Saturday, October 1, 2011

அறிவு விளக்கேற்றுவோம்!

அடியெடுத்து வைப்பதற்கே
ஆண்டவனைத் தேடி-நின்றால்
கற்களுக் கெல்லாம் என்ன கால்களா முளைக்கும்?

ஆண்டவனை வேண்டி
அழுவததே வாழ்வென்றால்
அவனும் வரமாட்டான்
வேண்டிய புருஷனும்-நம்
வீட்டுக்கு வரமாட்டான்.....

"அகல் விளக்கை- ஏற்றிய
அழகான கைகளால்
"அறிவு" விளக்கேற்றி
அவனியில் புறப்படுவோம்"

Saturday, September 24, 2011

அவள்.....!

கவிஏடு சுமந்தே நான்
வருகின்ற பொழுதெல்லாம்
என்-
முகம் தொட்டுக் சிரிக்கின்ற- அடி
முல்லைப் பூ நீதானா!......

அறிவு விளக்கேற்றுவோம்!

அடியெடுத்து வைப்பதற்கே
ஆண்டவனைத் தேடி-நின்றால்
கற்களுக் கெல்லாம் என்ன கால்களா முளைக்கும்?

ஆண்டவனை வேண்டி
அழுவததே வாழ்வென்றால்
அவனும் வரமாட்டான்
வேண்டிய புருஷனும்-நம்
வீட்டுக்கு வரமாட்டான்.....

"அகல் விளக்கை ஏ-ற்றிய
அழகான கைகளால்
"அறிவு" விளக்கேற்றி
அவனியில் புறப்படுவோம்"

அம்மா

அன்பியல் ஓடையில்
நூற்றிதழ் தாமரையாய்
பூத்தவளே!
என்றன்
உயிரினுக்கே உயிரான
அன்னையே!
நீ என்னைப்
பெறவில்லை என்ற
உண்மை என்னவோ
உண்மைதான்
ஆம்! நீ என்னை
அறிவற்ற பிள்ளையாய்
பெறவில்லை என்ற
உண்மை என்னமோ உண்மைதான்!......

மணிமேகளையின்
கையிலுள்ள அமுதசுரபி
அள்ள, அள்ளக்
குறையாது என்று
சீத்தலைச் சாத்தன்
சாற்றியது என்னவோ
பொய்தான்!
என்னைப்
பொறுத்தவரையில்
என் அன்னையின் கைகளே
உண்மையான
அமுதசுரபி என்பதை
நான் கண்டு களிக்கிறேன்!

-ராசா-

(செங்)கொடி வணக்கம்!

{தோழர் முத்துக்குமார் உடல் தமிழகத்தை எழுப்பியது போல் என்னுடைய உடல் இந்த 3தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்.
இப்படிக்கு
தோழர் செங்கொடி}


கொடிக்காகத்-தன்னைக்
கொளுத்திக் கொண்ட உயிருண்டு;
உயிர்காக்கத்-தன்னைக்
கொளத்திக் கொண்ட கொடியுண்டா?

உண்டு;
அதன்பேர் செங்கொடி;
இனிமேல்-
அதுதான் என் கொடி!

தொன்மைத் தமிழரெலாம்-ஒரு
தொப்புள் எழுத்த கொடி;இவள்
தொப்புள் எழுந்த கொடிகளைக் காக்க-
வெப்புள் விழுந்த கொடி!
இதுதான்-
எனது-
வணக்கத்திற்குறிய கொடி!இதை-
வணங்காது வேறெதற்கு முடி?

மூவுயிர் விடு!-ஈடாக என்-
பூவுயிர் எடு!
என்று
எமனிடம் தந்தாள் தன்னை;
செங்கொடி கன்னியாயினும்-மூன்று
சேய்களைக் காத்த அன்னை!

ஆம்;
அந்தக்-
கன்னி தீயானால்; துயாகிக்-
கன்னித் தாயானால்!

மரண தண்டனைக்குத்தான்
மரண தண்டனை தர வேண்டும்!

செங்கொடியே! என் செல்ல மகளே!
சேவிக்கத் தகுந்ததுன் சேவடி துகளே!

ஒன்றுரைப்பேன்; உன் தியாகத்திற்கில்லை ஒப்பு;
என்றாலும்- அதை
ஏற்பதற்கில்லை; அது தப்பு!

