உனக்கென்ன
எளிதில்
தீண்டி
செல்கிறாய்
நானல்லவா
தீப்பற்றி
எரிகிறேன்...........
யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Tuesday, April 29, 2014
Saturday, April 26, 2014
அவள்
கூரிய வாளினை
பழுக்க காய்ச்சி
இதயத்தில்
இறக்கி
பின்னர்
மயிலிறகால்
மருந்திடுதல்
போன்றது
உந்தன்
நெடுங்கோபத்தின்
பிந்தைய
அனைப்பும்
முத்தமும்.....♥:*
Monday, April 14, 2014
தமிழ் சொந்தங்களே
நீதி கேளுங்கள்,
சமுக ஆர்வலர்களே
நீதி கேளுங்கள்,
அரசியல்வாதிகளே
நீதி கேளுங்கள்,
எழுத்தாளர்களே
நீதி கேளுங்கள்,
கவிஞர்களே
நீதி கேளுங்கள்,
நீங்கள் கேட்க்கும்
நீதி,
ஒரு இசை பிரியாவின்
கற்புக்கும்.
நிகழ்ந்த வன்கொடுமைக்கும்
அல்ல,
இன்னும் பல ஆயிரம்,
இசை பிரியாகளின்
கற்புக்கும்.
எங்கள் தேசத்துக்கும்,
கேட்க்கும் நீதி.
நீதி கேளுங்கள்,
சமுக ஆர்வலர்களே
நீதி கேளுங்கள்,
அரசியல்வாதிகளே
நீதி கேளுங்கள்,
எழுத்தாளர்களே
நீதி கேளுங்கள்,
கவிஞர்களே
நீதி கேளுங்கள்,
நீங்கள் கேட்க்கும்
நீதி,
ஒரு இசை பிரியாவின்
கற்புக்கும்.
நிகழ்ந்த வன்கொடுமைக்கும்
அல்ல,
இன்னும் பல ஆயிரம்,
இசை பிரியாகளின்
கற்புக்கும்.
எங்கள் தேசத்துக்கும்,
கேட்க்கும் நீதி.
நீதிக்கு சிறை தண்டனை
" 22 " ஆண்டாம்.
22 வருட வன வாசம்,
எத்தனையோ இழப்புக்களை
தந்து விட்டது.
வாழ்வை இழந்து
தினம்..!! தினம்..!! மரணம்.
உறவுகளை இழந்து
தினம்..!! தினம்..!! மரணம்.
இளமையை இழந்து
தினம்..!! தினம்..!! மரணம்.
உரிமைகளை இழந்து
தினம்..!! தினம்..!! மரணம்.
இத்தனை
மரணத்தண்டனை தந்த உயிருக்கு,
இனியும் மரணமா..??
உன் தூக்கு கயிறு கூட இதை
ஏற்காது.
" 22 " ஆண்டாம்.
22 வருட வன வாசம்,
எத்தனையோ இழப்புக்களை
தந்து விட்டது.
வாழ்வை இழந்து
தினம்..!! தினம்..!! மரணம்.
உறவுகளை இழந்து
தினம்..!! தினம்..!! மரணம்.
இளமையை இழந்து
தினம்..!! தினம்..!! மரணம்.
உரிமைகளை இழந்து
தினம்..!! தினம்..!! மரணம்.
இத்தனை
மரணத்தண்டனை தந்த உயிருக்கு,
இனியும் மரணமா..??
உன் தூக்கு கயிறு கூட இதை
ஏற்காது.
நூறு தலைவர்கள்
வரலாற்றில் தோன்றினாலும்.
நூற்றுக்கு நூறு
சதவீதம் பெறும் தலைவன்.
என்,
தலைவன்
" பிரபாகரன் "
தேசமே
என் சுவாசம்.
மக்களே
என் உறவுகள்.
யென்று வாழ்ந்தவன்...
இன்றும் வாழ்பவன்...
பதுங்கிய
புலி..!!
அழிந்தது யென்று,
என்னும் மனதிற்கு யெல்லாம்.
அழிந்ததும்..
அழிவதும்..
என்
பிறப்பிலே இல்லை யென்று,
விரைவில்..!!
