Saturday, August 29, 2015

காதலிக்கும்முன்..

எட்டு மணிவரை தூக்கம்,
எடுப்பு சாப்பாடு,
குளிக்காத நாட்கள்,
shave செய்யாத முகம்,
எந்தக் கவலையும் இல்லாத மனம்,
ஜஸ்ட் பாஸ் கேஸ்,
தண்ணியாக செலவழித்த பணம்,
கனவில் ஐஸ்வர்யா ராய்,
பெண்கள் என்றால் அலட்சியம்,
அளவில்லாத வெட்டி பேச்சு,
ஏடாகூடா உடை,
கலைந்த தலைமுடி,
மூக்கின் மேல் கோவம்,
சண்டே சினிமா,
காதல் காட்சியா ரிமோட் எங்கே?,
எல்லாவற்றிற்க்கும் மேல் நானாகிய
நான்,
இவைதான் என் அடையாளங்கள் !

காதலித்தபின் ...

உறங்காத இரவுகள் (என் தலையணை
சொல்லும்),
பாதி நாட்கள் விரதம் (நீ வேண்டி),
இருமுறை குளியல் (உன் அருகே
வர),
தினமும் shaving (உன் கலரை மேட்ச்
செய்ய),
டைடானிக்கே மூழ்கிய மனம் (உன்
நினைவில்),
படிப்பில் கவனம் (உனக்காக
சம்பாதிக்க),
கஞ்சனாக மாறினேன் (உனக்கு கால்
பண்ண),
தூங்கினால்தானே கனவு வர
(அதிலும் நீ),
பெண்கள் என் சகோதரிகள் (உன்னை
தவிர),
ஊமையாகிய என் வாய் (நீ
பேசாதபோது),
கவனமான உடுப்பு (உன்னோடு
இருக்க),
கோவம் என்றால்? (புல்லைத்
தின்னும் புலி),
70mmல் உன் முகம் (சினிமா எதற்கு),
காதல் காட்சியா வால்யூம் ஏத்து
(திரையில் நாம்),
உன்னில் பாதியாகிய நான்,
யார் என்னை மாற்றியது ???