-வாலி-

ஹிட்லரின் வரிகள்

நாங்கள் சரணடைய மாட்டோம்.
எக்காலத்திலும் அது நடக்காது.
ஒருவேளை அழிந்து போகக்கூடும்.

ஆனால்,

அப்படி ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் இந்த உலகத்தோடு சேர்ந்தேதான் அழிந்துபோவோம்.

-ஹிட்லர்

Friday, September 23, 2011

சேவல்

கொஞ்ச நேரத்தில் குழம்பாகப் போவது தெரியாமல்
குதூகலமாய்க் கூவியது சேவல்!

தவம்

மவுனம் ஒரு
மாபெரும் தவம்
என்ற உண்மை
நீ பேசாத
தருணங்களில்
தெரிந்து கொண்டேன்...!

மர்மங்களின் பரமபிதா நேதாஜி

நீ மறைந்த காலங்கள்
கடந்து விட்டாலும்
உன் வாழ்க்கையின் அர்த்தங்கள் மறையவில்லை

நீ போரடிய காலங்களில் நான் ஏன் பிறக்கவில்லை என்ற வருத்தம்!
பிறந்திருந்தால் உன்படைக்காக உயிரையும் தந்திருப்பேன்!

ராசா

அவள் நினைவுகள்

உறங்கவும் பிடிக்கவில்லை
உறங்கினால் விழிக்கவும் பிடிக்கவில்லை!
ஏனென்றால்

நினைவிலும் அவளின் கணவுகள்!
கணவிலும் அவளின் நினைவுகள்!....

மங்கை முகம்

தென்றல் விளையாடும்
செந்நெல் வயற்காட்டில்
அன்றந்த மங்கையின்
அழகு முகம் பார்த்தேன்!
வாடாத மேனி
வற்றாத தேனூற்று
அவள் ஆடாத மயிலாள்
அசையாச் சிலையல்ல......

ஆசை

என்மேல் உனக்கேன்
இத்தனை ஆசை
மண்மேல் என்போல்
எத்தனையோ பேரிருக்க
என்மேல் உனக்கேன் இத்தனை ஆசை?

தேசம் சீர்படுமோ!

தாழ்ந்த நிலையினில் வீழ்ந்து கிடப்பவன் தாவி எழுவதுண்டு
வாழ்வை ருசித்தவன் வஞ்சகர் ஆகினால்
வீழ்ச்சி யவர்க்கும் உண்டு

யாரைக்கேட்டு இப் பாரைப் படைத்தாரோ
வீரர்கள் நாமல்லவோ
சீறும் புலியென
மாற வில்லை யெனில்
தேசம் சீர் படுமோ?

உழைப்போர் சொர்க்கம்

மலையை மண்ணாக்கி
மண்ணை பொன்னாக்கி விண்ணை குடையாக்கி
வீடே அது வாக்கி

நாட்டை உருவாக்கி வளமாக்கினோம்
நாமே பலியாகி எருவாகினோம்!

அணையைப் பெரிதாக்கி அதிலே நீரைத்தேக்கி பாத்தி பிரிச்சி கட்டி
பயிரைப் பறிச்சி நட்டு

உணவை விளைவாக்கி மலையக்கினோம்
ஒட்டும் வயிராகும் நிலையாகினோம்!

கருத்தை வளமாக்கி
கரத்தை பலமாக்கி
பயத்தை இனிபோக்கி
பகையைத் துளாக்கி

உடமை பொது வாக்கி
பறை சாற்றுவோம்!
உழைப்போர் சொர்க்கத்தை உருவாக்குவோம்!......

எண்ணிப்பாரு

அழுதாத்தான் அம்மா கூட பாலுகுடுப்பா-கொழுந்தே

அமைதியாக படுத்திருந்தா சும்மா- இருப்பா!

உழுதாத்தான் பூமியிலே பயிர் விளையும்-

சும்மா
உழைக்காம இருந்தாக்கா புல்லு-மொளையும்

மந்திரத்தால் எங்காச்சும் மாங்கா விழுமா?

மன முயர்ச்சியில்லாம செல்வம் பெறுகுமா?

எந்திரம் போல் மனுசன் இங்கே வாழக்கூடாது

எத்தனுக்கு அஞ்சி தலை தாழக் கூடாது

ஒரு கையே தட்டும்போது ஓசை இருக்காது

உரிமைக் குரலே எழுப்பாம ஞாயம் பிறக்காது

வறுமை வறுமை என்று சொன்னா பசியடங்காது!