உணர்ந்திட செய்வாய்
பகைவர்களை
பகையில் நடுங்கிட செய்வாய்,
தலைவா..!!!!
வரலாற்றில் தோன்றினாலும்.
நூற்றுக்கு நூறு
சதவீதம் பெறும் தலைவன்.
என்,
தலைவன்
" பிரபாகரன் "
தேசமே
என் சுவாசம்.
மக்களே
என் உறவுகள்.
யென்று வாழ்ந்தவன்...
இன்றும் வாழ்பவன்...
பதுங்கிய
புலி..!!
அழிந்தது யென்று,
என்னும் மனதிற்கு யெல்லாம்.
அழிந்ததும்..
அழிவதும்..
என்
பிறப்பிலே இல்லை யென்று,
விரைவில்..!!
உணர்ந்திட செய்வாய்
பகைவர்களை
பகையில் நடுங்கிட செய்வாய்,
தலைவா..!!!!
சுதந்திரத்தின்
எல்லை முள்வேலி.
உலகத்தின்
எல்லை முள்வேலி.
உறவுகளின்
எல்லை முள்வேலி.
சிறைப்பட்ட முள்வேலியில்.
சிறை கைதிகளாய் தமிழர்கள்.
பட்டியில் அடைக்கப்படும்
விலங்கு கூட,
காலையில்
சுதந்திரமாய் சென்று விட்டு.
மாலையில் தான் அடைக்கப்படும்.
ஆனால்
என் தமிழனோ,
விடுதலையின்றி,
விலங்காய் அடைப்பட்டு கிடக்கின்றான்
முள்வேலியில்.....
புத்த தேசத்தில்.
புதைக்கப்பட்ட மனித நேயம்.
" தமிழீழம் வெல்லும் "
எல்லை முள்வேலி.
உலகத்தின்
எல்லை முள்வேலி.
உறவுகளின்
எல்லை முள்வேலி.
சிறைப்பட்ட முள்வேலியில்.
சிறை கைதிகளாய் தமிழர்கள்.
பட்டியில் அடைக்கப்படும்
விலங்கு கூட,
காலையில்
சுதந்திரமாய் சென்று விட்டு.
மாலையில் தான் அடைக்கப்படும்.
ஆனால்
என் தமிழனோ,
விடுதலையின்றி,
விலங்காய் அடைப்பட்டு கிடக்கின்றான்
முள்வேலியில்.....
புத்த தேசத்தில்.
புதைக்கப்பட்ட மனித நேயம்.
" தமிழீழம் வெல்லும் "
மறக்கமுடியா என் கிராமத்து நினைவுகளை.

பல் விளக்கும் பட்டை வேப்பங்குச்சி
நீச்சலடிக்கும் ஏரி குட்டை
பிடிக்க போகும் பட்டா…ம்பூச்சி
காதில் கேட்ட கிராமத்து பாடல்கள்
காணமல் போன குழாய் ரேடியோ
கண்களில் நிற்கும் கறவை மாடு
விட்டு வந்த வீட்டு வாசல்
பார்க்க துடிக்கும் பம்பர விளையாட்டு
கூட்டமாய் விளையாடிய கில்லிதாண்டு
விரட்டி பிடித்த கோழி, மாடு
விழுந்து எழுந்த தொழி வயல்
நினைவில் நிற்கும் நிலா சோறு
அடித்து விட்ட அடுத்தவீட்டு பையன்
அடி வாங்கின அப்பு மகள்
முத்தமிட்ட ஆட்டுக்குட்டி
முட்டிவிட்ட மாட்டு கன்று
பட்டம் விட்ட பள்ளி புத்தகம்
பாழாய் போன தண்ணீர் குழாய்
சண்டை போட்ட சித்தப்பா வீடு
உதவி செஞ்ச பக்கத்துக்கு வீடு
உண்ணாமல் இருந்த அக்கா
காதலிச்ச கூட படித்த பெண்கள்
கைகாட்டி காரில் போன கார வீட்டுகாரர்
நித்தமும் சப்தமிடும் ஒரே ஒரு அரசு பேருந்து
மனசை உலுக்கிய குடு குடுப்பை காரன்
களை எடுக்றப்ப கதை சொல்லி களைப்பு போக்கும் களவாணி பாட்டி
கலர் கலராய் தாவணி பொண்ணுங்க
வெற்றிலை துப்பும் கொட்டகை தாத்தாங்க
காலைல கிளம்பிடும் காளை மாடுகளோடு காணும் அய்யா மாறுங்க
மதிய உச்சி வெயிலில் வேலை செய்யும் அம்மா மாருங்க
ரெட்டைஜடை கூந்தல் சின்ன பொண்ணுங்க
தத்துவம் பேசும் காதல் கிறுக்கங்க
மருத்துவம் கொடுக்ற மங்கத்தா பாட்டி
என்னிக்காச்சும் வரும் கூடார சர்க்கஸ்
எப்போதும் நான் முதல் மார்க் வாங்கிய பள்ளி
எத்தனை எத்தனை சொல்வது
மறக்கமுடியா என் கிராமத்து நினைவுகளை
நெஞ்சில் முள் குத்துகிறது.