Friday, August 28, 2015

காலத்தை கடந்த காதல்

*கரடு முரடான என்
வாழ்க்கைக்கு காரணம் தேடி
நடந்துபோனேன்.
உன்னை...
கண்டவுடன் அனைத்தும்
மறந்துபோனேன்.
-------------------------------------------
-------------------
யார் நீ!
உறங்க மறுத்த
என் விழிகளுக்கு
விருந்து படைத்தவளே.
எதிர்காலம் தேடும் இந்த பித்தனை
சித்தன் ஆக்கியது உன் தரிசனம்.
இயற்கை வரைந்த ஓவியமே
இதோ உனக்காக நன் எழுதும்
காவியம்!
-------------------------------------------
---------------------------
* சிக்கி முக்கி கற்களில்
நெருப்பை கண்டவன் கூட
திக்குமுக்காடி போவான் - உன்
விழிகளின் வெப்பத்தை பார்க்கும்
போது.
-------------------------------------------
---------------------------
* சக்கரத்தின் கண்டுபிடிப்பு
நாகரிகத்தின் தொடக்கம்
உன் தரிசனம் இல்லா நாட்கள்
எனக்கு வேதனையின்முடக்கம்.
-------------------------------------------
---------------------------
* உலோகங்களை
கண்டுபிடித்தவனும்
தோற்றுத்தான் போவன்- உன்
உள்மன ஆயத்தை காணமுடியாமல்.
செம்பு கண்டுபிடித்தவனுக்கு
உன் மீது கோபம் - உன்
அன்பு  கிடைக்கவில்லைஎன்று,
-------------------------------------------
--------------------------
* எத்தனையோ
காதல்கள் பள்ளத்தில்
இருந்தும்.
என்றும் - உன் காதல்
நிலைத்திருக்கும் என் உள்ளத்தில் .
-------------------------------------------
---------------------------
* விலங்குகளை
எதிர்த்து  வேட்டையாடினேன்
  இயற்கையோடும் போராடினேன்
இப்படி ஐம் பூதங்களுக்கும்
அடங்காத
என் மனம்
உன் ஐம் புலன்களைகண்டு
அடங்கி போகிறது.
-------------------------------------------
----------------------------
* நெருப்பில் வெந்து
நீரில் நனைந்து
வானில் பறந்து
காற்றில் என் உயீர் கலந்து
போகும்முன்
உன் கண்களில் விழுந்து
செவிழில் நுழைந்து
மெழ்யில் கலந்து -
வாழ் மொழியில் வாதடியாவது
உன் இதயத்தில் இடம்
பிடித்துவிடவேடவேண்டும் .
-------------------------------------------
---------------------------------------
* காட்டை கடந்து
நாட்டிற்கு வந்தேன் - இது
நாகரிகத்தின்வளர்ச்சி -
இவையாவும்
உன்னால் ஏற்பட்ட சூச்சி.
மன்னர்களின் பேத்தியியே
ஓரபார்வையால்  என்னை
சாய்த்தாயே!
நெப்போலியனுக்கு  நெருங்கிய
சொந்தமே
நீ இல்லாமல்  எனக்கு கிடையாது
வேறு பந்தமே!
-------------------------------------------
-----------------------------------
  *அர்ஜுனனின் வில்வித்தையும்
அனுமனின் சொல்வித்தையும்
தாண்டவம் ஆடும் - உன்
பேச்சிலும் வீச்சிலும்.
-------------------------------------------
-------------
* சங்ககால மன்னரான
சேர, சோழ, பாண்டியனின்
கண்ணில் நீ பட்டிருந்தால்
ஆங்காங்கே
செதுக்கபட்டிருப்பாய் சிற்பமாக.
-------------------------------------------
----------------
* என்னை ஆள பிறந்தவளே
கலப்பிரர்களின் புலம்பலை
கேட்டாய,
   உன்னை காணாத நாட்கள் தான்
வரலாற்றில் இருண்டகாலமாம் .
பல்லவர்களின் படைப்பிற்கு -
மகாபலிபுரம்
   உன் நினைவால் துடிக்கும் - என்
இதயத்திற்கு என்றும் நீ
தூங்காநகரம்.
-------------------------------------------
-----------------
* நன் உன் மீது கொண்ட காதலுக்கு
சாட்சி !
சோழ மன்னர்களின் ஆட்சி,
ஆயிரம் ஆண்டு கடந்தும் - அவன்
புகழ்
   நீங்காமல் நிலைக்கிறது,
இறவுகள் பல கடந்தும் என்
மனம்  தூங்காமல் தவிக்கிறது!
