பள்ளி செல்லும் போது....
பாதை இரண்டும் வேறு
என்னைப் பார்த்த பின்
தான் செல்வாய்
பள்ளிக்கூடம் அன்று.
ஞாபகம் வருகுதா... உனக்கு
ஞாபகம் வருகுதா..?
யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Wednesday, September 17, 2014
Tuesday, September 9, 2014
உன்னையிழந்த நாட்கள் பற்றி
இதோ...இன்னுமொரு கவிதை...!
பிரிவுச்சிலுவையில் அறையப்பட்ட
என் காதலின் வலி
உயிரின் அத்தனை அணுக்களிலும்
பாறாங்கல்லாய் கனகனக்கிறது..
எனது கவிதைகளின்
கண்ணீர்த்துளிகளில்
உருண்டுகொண்டேயிருக்கின்றன
உன்னோடான என் நினைவுகள்..
தீயின் நிழலில்
எரிந்து சாம்பலாகும்
என் தனிமையின் ரணங்கள்
கர்ண கொடூரமானவை.
காரணமற்ற பிரிவு
காதலுக்கு மட்டும்
எப்படித்தான் வந்து தொலைக்கிறதோ..?
நீ நான்
நாமாகி
நாம்
மீண்டும்
நீ நானானோம்..
அப்படி ஏனானோம்..?
நமக்கே தெரியவில்லை.
பார்த்துக்கொண்ட பார்வைகள்
பேசிக்கொண்ட வார்த்தைகள்
முத்தமிட்ட உதடுகள்
சேர்ந்திருந்த மனசுகள்
எல்லாமும் இன்று
பாழடைந்த சினைவுகளாய்
நிர்மூலமானது ஏன் பெண்ணே...?
காற்றில் கிழிபடும்
நூலறுந்த காற்றாடியாய்
நம் வாழ்க்கை..
போகும் திசையும் புரியவில்லை
சேரும் வழியும் தெரியவில்லை..
மீண்டும் ஒரு முறை
பார்க்கும் ஆவல் எனக்கில்லை.
வலிக்க வலிக்க
நகரும் நாட்களில்
இன்னும் வலியேற்றத்திராணியற்ற
நாணல் நான்..!
இனி
உன் வழியில் நீ
என் வழியில் நான்..
ஆயினும்
எவ்வழியில் நம் காதல்????
அதற்கு மட்டும் விடை சொல்லிப்போ..!