பெற்றெடுத்த வயிறுபற்றி எரிய
பேதலித்த மனத்துடன்அயல் நாட்டில் நாம"்
''உதயம் மண்ணில்நாம் காணும் போது உதிரம் வடித்து அன்னையவள் உயிர் பிழைத்ததே உலக அதிசயம்
"'தொப்புள்க் கொடி அறுக்கையில் துவண்டாலும் மழலையான எம் குரல்கேட்டு மகிழ்ந்திடுவாள்
மாமன் மாமிஉறவினையும் மறந்திடுவாள்
பெற்ற பிள்ளை எங்களையே
மன்னன் என்று அணைத்து அரவணைப்பால்"!!
கவிழ்ந்து விழுந்து பூமி பார்க்கையில் உடும்பு பிடித்தான்தன் மகனென்று
ஊரார்க்கு சொல்லி உளம் பூரிப்பால்!!
்"'தவழ்ந்து நானும் எழுகையில் தன்னை மறந்திடுவாள் தன் மகனே உயிரெனத் தன்னுயிர் தனை இழப்பால்"
'அடிஎடுத்து முதலடி வைக்கையில்ஆனந்த மேலாகி அன்றவள் சிரித்த சிரிப்பில் பூக்களும் மலர்ந்திடுமே"'!1
தத்தி தத்தி நானும் ஓடுகையில் ஐயோ மகனே என்று ஆவி துடித்திடுவாள் தவறி விழுவோம் நாமென பயம் கொண்டு"
"அதட்டி என் அப்பனவன் எனை விரட்டவே அங்கலாய்த்த அன்னை அடிவயிற்றில் அமிலம் சுரந்திடுமே"
"ஆடி ஓடி அன்னை மடிசாய்ந்த நாட்க்களை நினைக்கையில்
ஆவி போவதே நலமாம்'''''''''''