-------------------------------------------
-----------------
* கரிகாலன் கட்டிய
  கல்லணைக்கும் ஒரு காரணம்
உண்டு ,
  அது உன் இதயத்தில் இருந்து
எடுக்கப்பட்ட சிறு
இரும்புத்துண்டு
மன்னர்களின் ஆட்சி கூட மாறியது
என் மனதில் பதிந்த
உன் காட்சி மட்டும் மாறவில்லை !
-------------------------------------------
------------------
* இந்தியர்களையே
  ஏங்கவைத்திருக்கவேண்டும்
  உன் இடை!
அதை கண்டுகொள்ளதான்
அடிக்கடி  வந்துபோனதோ
ஆங்கிலேயரின்படை !
-------------------------------------------
-------------------
*காதலனை தேர்ந்தெடுக்க
நீ நடத்திய  நாடகம் தான்
முதல் உலகப்போரா !
ஆங்கிலேயரிடம்  அகிம்சை
முறையில் பெறப்பட்டதே
சுதந்திரம்
உன்னை கண்ட நாள் முதல்
அது பறிபோனதே நிரந்தரம் !
-------------------------------------------
-------------------
* அறிவியலின் அதிசயமா நீ
புவிஈர்ப்பு   விசையை கண்ட
நீயூட்டனுக்குள்ளும்  மாற்றத்தை
ஏற்படுத்தி இருக்கும்  உன்
விழிஈர்புவிசை !
உன் இதயத்தை
நன்கு ஆராய்ந்துவிட்டுத்தான்
அணுவை பிளக்க முடியாது
என்றான  ரூதர்ட்போர்டு.
-------------------------------------------
------------------
*  உன்  கோபத்திற்கு
   காரணம் தேடித்தான் எலக்ட்ரானை
கண்டுபுடித்தானா தாம்சங்
நீல நிற கடலுக்கு
காரணம் சொன்னது ராமன்
விளைவு
  உன் நிழலை கூட
சுமந்து  வருகிறது எந்தன்
நினைவு
-------------------------------------------
-----------------
* E=MC 2 இது
ஐயன்ஸ்டீன் பார்முலா
எதிரியும் மயங்கிபோவது
உன் கருவிழி பார்வையினாலா
அன்பு கட்டும் பொது
அணுவைபோல்
ஒடுங்கி  போகும் நீ
கோபம் கொள்ளும்போது ஏன்
நீயூட்டனின் மூன்றாம்
விதியாகிராய்
-------------------------------------------
-----------------
* அறிவியலின் அடுத்த கட்டமே !
என் இறுதி மூட்சும் உன்னை
சுற்றுமே
   உன்மீது கொண்ட மோகம் தான்
கருங்கூந்தலை கடன் வாங்கி
கொண்டதா  மேகம்
  உதட்டு சாயத்தோடு நி துப்பிய
எச்சிலின் எதிரொலிதான்
மேகத்தின் மீது வரையப்பட்ட
வானவில்லா
-------------------------------------------
------------------
* ராணுவ ரகசியமாய் இருக்கும்
உன் மௌனத்தை ஆராயத்தான்
அனுப்பப்பட்டதா ஆரியப்பட்டா !
இன்று உலகையே
அட்ச்சுறுத்தும்
புரமோஷ்  ஏவுகனை
  உன் ஒட்டுமொத்த கோபத்தின்
வினை !
அதனால்தான்  உன்னுடன் நேரில்
பேச அச்சப்பட்டு கைபேசியை
கண்டுபிடித்தானோ என்னவோ !
-------------------------------------------
------------
* உலகையே ஒன்றிணைக்கும்
இணையதளமா - உன் இதயகளம்
பார்த்தவுடன் அனைவரும்
பதியவைக்கின்றனர் தன் காதலை !
சூரியனும் நிலவும்
சந்திக்கும் அன்று சூரியகிரகணம்
என்றாவது உன் இதயம் என்னை பற்றி
சிந்திக்குமே அன்றே நம்
திருமணம்.
-------------------------------------------
-------------
*கற்காலத்தில்   இருந்து
நான் கடந்து வந்த பாதையை
பார்த்தல் -  நீ தான் என்
எதிர்காலம் என்று தெளிவாக
தெரியும்
இது உனக்கும் ஓர் நாள் புரியும்.
-------------------------------------------
---------
* காலங்கள் பல கடந்தும்
இன்னும் கானல் நீராகதான்
உன்னிடத்தில் என் காதல்
நானும் ஒரு கஜினிமுகமதுதான்
உன் இதயம் எனும்
கோட்டையை அடைய பலமுறை
படையெடுத்தும்
தோற்றுபோனேன்.
-------------------------------------------
-----------
* என்னவோ .....
வரலாறு உன்னை
உற்றுபார்க்கிறது
அனேகமாக அடுத்த அமைதிக்கான
நோபல்பரிசு உனக்குத்தான்.
காதலுடன