பல் விளக்கும் பட்டை வேப்பங்குச்சி
நீச்சலடிக்கும் ஏரி குட்டை
பிடிக்க போகும் பட்டா…ம்பூச்சி
காதில் கேட்ட கிராமத்து பாடல்கள்
காணமல் போன குழாய் ரேடியோ
கண்களில் நிற்கும் கறவை மாடு
விட்டு வந்த வீட்டு வாசல்
பார்க்க துடிக்கும் பம்பர விளையாட்டு
கூட்டமாய் விளையாடிய கில்லிதாண்டு
விரட்டி பிடித்த கோழி, மாடு
விழுந்து எழுந்த தொழி வயல்
நினைவில் நிற்கும் நிலா சோறு
அடித்து விட்ட அடுத்தவீட்டு பையன்
அடி வாங்கின அப்பு மகள்
முத்தமிட்ட ஆட்டுக்குட்டி
முட்டிவிட்ட மாட்டு கன்று
பட்டம் விட்ட பள்ளி புத்தகம்
பாழாய் போன தண்ணீர் குழாய்
சண்டை போட்ட சித்தப்பா வீடு
உதவி செஞ்ச பக்கத்துக்கு வீடு
உண்ணாமல் இருந்த அக்கா
காதலிச்ச கூட படித்த பெண்கள்
கைகாட்டி காரில் போன கார வீட்டுகாரர்
நித்தமும் சப்தமிடும் ஒரே ஒரு அரசு பேருந்து
மனசை உலுக்கிய குடு குடுப்பை காரன்
களை எடுக்றப்ப கதை சொல்லி களைப்பு போக்கும் களவாணி பாட்டி
கலர் கலராய் தாவணி பொண்ணுங்க
வெற்றிலை துப்பும் கொட்டகை தாத்தாங்க
காலைல கிளம்பிடும் காளை மாடுகளோடு காணும் அய்யா மாறுங்க
மதிய உச்சி வெயிலில் வேலை செய்யும் அம்மா மாருங்க
ரெட்டைஜடை கூந்தல் சின்ன பொண்ணுங்க
தத்துவம் பேசும் காதல் கிறுக்கங்க
மருத்துவம் கொடுக்ற மங்கத்தா பாட்டி
என்னிக்காச்சும் வரும் கூடார சர்க்கஸ்
எப்போதும் நான் முதல் மார்க் வாங்கிய பள்ளி
எத்தனை எத்தனை சொல்வது
மறக்கமுடியா என் கிராமத்து நினைவுகளை
நெஞ்சில் முள் குத்துகிறது.
Friday, April 11, 2014
Sunday, April 6, 2014
யாரென்று நினைத்தாய் தமிழனை ?...
அடிப்பட்டே மாண்டிடும்
கோழையா?
உணர்ச்சியற்ற முடவனா?
ஒளியற்று உதிரும்
சூரியனா?
யாரென்று நினைத்தாய்
தமிழனை?...
வீரம் செறிந்த இனம்
மானம் போற்றும் சினம்
வாரி வழங்கும் மனம்
நாங்களின்று பிணம்...
பிணத்தையும் நக்கும்
சிங்கள ஆதிக்கம்!
யாரென்று நினைத்தாய்
தமிழனை?...