வயற்காட்டில் வெதைக்காம அரும்பி இருக்காது!

அசைஞ்சிகிட்டே இருந்தாத்தான் மனுசன்னு பேரு

அசையாம கிடந்தாக்கா சவமென்பாரு

திசை காட்டும் கருவிபோல மனசு இருக்கனும்

திடமாக அதே நோக்கி முன்னேற வேணும்

தண்ணிக்குள்ளே மீனுபோல அசைவிருக்கணும்

தடையைக் கண்டு அஞ்காம வழி நடக்கணும்

எண்ணி யெண்ணிப் பார்த்து நெசத்தே கண்டு பிடிக்கணும்-சிங்க

ஏறு போல வீரனென்னு பேரு எடுக்கணும்.....

புதுப் பாதை தோன்றும்?

பொழுது விடிந்தால் புதுப்பாதை தோன்றும்;
அழுது மடியம் அவல நிலை மாறும்.!

ஆண்டான் அடிமை என்ற வேண்டா வார்த்தைகளை
மாண்டு மடியச் செய்ய
வேண்டும் என்றே முழங்கிடுவோம்!

காலை எழும் பரிதி
மாலை விழும் அதுபோல்
ஓல மிட்டே திரியும்
உன்மத்தர் கூட்டம் மாய....

பொழுது விடிந்தால் புதுப்பாதை தோன்றும்;
அழுது மடியம் அவல நிலை மாறும்.!

Thursday, September 22, 2011

புதிய பாதை

பாதை தெரியுதடா நல்ல பாதை தெரியுதடா
பட்டினிப் பஞ்சம் பசிப்பிணி போக்கும்
பாதை தெரியுதடா....

கொட்ட மடித்தவர் கூட்டம் ஒழிந்து கொள்கை வழியிலே நின்று நிலைத்து வெட்டிப் பிரிந்தவர் எட்ட விலகிட நன்னெறியாளர் கண்ணொளி போல பாதை தெரியுதடா.....

கடல் அலைபோல படையுது பாராய்
விடுதலைப் படையின் குரல் கேளாய்
சட சடவென்று சாயுது தீமை
சங்கொலி ஓசை எங்கும் முழங்க பாதை தெரியுதடா.....

செங்கொடி ஏந்தி போரிட வாராய்!
சேவையின் சின்னம் அதுவே பாராய்!
சங்கநாதம் முழங்குது கேளாய்!
வேங்கைப் படைகள் எழுந்தது பாராய்!......

ஒன்றுபடுவோம் வென்றெடுப்போம்

ஊரெல்லாம் வளைத்து வைத்த நிலம் அனைத்தையும்
உழவனுக்கு சொந்தமாக்குவோம்...
பாடுபட்டு உழைப்பவர்க்குத் தலை வணங்கியே பாரதத்தின் வீரரென்று பட்டம் சூட்டுவோம்.....

நாட்டு மக்கள் வேர்வைக்காக உதிரம் கொட்டுவோம்....!
தேவையெனில் உதிரம் சொட்டுவோம்!

ஊழலில்லா உலகமைக்க
ஒன்றாகுவோம்
நாம் ஒன்றாகுவோம்.......
வரம்- இறப்பிலும் இணைதல்

சாபம்- உனக்குப்பின் வாழ்க்கை

சிற்றின்பம்- கண்ணத்து முத்தம்

பேரின்பம்- கட்டில் யுத்தம்

சொர்க்கம்- கொஞ்சும் நிமிடங்கள்

நரகம்- கொள்ளும் மௌனங்கள்....!

திருக்குறள்திருக்குறள்

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனுஞ் சொல்.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கின் மெல்ல நகும்

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.-குறள்

ஈழத்தின் இறுதி வரிகள்

தமிழீழ சொந்தங்களின் இறுதி வரிகள்: எங்கள் கல்லறை மீது எழுதி வையுங்கள்!
எங்களின் சாவிற்கு காரணம்
எங்களின் மொழிதான் என்று....

இதற்கு மேல் அவர்களால் இப்போதைக்கு வேறென்ன கூற முடியும்...?..