Thursday, August 27, 2015

அம்மா

அம்மா.!!!

அம்மா.!!
நான் சுவாசிக்க
கற்றுகொடுத்தவள்..!!
எனக்கு சுவாசம் தந்தவள்..!!
பெண்மையை அலங்கரித்தவள்..!!
அன்புக்கு அடையாளம் தந்தவள்..!!
அர்த்தமற்ற வாழ்க்கைக்கு அர்த்தம்
தந்தவள்..!!
புரியாத உலகில் வாழ
கற்றுக்கொடுத்தவள்..!!
உள்ளம் இனிக்கும் உறவுகளை
என்னை சுற்றி படைத்தவள்...!!
உதிரத்தை ஒன்றாக்கி உருவம்
கொடுத்தவள்..!!
இந்த உலகத்தில் எத்தனையோ
தெய்வங்கள் இருந்தாலும்,
என் முதல் தெய்வம் நீ..!!
என் சுவாசமே நீதான் அம்மா..!!

அம்மா

அம்மா.!!!

அம்மா.!!
நான் சுவாசிக்க
கற்றுகொடுத்தவள்..!!
எனக்கு சுவாசம் தந்தவள்..!!
பெண்மையை அலங்கரித்தவள்..!!
அன்புக்கு அடையாளம் தந்தவள்..!!
அர்த்தமற்ற வாழ்க்கைக்கு அர்த்தம்
தந்தவள்..!!
புரியாத உலகில் வாழ
கற்றுக்கொடுத்தவள்..!!
உள்ளம் இனிக்கும் உறவுகளை
என்னை சுற்றி படைத்தவள்...!!
உதிரத்தை ஒன்றாக்கி உருவம்
கொடுத்தவள்..!!
இந்த உலகத்தில் எத்தனையோ
தெய்வங்கள் இருந்தாலும்,
என் முதல் தெய்வம் நீ..!!
என் சுவாசமே நீதான் அம்மா..!!

Friday, August 7, 2015

வாசகி!! நீ வா சகி!! -

உடலுக்குள் தினம் நூறு
கோளாறுகள் நடக்குதடி..
மனதுக்குள் தினம் மர்ம
பூகம்பங்கள் வெடிக்குதடி..
இரண்டுக்கும் இடைநடுவில்
என்னுயிரும் மருளுதடி..

உன்பெயரை ஓதிக்கொண்டே
உருண்டையொன்றும் உருளுதடி..
குணவதியே!! குலமகளே!!
உன் வண்ணம் மயக்குதடி..
வனமயிலே!! வா வெளியே
என் நெஞ்சம் தவிக்குதடி..

பகலவனின் சுடுகணையும்
பாவி மெய்யில் குளிருதடி...
பகலிரவு உன் நினைவு
பன்மடங்காய் மிளிருதடி..

கருங்குயிலே!! நின்குரல்தான்
காதெல்லாம் கேட்குதடி..
கானகத்துச் செடிகளெல்லாம்
கனிவாய் கேட்டு பூக்குதடி..

அருங்கவிகள் ஆயிரம்தான்
உனக்காக தோற்றுமடி...
வருங்கவிகள் உன் எழிலை
காவியத்தில் ஏற்றுமடி..

அற்புதமே!! நின் பொற்பதமே-இந்த
அற்பனுக்கு சொர்க்கமடி...-உன்னால்
அப்பனுக்கும் எனக்கும்தான்
அடிக்கடி தர்க்கமடி...

கற்பகமே!! கடுகதியில்
என்னருகில் வந்திடடி...-பல
விற்பனங்கள் செய்திடுவேன்-உன்
சம்மதத்தை தந்திடடி...