தமிழுணர்ச்சியின் சீற்றம்
பாய்ந்திடும்
புலியின் தோற்றம்
உணர்ச்சியற்ற மறவர்களிடையே
உணர்ச்சி வசப்படும்
புலித்தமிழர்கள் !...
எம்மை இனி தொட்டால்
பிணமாவாய்...
கடலோரம் சுட்டால்
சிங்களநாயே நீ
புலிக்கு இரையாவாய் ...
அடையாளம் இழந்தே
நீ சாவாய்...
யாரென்று நினைத்தாய்
தமிழனை ?...
தமிழன் மீது
தேசிய பாதுகாப்பு சட்டம்!
ராசபக்சேவோடு
தேசிய பாதுகாப்பு ஒப்பந்தம்!!
மெய்க்கு சட்டம்
ஏற்றும் குற்றம்!
பொய்மைக்கு தேசியவாதி
பட்டம்!!
கொடையாளி காங்கிரசுக்காரன்
கொலையாளி பௌத்தன்
உளவாளி கருணா(க்கள்)
பகையாளி தமிழன்
இந்தியாவுக்கு பங்காளி
சிங்களன்...
எதிராளி தமிழன்
இந்திய குடிமகனாம்...
யாரென்று நினைத்தாய்
தமிழனை?...
திமிறி எழும் தமிழர் படை
நடுங்கி சாகும்
எதிரியர் படை...
தமிழீழம் தமிழீழமே
தமிழர்க்கு விடை!
உற்ற எம்உரிமையினை
தடுக்கும் எத்தடையும்
பிரபாகரன் படைமுன்
சாயும்...
புலிப்படை சாதிக்கும்...
அடிப்பட்டே மாண்டிடும்
கோழையா?
உணர்ச்சியற்ற முடவனா?
ஒளியற்று உதிரும்
சூரியனா?
யாரென்று நினைத்தாய்
தமிழனை?...
வீரம் செறிந்த இனம்
மானம் போற்றும் சினம்
வாரி வழங்கும் மனம்
நாங்களின்று பிணம்...
பிணத்தையும் நக்கும்
சிங்கள ஆதிக்கம்!
யாரென்று நினைத்தாய்
தமிழனை?...
தமிழுணர்ச்சியின் சீற்றம்
பாய்ந்திடும்
புலியின் தோற்றம்
உணர்ச்சியற்ற மறவர்களிடையே
உணர்ச்சி வசப்படும்
புலித்தமிழர்கள் !...
எம்மை இனி தொட்டால்
பிணமாவாய்...
கடலோரம் சுட்டால்
சிங்களநாயே நீ
புலிக்கு இரையாவாய் ...
அடையாளம் இழந்தே
நீ சாவாய்...
யாரென்று நினைத்தாய்
தமிழனை ?...
தமிழன் மீது
தேசிய பாதுகாப்பு சட்டம்!
ராசபக்சேவோடு
தேசிய பாதுகாப்பு ஒப்பந்தம்!!
மெய்க்கு சட்டம்
ஏற்றும் குற்றம்!
பொய்மைக்கு தேசியவாதி
பட்டம்!!
கொடையாளி காங்கிரசுக்காரன்
கொலையாளி பௌத்தன்
உளவாளி கருணா(க்கள்)
பகையாளி தமிழன்
இந்தியாவுக்கு பங்காளி
சிங்களன்...
எதிராளி தமிழன்
இந்திய குடிமகனாம்...
யாரென்று நினைத்தாய்
தமிழனை?...
திமிறி எழும் தமிழர் படை
நடுங்கி சாகும்
எதிரியர் படை...
தமிழீழம் தமிழீழமே
தமிழர்க்கு விடை!
உற்ற எம்உரிமையினை
தடுக்கும் எத்தடையும்
பிரபாகரன் படைமுன்
சாயும்...
புலிப்படை சாதிக்கும்...
இறுதி மூச்சு !
வல்வெட்டித்துறையில்
சூரிய புதல்வனை
பெற்றெடுத்த
உன் மூச்சு பனகொடா
சிங்களவன் முகாமிலா
நிற்கணும் !