தந்தை பெரியார்

அஹிம்சை என்பது கோழைகளின்,கேடிகளின்,மானமற்ற மக்களின் ஆயுதமே!
எனவே தமிழ் மக்களே 'உயிரைக்கொடுத்து உரிமை பெறும் கழகம்' என்று ஒரு கழகம் துவக்கப்பட வேண்டும்.. "தலைமை கட்டளை இட்டவுடன் உயிரைக் கொடுக்க ஆயத்தமாய் இருக்கிறேன். இது உறுதி" என்று இரத்தத்தில் கையொப்பம் போட்டு கழகத்திற்கு கொடுக்கும் இளைஞர்கள் ஒரு 100 பேர்கள் தேவை. உடனே தேவை.

"உள்ளதைப் பங்கிட்டு உண்பது; உழைப்பைப் பங்கிட்டு செய்வது" என்ற நிலை ஏற்பட்டால் கடவுளுக்கு வேலையோ அவசியமோ இருக்காது!
தந்தை பெரியார்....

FIDAL CaSTRO

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்
-fidal cstro

மாவீரன் விஸ்வநாதன் ஆனந்த்

இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி நாயகன்.....
world chess champion and world NIIT mind champion.... The great viswanadhan anand...ரஷியாவில் கடந்த உலக சதுரங்கப்போட்டி நடந்தபொழுது...... நடப்பு உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த்
நிர்ணயிக்கும் இடத்தில்தான் எதிராளர் வரவேண்டும் ஆனால் ஆனால் ரஷிய வீரரான அவர் கடுங்குளிர் தொடங்கிய சமயம் தேதி குறிப்பிட, அவரின் குளிர் பிரதேசத்திற்கு சென்று ஆடினார்.
கடுங்குளிர் பழகிய அவருடன் குளிர்படாமல் வாழ்ந்த விஸ்வநாதன்
போராடி இறுதியில் மாபெறும் வெற்றி கொண்டார்...! ரஷிய மக்களும் ரஷியாவின் தொலைக்காட்சிகளும்
அவர் நாட்டவர் வெற்றி பெறவேண்டி உயிரை கையில் பிடித்துக்கொண்டு பார்த்துக் கொண்டிருந்தன.... அவர் ஜெயித்தால் அவருக்கு பல கோடி பரிசுகளும் அரசில் மிகப்பெரிய பொறுப்பும் அந்த நாட்டு அரசு அறிவித்தது... ஆனால் நாமோ நம் விஸ்வநாதனிற்கு என்ன செய்தோம்....?. Rasa

தமிழ்நாடு

ராஜிவ் கொலையாலிகளை தூக்கிலட காங்கிரஸார் உண்ணாவிரதமாம்!
இவர்களையல்லவா முதலில் தூக்கிலிட வேண்டும்....! போபர்ஸ் ஊழல், போபால் விஷவாயு கசிவால் சுமார் 2800 பேர் இறந்ததாகவும் 2600 பேர் பாதிக்கப்பட்டதாகவும் அரசு தரப்பில் சொல்லப்பட்டது ஆனால் இறந்தவர் பல்லாயிரம் பேர் ஆகும். இதனால் போபல் ஒரு ஹீரோஷிமா நாகசாகி அளவிற்க்கு இன்றும் உள்ளது...
மேலும் பல ஊழல்களில் பல இலட்சம் பேரைக் கொன்றுள்ளனர் இன்றைய ஆளும் காங்கிரஸார்
இலங்கைக்கு இராணுவத்தை அனுப்பி எம் தமிழ் மக்களை 1482 பேரைக்கொன்றான் இந்த ராஜிவ்காந்தி...
தமிழ்ப் பெண்களை கற்ப்பழித்து....
சிறுமிகள் என்றுகூட பாராமல்.. அதுவரை சிங்கள ராணுவம் செய்யாத ஒன்றை இந்திய ராணுவம் கற்ப்பித்தது (சின்னஞ்சிறுமிகளை கற்ப்பழிப்பதைத்தான்) இப்படி தேசத்துரோக செயல்களில் ஈடுபட்ட தலைவன் இறந்துவிட்டான்.
அவனிற்கு மூலையாக செயல்பட் மற்ற தீவிரவாதிகளை(காங்கிரஸ் உறுப்பினர்களை) தூக்கிலிடக்கோரி நாம்தானே உண்ணாவிரதம் இருக்க வேண்டும்?.....

Saturday, August 27, 2011

தமிழீழம்

கொண்ட லட்சியம் குன்றிடாதெங்களின் கொள்கை வீரனின் காலடி மண்ணிலே நின்றுகொண்டொரு போர்க்கொடி தூக்குவோம் நிச்சயம் தமிழீழம் காணுவோம்
-ராசா-