Saturday, July 25, 2015

ஜூலை ஐந்தின் முத்துக்களே

சிறு கூட்டுக் குருவிக்கும்
சிறகடிக்க ஆசை
ஒரு கூட்டுப் புழுவிற்கும்
சிறை உடைக்க ஆசை
எம் ஈழத் தமிழர்க்கும்
விடுதலை வேட்கை எனத்
திரியாகிக் கரியாகிப் போனீரே
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே
குண்டு மழையிடை
கந்தகம் சந்தணமாக
வெந்தகம் நீறாக
தாயத்தாகம் தாரகமாக
தாராள மனத்துடன் – நாம்
பாராள வேண்டி நின்றீரே
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே
பெற்றவரைப் பிரிந்து
உற்றவரை மறந்து
மற்றவர் விடியலுக்காய்
கதிரோடு புதிரானீர்
உம் விதியை உம் கையிலெடுத்தீர்
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே
நன்னுடல் பொடிப்பட
செம்புலப் புயநீரென
செந்நீர் நிலம்புணர
பொன்னுடல் உருகிட
புகழுடல் பெற்றீரே
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே
படர் துயர் துடைக்க
இடர்கள் பல நீக்க
நெல்லியடியில் நேர்த்தியாய்
நேற்று நீர் அடித்தீர்
பெரும்படை தகர்த்தீர்
எதிரியின் நம்பிக்கை
பொடியாக்கினீர்
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே
நாடெங்கும் எதிரிகளஞ்சினர்
பாரெங்கும் பலரும் வியந்தனர்
வலுவிலா இனத்தின் விலாவானீர்
புது நிலை கொடுத்தீர்
புது வகை வகுத்தீர்
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே
களமுனைச் சமநிலை சிதறடித்தீர்
உடலால் ஊடறுத்தீர்
கடலால் வழி தடுத்தீர்
ஈழக்காதலால் இரையானீர்
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே
நங்கையர் கொங்கை அரியும்
கொடுங்கையர் சிரம் கொய்ய
தியாகத்தின் உச்சத்தில்
ஒளிரும் தீபமாகினீர்
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே
படை நகர்த்தல் பல தடுத்தீர்
படைக்கலன்கள் பறித்தெடுத்தீர்
ஆழ்கடலில் நீள் கலனகள் மூழ்கடித்தீர்
மண் மீட்க மானம் காக்க
இரையாகினீர்
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே
விடுதலைக்கு எனக் கருவாகி
விடுதலை வேள்வியில் கரியாகி
விடு தமிழர் தலை என வித்தாகிப்
போன கருவேங்கைகளே
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே
ஆட்காட்டிக் குருவிகள் ஆங்கே
அதிகரித்துப் போனதனால்
சிட்டுக்குருவிகள் இங்கே
சுடலைக் குருவிகளாயின
ஞானியர் பொய்யுடன் என்றதைப்
பொய்யாக்கி உம்முடலை
மெய்யுடலாக்கி ய
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே
இன்னும் பகை ஒளியவில்லை
இன்னும் துயர் தீரவில்லை
மீண்டும் எம் மண் வருவீர்
கதிர் ஒளியோடு ஒன்றாக
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே
மீண்டும் தாய் மண் வருவீர் வருவீர்

Wednesday, July 22, 2015

மனிதன்

மனிதன்!

நேற்று உடல்நலத்தை விற்றுக்
காசாக்கி,
இன்று அந்தக் காசில் உடலைக்
காத்து
நாளையை யோசித்து, இன்றை
செலவழித்து
என்றும் வாழாது இருக்கிறான்!
சாவில்லாது போல் வாழ்ந்து,
வாழாது சாகிறான்!

நெருப்பு

பார்த்தாலும்,
பாராதிருந்தாலும்,
தொட்டாலும்
தொலைவாயிருந்தாலும்,
சுடும், தகிக்க வைக்கும்!
தீயாய் எரிக்கும்!
என்றும் எரியத் தயாராய்,
தணலாய் மனமாகும்,
உன்னை நினைக்கையில்!
பெண்ணே நீயும் நெருப்பு
தானோ?!

ஓட்டு

வோட்டு
உழுதவனையும், உண்டவனையும்
தொழுது பலரும் கேட்கும்
ஒன்று;
கேட்டவரில் ஒருவருக்கு
நிச்சயம் கிடைக்கும்!
போட்டவருக்கு தொழுகை
மட்டும்
மிச்சமாகும்!!

Tuesday, July 14, 2015

கவியாகும் காதலன்

நிச்சயமாகச் சொல்கிறேன்
நான் கவிஞனில்லை
கற்பனைக்கும் எனக்குமான
தூரம் எப்போதும் மிக மிக
அதிகமே
தொடர் சிந்தனைக்கும் எனக்கும்
என்றும்
தொடர்பு இருந்ததே இல்லை
ஆயினும்
என்னுடன் இருந்து நீ பிரிந்த
சில நிமிடங்களில்...
திரு விழா முடிந்த மறு நாளில்
அனைத்து அலங்காரங்ளையும்
இழந்து
அலங்கோலமாய்க் கிடக்கும்
வெட்டவெளி மைதானமும்
அறுவடை முடிந்து அம்மணமாகி
வானம் பார்த்து வெறித்துக்
கிடக்கும்
அடுத்த விதைப்புக்கு ஏங்கிக்
கிடக்கும்
பொட்டலான வயல்வெளியும்
கடைசிப் பேருந்தும் போய்விட
அழுது வடியும் தெரு விளக்கு
வெளிச்சத்தில்
விடியலுக்கு ஏங்கிக் கிடக்கும்
கிராமத்துப் பேருந்து
நிலையமும்
கோடை விடுமுறைப் பள்ளியும்
நீர் நின்று போன தெருவோரக்
குழாயடியும்....
இன்னும் இதுபோல் பிறவும்
தொடர்ச்சியாய் காட்சியாய்
என்னுள் நிறைய
எனக்கு கவிஞனாகி
விடுவேனோ என
பயமாயிருக்கிறது
எனக்காக இல்லையெனினும்
கவிதையைக் காப்பாற்றவாவது
என்னை விட்டுப் பிரியாதிருக்க
முயற்சி செய