அய்யோ
பகலவனை வளர்தெடுத்த
பாச கீற்று
இங்கோ போகணும் !
இன்று தமிழர்
உளம் வெதும்பி
இருண்டா சாகணும்...
அப்புவே தலைவனை
சுமந்த உன் மூச்சு,
இறுதி மூச்சின்
அனல்
ஈழத்தில் எரியுது
பார் இன்னும்...
தியாக மூச்சால்
விடியும் நம் மண்ணும் !!!
தமிழன்!தமிழன்!!
தமிழன்!தமிழன்!!
கதைக்கு கதைக்க மட்டுமே
தமிழ் தமிழென்று
சொல்லுவோன் தமிழனா?
நஞ்சை அணிந்து
ஆசை துறந்து
மண்ணுக்காய் போரிடுபவன்
தமிழனா?
தமிழருக்காய் வாழ்வையும்
தமிழுக்காய் தேசத்தையும்
படைப்பவன் அவனடா!
தமிழன்!தமிழன்!!
தாய்மொழியை தாரைவாத்து
கொடுப்பவன் தமிழனா?
வீரத்தோடு உரிமை
காத்தவன் தமிழனா?
பதவி மோகத்தில்
மானம் விதவன்
தமிழனா?
பறித்தவன் தமிழனா?
அடிமை மோகம்
நுகர்ந்தவனை
விளிகசெயதவன் எவனடா!
அவனே தமிழன்!
தமிழன் ! தமிழன்!!
இவன் தான் தமிழன்
நீதியற்ற துரோகியோடு
கூட்டுச்சேருபவன் தமிழனா?
கொள்ளையடித்து வயிறுவளர்ப்பவன்
தமிழனா?
இனமானம் பெரிதென
தமிழனாய் எழுந்தவன்
எவனடா!
அவனே தலைவன்!
இவனே தமிழன்!!
தமிழன் இறங்கிபோகும்
படிகட்டுகளல்ல...
தரித்திரத்தை மடித்து
சரித்திரம் படைக்கும்
தலைக்கட்டுகள் ! !
தமிழன்!தமிழன்!!
கதைக்கு கதைக்க மட்டுமே
தமிழ் தமிழென்று
சொல்லுவோன் தமிழனா?
நஞ்சை அணிந்து
ஆசை துறந்து
மண்ணுக்காய் போரிடுபவன்
தமிழனா?
தமிழருக்காய் வாழ்வையும்
தமிழுக்காய் தேசத்தையும்
படைப்பவன் அவனடா!
தமிழன்!தமிழன்!!
தாய்மொழியை தாரைவாத்து
கொடுப்பவன் தமிழனா?
வீரத்தோடு உரிமை
காத்தவன் தமிழனா?
பதவி மோகத்தில்
மானம் விதவன்
தமிழனா?
பறித்தவன் தமிழனா?
அடிமை மோகம்
நுகர்ந்தவனை
விளிகசெயதவன் எவனடா!
அவனே தமிழன்!
தமிழன் ! தமிழன்!!
இவன் தான் தமிழன்
நீதியற்ற துரோகியோடு
கூட்டுச்சேருபவன் தமிழனா?
கொள்ளையடித்து வயிறுவளர்ப்பவன்
தமிழனா?
இனமானம் பெரிதென
தமிழனாய் எழுந்தவன்
எவனடா!
அவனே தலைவன்!
இவனே தமிழன்!!
தமிழன் இறங்கிபோகும்
படிகட்டுகளல்ல...
தரித்திரத்தை மடித்து
சரித்திரம் படைக்கும்
தலைக்கட்டுகள் ! !
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்
சொல்லில் உயர்ச்சொல் தமிழ்ச்சொல்லாம்
அச்சொல் கொச்சையின் பிச்சையால்
தமிங்கல சொல்லாகி , உயர்ச்சொல்
பிறர்மொழி யாசித்து பேசும்
வேற்றுச்சொல்லாயிற்று...
ஆங்கில மோகத்தில் இச்சைத்
தமிழாய் வாழ எம்மொழியென்ன
செப்பு மொழியோ ...
அறம் தங்கி
மானம் தாங்கிய செம்மொழி !
