
என் ஜீவன் நீதானடி
உன் ஆவி நான்தானடி

பூபாலம் இசைக்க
புது பூக்கள் பூக்க
மணவாழ்க்கை இனிக்க
மனசார வாழ்த்தும்......

முழுதும் காதல்!

உன்னில் பாதியாய்
என்னில் மீதியாய்
நம்மில்
முழுதும் காதல்!

காதலிப்பதற்கு
நீ இருக்கிறாய்
என்ற காரணமே
போதுமாயிருக்கிறது
நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு!

கண்ணீர் துளீகள்


இறப்பதற்குள் ஒரு முறை,
உன் சட்டை வாசம் நூகர வேண்டும்
உன் கட்டை விரலில் என் பற்களை பதிக்க வேண்டும்
உன் நிழலாவது என் தனிமையை உணர வேண்டும்
உன் கனவாது என் வருகைக்கு வழி விட வேண்டும்
உயிரே......................
உன் இதயம் ஒரு முறையாவது என் கண்ணீரை உணர வேண்டும்

கண்ணீர் துளீகள்


இறப்பதற்குள் ஒரு முறை,
உன் சட்டை வாசம் நூகர வேண்டும்
உன் கட்டை விரலில் என் பற்களை பதிக்க வேண்டும்
உன் நிழலாவது என் தனிமையை உணர வேண்டும்
உன் கனவாது என் வருகைக்கு வழி விட வேண்டும்
உயிரே......................
உன் இதயம் ஒரு முறையாவது என் கண்ணீரை உணர வேண்டும்

கண்ணீர் துளீகள்


இறப்பதற்குள் ஒரு முறை,
உன் சட்டை வாசம் நூகர வேண்டும்
உன் கட்டை விரலில் என் பற்களை பதிக்க வேண்டும்
உன் நிழலாவது என் தனிமையை உணர வேண்டும்
உன் கனவாது என் வருகைக்கு வழி விட வேண்டும்
உயிரே......................
உன் இதயம் ஒரு முறையாவது என் கண்ணீரை உணர வேண்டும்