விபச்சாரர்

விபச்சாரர்
அவர் பெண் பார்க்க வந்தபோது
"ஜாதகப் பொருத்தம் பார்ப்பதும்
லெளகீக விஷயங்கள் பேசுவதும்
தாய் தந்தையருக்காத்தான்
எனக்கு இதிலெல்லாம்
உடன்பாடில்லை"என்றார்
அவள் உண்மையில்
பூரித்துப்போனாள்
"பெண் பார்க்க வரும்போது
சேலை கட்டியிருக்கச்
சொன்னதுகூட
தனது தமக்கைக்காகத்தான்
எனக்கு எ ப்படி யிருந்தாலும்
சரிதான்"என்றார்
அவள் உள்ளம் குளிர்ந்து போனாள்
"திருமணத்தில் சாஸ்திர
சம்பிரதாயங்கள்
சரியாக இருக்க வேண்டும்
என்பதுகூட தாத்தா
பாட்டிக்காதத்தான்
எனக்கு துளிகூட
இதிலெல்லாம் நம்பிக்கையில்லை"
என்றார்
அவளுக்கும் இது
சரியெனததான்பட்டது
"திருமணமண்டபம் நல்லதாய்
இருக்கவேண்டும்
சாப்பாடுதான் ரொம்ப முக்கியம்
விருந்தினர்களின் திருப்திதானே
நம்மெல்லோருக்கும் முக்கியம்"
என்றார்
அதுகூட அவளுக்கு
ஏற்கும்படியாகத்தானிருந்தது
சீர்வரிசையில் ஒரு
சிறுகுறையென்று
அவரது ஒன்று விட்ட மாமன்
மண்டபத்தையே
உலுக்கியெடுத்தபோது
"எங்கள் மாமன் எப்போதும்
இப்படித்தான்
இங்கிதம் தெரியாத பிறவி
அவரைக் கண்டுகொள்ளாமல்
எனக்காகவேனும்
இதைமட்டும்
செய்துகொடுங்கள்"என்றார்
அவளுக்கும் வேறு
வழியிருப்பதாகத் தெரியவில்லை
கல்யாண அமர்க்களங்களெ ல்லாம்
முடிந்து
அவள் தங்கக் சிலையென
வெள்ளிச் செம்பேந்தி
அன்னமென பள்ளியைறயினுள்
அடியெடுத்து வருகையில்
மெய்மறந்து வாய்பிளந்தவன்
அவளை கட்டியணைத்து
அருகிலமர்த்திக் கொண்டபோது
"அணைத்துக் கொண்டது கூட
யார் சொல்லியேனும்"
எனச் சொல்லக்கூடுமோ எனப்
பயந்தாள்
அவன் மிக மெதுவாக
அவள் முகத்திரை விலக்கி
நிச்சயித்த நாள்முதல்
ஒத்திகை பார்த்து வைத்த
முத்தத்தை
சிதறவிட்டு கொடுத்தபடிச்
சொன்னான்
"இத்தனை ஆர்ப்பாட்டங்களும்
இதற்காகத்தான் இல்லையா"என்றான்
அவன் முகத்தில்
நியூட்டனால் கண்டுபிடிக்க
முடியாத
புதிய விதியை கண்டுபிடித்த
பெருமிதம் இருந்தது
அவள் தலை குனிந்து நின்றாள்
"பெறவேண்டியதை எல்லாம்
சாமர்த்தியமாய்
பெற்றுக்கொண்டும்
பத்தினிபோலும்
வேடமிட்டுக்கொண்டும்
சுகம்தற எத்தெனிக்கும் பெண்களை
விபச்சாரிகள் எனச் சொல்வதை
போலிந்த
ஆண்களை ஏன் விபச்சாரன் எனச்
சொல்வதில்லை"
அவளுள் ஒரு எண்ணக்கீற்று உடன்
வந்து போனது
அவளுள் உறங்கிக் கிடந்த தமிழச்சி
திடுமென்று வீறுகொண்டாள்
"தொட்டு தாலிகட்டிய கணவனை
விபச்சாரன் எனச்சொல்லல் தகுமா?
தமிழர் பண்பாடு ஏற்குமா ?
தவறல்லவா"என்றாள்
தமிழச்சியின் கூற்றும்
சரியெனவே இவளுக்கும் பட்டது
"வேண்டுமாயின் ஆர் விகுதி
சேர்த்து
விபச்சாரர் எனச்
சொல்லலாமா"என்றாள் இவள்
உள்ளிருந்த தமிழச்சி மௌனமாய்
சம்மதிக்க
இவள் லேசாகப் புன்னகைத்தாள்
வழக்கம்போல
எல்லா ஆண்களையும் போல
புன்னகைத்ததற்கான பொருள்
புரியாது
தனது முதல் முத்தத்தில்
அவள் நிலைகுலைந்து போனாள்
என
ஆண்மைக் குரிிய கம்பீரத்தோடு
அவளை அள்ளிக்கொண்டான்
அந்த "விபச்சாரர்"