அம்மொழி பன்மொழி கலவையால்
தமிழன் வாய்மொழி அறிவற்ற
அறியாமை மொழியாயிற்று...
தமிழ்ச்சொல்லிலே 'ஸ,ஷ,ஜ,ஹ,ஸ்ரீ'
இணைந்திட எம்மொழி சடங்கு
மொழியாயிற்று...
பாமரனும் தமிங்கல கோர்வையில்
தாய்மொழியை மறதியில் மாய்த்து
பேய்மொழியை எம்மவர் சொல்லில்
பாய்த்து சீரற்ற தமிழரானாய்...
புலவனும்,அறிஞனும்,வள்ளுவனும்
தீட்டிய இச்சொல் மதியற்றோர்
சேர்க்கையில் தன்மைச்சொல்
பிழையாவதோ!
தமிழனாய் யோசி
கலங்காத தமிழால் பேசி
தாய்மொழி காக்க
உயர்ச்சொல் தமிழ்ச்சொல்லை வாசி...
முள்ளிவாய்க்கால் மூட்டிய பெருந்தீ!
நரிகள் குடியேறிய
புலிகள் தேசம்!
பண்டார வன்னியன் ஆண்ட
வேங்கைகள் தேசம்!
சோழன் வலம் வந்த
ஈழதேசம்!
இது நரிகள் குடியேறிய
புலிகள் தேசம்...
புத்த தேசம்
புத்தி இழந்த வஞ்சக சிங்களம்!
நயவஞ்சக இந்தியம்!!
முன்னங்கால் பாய்ச்சல் கொண்ட
எம் எல்லாளன் படையை
எதிர்க்கொள்ள வக்கற்றவனின்
நாசச்சுவடு மே 18!
கொத்துக்குண்டுகள் வீசி
லட்சம் உயிர் விழுங்கினாய்...
கோட்டைக்கட்டி வாழந்த இனத்தின்
கூடாரத்தையும் குறிப்பார்த்து
காந்திய ராணுவம் வழிவகுத்து
இஸ்ரேலிய எறிகணை
தமிழர் தலைமீது விழுந்து
புலிபடையினை வீழ்த்துவேனென்று
நாடு நாடாய் ஊர் ஊராய்
இருபத்தோர் தேசமெங்கும்
யாசகமெடுத்த வரிசையில்
ரேடார் இந்திரா இந்தியா
மீக்-29 சீனா
பல்குழால் பீரங்கி பாகிஸ்தான்
கடன்காரனின்
இரண்டாயிரம் கோடி கடன்
சிங்களன்,இந்தியன் பெருமையுடன்
தமிழன் பொறுமையுடன்
...முள்ளிவாய்க்கால்
காமவெறி தணிக்க
திருப்பதியில் பரிகாரம்...
இந்தியாவில் நாய்க்கெல்லாம் அதிகாரம்...
இதன் பெயர்தான் போரா!
தமிழச்சி மாரறுத்தாய்
மாவீரர் துயில் இடித்தாய்
தம்பிகள் உயிரெடுத்தாய்
இதன் பெயரோ போர்...
பன்னாட்டு சபையின்
அணுஆயித ஒப்பந்த
பரீட்சிய கூடம்
முள்ளிவாய்க்கால்!
முள்வேலிக்குள் அடைத்த பெரும்
ஒப்பந்தம்!
எம்மின துரோகிகளுக்கு பதவி
இது,எம்மின எதிரியின் பெரும் உதவி…
இன்னும் எங்களை
என்னவென்று நினைத்தாய்!
கற்கள் என்றா ?
முற்கள் என்றா ?
புலிகள் என்றுதானடா தடைவிதிதாய்!!
எச்சில் பட்ட எம்தேசத்தை
புலிகளே மீட்டெடுக்கும்
அண்ணன் களத்தில் போராடுவார்!
தம்பிகள்
நாங்கள் புலத்தில் போராடுவோம்!!
அண்ணன் எழுப்பிய விடுதலைதீ!
முத்துக்குமார் மூட்டிய செந்தீ!!
முள்ளிவாய்க்கால் மூட்டிய பெருந்தீ!!!
கண்ணீர் தேசம்
கடல்பரப்பில் வழிந்தோடிய
குருதிநீர் பனிமண்டலத்தில்
உரைந்து கசியுதே...