அழகான வாழ்க்கை.!!
நதிபேசும் மொழிகேட்டு
ரசித்துக் கொண்டே
……..நெடுந்தூரம் மணற்பரப்பில் நடக்க
வேண்டும் !
புதிராக இருக்கின்ற எதுவும்
எந்தன்
……..பார்வையிலே பதில்சொல்லி
முடிக்க வேண்டும் !
விதியென்னும் புதைகுழியில்
வீழாமல் என்
……..விருப்பம்போல் கடைசிவரை
வாழ வேண்டும்!
அதிசயமாய் நான்மட்டும் சுவாசம்
செய்ய
……..ஆக்ஸிஜனும் எனக்குள்ளே
சுரக்க வேண்டும் !
கல்லறையில் எனைக்கொண்டு
வைத்த பின்னும்
……..கரையான்கள் அரிக்காத மேனி
வேண்டும் !
சில்லறையாய் எனதுஉடல்
சிதையும் போதும்
……..சிரிக்கின்ற திடமான உள்ளம்
வேண்டும்!
சல்லடையில் வார்த்தைகளைச்
சலித்தெடுத்து
……..சரித்திரங்ள் படைக்கவரும்
சொற்கள் வேண்டும் !
செல்லரித்து நாவில்சீழ் வடியும்
போதும்
……..சத்தியத்தைத் தவறாத வாக்கு
வேண்டும் !
கீச்சென்ற ஒருசொல்லால் பேசும்
அந்த
……..கிளியுடைய தாய்மொழியை
ரசிக்க வேண்டும் !
பூச்சரமாய் நிற்கின்ற பெண்ணை
அள்ளி
……..பூலோகம் அழியும்வரை
ருசிக்க வேண்டும் !
மூச்சற்றுப் போனாலும் மூளைச்
செல்லில்
……..முணுமுணுப்பாய்
கவிதைவரி ஒலிக்க வேண்டும் !
பேச்சற்றுக் கிடக்கின்ற நிலவும்
எந்தன்
……..பெயர்சொன்ன பின்னால்தான்
உதிக்க வேண்டும் !
பனித்துளிக்குள் எப்படியோ
நுழைந்து சென்று
……..பத்திரமாய் ஓரிரவு உறங்க
வேண்டும் !
தனிமையிலே எனைப்பர்த்துக்
காதல் செய்ய
……..தேவதையும் எனைத்தேடி
வருதல் வேண்டும் !
பனிக்கொட்டும் மாதத்தில்
குளிர்தணிக்க
……..பாய்விரித்துச் சூரியனில்
படுக்க வேண்டும் !
இனியெந்தன் இரைப்பையில் தீயை
அள்ளி
……..இறைத்தாலும் அதைஉண்டும்
செரிக்க வேண்டும் !
விரல்நீட்டித் தொடுகின்ற
தொலைவில் இங்கே
……..விண்மீன்கள் பூக்களாக
முளைக்க வேண்டும் !
இரவெல்லாம் மீண்டுமிங்கு
விடிவதற்கு
……..என்னிடத்தில் உத்தரவு கேட்க
வேண்டும் !
சிரமத்தைப் பாராமல் செவ்வாய்க்
கோளும்
……..எனைபார்க்க கீழிறங்கி வருதல்
வேண்டும் !
நிரந்தரமாய் என்கவிதை இனிக்கும்
என்றால்
……..நடுக்கடலில் இட்டவிதை
முளைக்க வேண்டும் !
மழைநீரில் தினம்நனைத்து
இயற்கையோடு
……..மணிக்கணக்காய் உறவாடி
கரைய வேண்டும் !
அழைக்காமல் என்னருகில் எமனும்
வந்தால்
……..அதையும்நான் கண்டிக்கும்
உரிமை வேண்டும் !
பிழைசெய்யா பருவத்தில் தாயின்
மார்பில்
……..பிள்ளையென பால்குடித்த
காலம் வேண்டும் !
உழைக்காமல் என்தேகம் இருந்தால்
எந்தன்
……..உயிரெடுத்து சிலுவையிலே
அறைய வேண்டும் !
தன்னிச்சை செயலாக உண்மை பேச
……..தனிநாக்கு எப்போதும்
எனக்குள் வேண்டும் !
என்கண்ணில் சூரியனை வைத்துக்
கொண்டு
……..எனைச்சுற்றி பூமிவர செய்தல்
வேண்டும் !
மின்னல்களில் மையூற்றி
பேனாவாக்கி
……..மின்சாரம் போல்கவிதை எழுத
வேண்டும் !
என்னுள்ளே தமிழ்ஞானம் அழியும்
என்றால்
……..அப்பொழுது அந்நொடியே
மரணம் வேண்டும் !

Saturday, January 31, 2015

நீயில்லையென்றால்...

தூக்கமில்லாத இரவுகளோடு போராடித்
தோற்றுப்போனபோதும்
கனவுகளுக்கு ஏங்கிய இரவுகள் அதிகம்!
நினைவுகளும் ஞாபகங்களும்
ஒவ்வொரு இரவிலும் என்னைக்
கொன்று போட்டாலும், உன்
நினைப்புடன்தான் உயிர்க்கின்றேன்
அதிகாலைகளில்...!
இப்பொழுதெல்லாம்...  அதிவிரைவுச்
சாலைகள் எனக்கு ,
பழக்கப்பட்ட ஒழுங்கைகள் போல இருக்கிறது !
வேகங்கள் என்னைப் பயமுறுத்துவதில்லை!
சதா ரணமுமாய் சாவதைவிட
செத்துப்போனால் பரவாயில்லை
என்று தோன்றும்போது,
சில அசாதாரணங்கள் கூட....
சாதாரணமாய் மாறிவிடுகின்றனவோ ?
நான் செத்துத் தொலைந்தால் நன்றாய்
இருக்கும்!

நங்கை உன் கையில்

பெண் குலத்தின் தலைவியே
பொறுமையின் இலக்கணமே
அன்ன நடை பயிலும் மாதே
அன்பின் பிறப்பிடமே
அழகின் இருப்பிடம் நீ
தனி வழியாம் உன் வழியாம்
கயல் மீனோ உன் கண்ணில்
கொவ்வை பழம் என்றோ
புன்னகை உதட்டிற்காய்
புல்லினம் கூடினவே
கன்னத்தில் குழி அழகு
கரும் கூந்தல் அதில் அழகு
முத்தான மூக்குத்தி
உன் மூக்கிற்கே தனியழகு
முழுமதி போல் முகம் இருக்க - அதில்
மூன்றாம் பிறை வடிவில்
நீள் புருவம்
புனிதம் உள்ள குணவதியே
பூவுலகின் நாயகியே
கண்ணகி நீ வாழனும்
கணவனுக்கு பெருமைகளை சேர்க்கனும்
மாமியார் போற்றனும்
மற்றவர் வாழ்த்தனும்
இல்லறம் சிறக்கவே - நாட்டில்
நல்லறம் பெருகனும்
நாளைய சந்ததி
நன்நிலை பெற்றே
நலமுடன் வாழ்வது
நங்கை உன் கையிலே