பூத்துக்குலுங்கும் ஈழத்திலும்
இரத்தம் பீச்சி
அடிக்கிறது !
குளிர்ந்து விளையும்
வெண்மை காசுமீரிலும்
இரத்தம் நிறக்கிறது !!
சோழன் முக்கடலிலே
மீன்கொடி பறந்ததம்மா !
மாற்றான் பிடியிருந்த
தமிழ்மண் அடிமை
மடமை துறந்திட
இமயம் வென்ற
புலிநாட்டன் கோடி
வீழ்ந்ததாம் அம்மா !
ஓயவில்லை பாரம்மா !
புத்துயிர் ஈழம் விடியும்
கண்ணீர் துடையம்மா !!
பூலோக சொர்க்கம்
ஆசாதி(விடுதலை) காசுமீர்
துரோகியவர் கூடலிலே
வெண்பிடி மண் !
உறங்குமா உன்கண் ??
மரண ஓலம்
ஈரமுடையோர் நெஞ்சினை
பிளந்திட்டு
கல்லுடையோர் எண்ணத்தினை
கரைத்திட்டு
நீர் வடிக்கிறது..
கண்ணீர் வலிக்கிறது...
இனியோ அலறமாட்டோம் !!
ஆண்ட தமிழ்நாடு!
வேற்றோனுக்கு தாய்வீடு...
மாற்றான் மொழி பேசும்
தமிழ்நாட்டன் மொழியென்றால் ஏசும்.
ஆங்கிலேயன் நயாகராவில்
வருக! வருக!!
தமிழன் பயாகராவில்
"WELCOME ENTRY TICKET 2 Rs/-"
ஆடுவது மானாட மயிலாட
ஆளுவது தமிழ்நாட
நடத்துவது செம்மொழிமாநாட
பாரடா! தமிழ்ப்படும் பாட்ட
தெலுங்கன் ஆள்கிறான்
கன்னடன் அடிக்கிறான்
மலையாளி வாழ்கிறேன்
தமிழன்
அலைகிறான்!அழிகிறான்!!
கேட்டால் தமிழ்நாடென்கிறான்...
தமிழ் பேசா
வேற்றோன் நாடு!
அதற்கே தமிழீழ
தனிநாடு அண்ணன்
கட்டமைத்த செந்தமிழ்நாடு!!
தமிழர் நாதமதில்
தமிழீழமே இசைந்திடும்
குருதி கண்ட உடல்
நீர்க்கொண்ட விழி கள்
மறக்குமா? ரணங்கள்
இனியோ அலறமாட்டோம்...
அனல் கக்கும்
நெருப்பாய் போராடுவோம்!
பதுங்கும் புலிகள்
பாய புறப்படுவோம்!
பாயந்து வென்றிடுவோம்!
தாய்நாடு புகுந்திடுவோம்!!
எதிரியை விரட்டிடுவோம்!!!
இனியோ!
அண்ணன்புலி ஈழநாட்டில்..
தம்பிபுலிகள் தமிழ்நாட்டில்...
எரிதழல் ஏந்தி வா!
துரோகத்தின் ஊடே
முறையற்ற பகைமை
அதிகார ஆதிக்க
வர்க வதத்தினை
கொழுத்திட
எரிதழல் ஏந்தி வா!
குருதி துடித்தெழுந்து வா !
அச்சம்தனை தீயலிட்டு வா !!
செந்நெருப்பு மூட்டி வா !!!
திருமேனிதனில் தணல்
மூண்டு தானே
எரிக்கொன்டு
களமாடிடு புலியாய்...
அறமற்று எம்வீடேறி
கொன்றிட்ட வந்தேறிதமை
செந்தழல் மூட்டும்
நெருப்பிற்கு இரையாக்கு...
செந்தமிழ் முழங்க
வீணரவனை பொடியாக்கு...
யாதொரு படை
பின்னுக்கு போகினும் ...
தீதொரு
இடுக்கண் நேரினும்
உடலுக்கு தாமே
கொள்ளியிட்டுக்கொண்டு
தமிழுயிர் தின்றவனை
வென்று வாழும்
செத்தும்,வெல்லும்!!
புலியாய் நீ
எரிதழல் ஏந்தி வா!
சிங்களவன் கொட்டத்தினை
அடக்கி வா!
வேறோடு அறுத்து வா!!
ஏந்திய செந்தீ
புலிவீரம் படிக்கும் !!
தமிழ்மானம் சிறக்கும் !!!
தேய்வுராத தேசத்தின் குரல் !
பேச்சாயிதமேந்தி தேய்வுராத
மூத்த குரல்...
பாலனே !
நீ
மடை உடைந்த
ஈழ எல்லைக்கோட்டை
உலகுணர
எடுத்துக்காட்டிவன்...
தடை பதிந்த
விடுதலை போராட்டத்தை
தலைநிமிர உரையாற்றிவன்...
நஞ்சு சுமந்த
மாவீரனை புலம்பெயர்ந்தவரிடமும்
புவியினரிடமும்
உயர்த்தி நிறுத்திவன்...
தாயகத்தை விலைப்பேசியவனை
அழல் நிறையும்
பேச்சால் அடிக்கியாண்டவன்...
வலியுணர்ந்த காயத்தை
சபைவழியேற்றி புரட்சியாக்கிவன்...
குருதியாற்றில் நனைந்த
தேசத்தை உறுதியோடு
பின்பற்றியவன்...
நிலைக்குலைந்த மக்கள்
வாழ்வு நிலையாகிட
தலைவனோடு நிலைத்திருந்தவன்...
பன்னாட்டு அவையங்களில்
புலிகளின் தாகம்
தமிழீழ தாயகமென்று
மார்தட்டி சொன்னவன் ...
பிரபாகரன் சகாப்தத்தில்
வலிமையுடைய மன்னவனாய்
வாழ்ந்து
தேசத்தின் குரலாய்
தகப்பனாய் மூத்தவராய்
வாழ்கிறாய் பாலனே !!
அணையாத செந்தணல்
முத்துக்குமரா முத்துக்குமரா
எழும்பாத உணர்ச்சி
நரம்பு புடைக்க,
தணலாகிய முத்துக்குமரா...
பொசிங்கிய உடலாலே
சதையை உணர்வாக்கிய
முத்துக்குமரா...
கரும்புலி போல கருகிய
உணர்ச்சிக்குமரா
தீயாலே தீபமாகிய
வீரக்குமரா...
குருதிக்கடல் கொப்பளிக்க
தீச்சூட்டில்
உன்னை ஏற்றினாய்...
உளம் வெதும்பும்
உடல் கொதிக்கும்
தணலிலே
உன்னைக் காட்டினாய்
வீரம்,மானம்
மனிதம் சிதைய
உன்னை நீயே
தழலாக்கினாய்...
நொடியின் கணம்
உன்னை மாய்த்து
சாவின் ரணம்
உணர்ந்துவிட்டாய்...
மனதற்றவர் மதியற்றவர்
சேர்க்கையை
உணர்த்திவிட்டாய்...
தமிழன் அணி திரள
உசுப்பிவிட்டாய்...
முத்துக்குமரா முத்துக்குமரா
உணர்ச்சி தழலென்று
காட்டிவிட்டாய்...
முடங்கிய இனத்தின்
முடிவில்
தொடங்கிவைத்தாய்...
முணங்கிய வேதனையினை
மூட்டிவிட்டாய்...
முத்துக்குமரா முத்துக்குமரா
எழுப்பிவிட்டாய்...
புலியின் தடை தகற
தழலாலே மூண்டுவந்து
பலியான உற்றார் மீள
உடல் உருக்கி
பெரும் படை திரட்டினாய்...
உளம் உருக
தமிழரை மாற்றினாய்...
முத்துக்குமரா முத்துக்குமரா
இன்றும் எங்கள்
நெஞ்சில் வாழ்கிறாய்...
தழல் சூழ்ந்த
மாவீரனாய்...
முத்துக்குமரா முத்துக்குமரா
மூண்ட தீயில்
வெடியாகிய தீக்குமரா
என்றும் உன் தழல்
அணையாது...
தமிழர் தாகம்
தணியாது...
Subscribe to:
Comments (Atom)













