Saturday, January 31, 2015

நீயில்லையென்றால்...

தூக்கமில்லாத இரவுகளோடு போராடித்
தோற்றுப்போனபோதும்
கனவுகளுக்கு ஏங்கிய இரவுகள் அதிகம்!
நினைவுகளும் ஞாபகங்களும்
ஒவ்வொரு இரவிலும் என்னைக்
கொன்று போட்டாலும், உன்
நினைப்புடன்தான் உயிர்க்கின்றேன்
அதிகாலைகளில்...!
இப்பொழுதெல்லாம்...  அதிவிரைவுச்
சாலைகள் எனக்கு ,
பழக்கப்பட்ட ஒழுங்கைகள் போல இருக்கிறது !
வேகங்கள் என்னைப் பயமுறுத்துவதில்லை!
சதா ரணமுமாய் சாவதைவிட
செத்துப்போனால் பரவாயில்லை
என்று தோன்றும்போது,
சில அசாதாரணங்கள் கூட....
சாதாரணமாய் மாறிவிடுகின்றனவோ ?
நான் செத்துத் தொலைந்தால் நன்றாய்
இருக்கும்!

நங்கை உன் கையில்

பெண் குலத்தின் தலைவியே
பொறுமையின் இலக்கணமே
அன்ன நடை பயிலும் மாதே
அன்பின் பிறப்பிடமே
அழகின் இருப்பிடம் நீ
தனி வழியாம் உன் வழியாம்
கயல் மீனோ உன் கண்ணில்
கொவ்வை பழம் என்றோ
புன்னகை உதட்டிற்காய்
புல்லினம் கூடினவே
கன்னத்தில் குழி அழகு
கரும் கூந்தல் அதில் அழகு
முத்தான மூக்குத்தி
உன் மூக்கிற்கே தனியழகு
முழுமதி போல் முகம் இருக்க - அதில்
மூன்றாம் பிறை வடிவில்
நீள் புருவம்
புனிதம் உள்ள குணவதியே
பூவுலகின் நாயகியே
கண்ணகி நீ வாழனும்
கணவனுக்கு பெருமைகளை சேர்க்கனும்
மாமியார் போற்றனும்
மற்றவர் வாழ்த்தனும்
இல்லறம் சிறக்கவே - நாட்டில்
நல்லறம் பெருகனும்
நாளைய சந்ததி
நன்நிலை பெற்றே
நலமுடன் வாழ்வது
நங்கை உன் கையிலே

நங்கை உன் கையில்

பெண் குலத்தின் தலைவியே
பொறுமையின் இலக்கணமே
அன்ன நடை பயிலும் மாதே
அன்பின் பிறப்பிடமே
அழகின் இருப்பிடம் நீ
தனி வழியாம் உன் வழியாம்
கயல் மீனோ உன் கண்ணில்
கொவ்வை பழம் என்றோ
புன்னகை உதட்டிற்காய்
புல்லினம் கூடினவே
கன்னத்தில் குழி அழகு
கரும் கூந்தல் அதில் அழகு
முத்தான மூக்குத்தி
உன் மூக்கிற்கே தனியழகு
முழுமதி போல் முகம் இருக்க - அதில்
மூன்றாம் பிறை வடிவில்
நீள் புருவம்
புனிதம் உள்ள குணவதியே
பூவுலகின் நாயகியே
கண்ணகி நீ வாழனும்
கணவனுக்கு பெருமைகளை சேர்க்கனும்
மாமியார் போற்றனும்
மற்றவர் வாழ்த்தனும்
இல்லறம் சிறக்கவே - நாட்டில்
நல்லறம் பெருகனும்
நாளைய சந்ததி
நன்நிலை பெற்றே
நலமுடன் வாழ்வது
நங்கை உன் கையிலே

நினைவுகள்

சுற்றி வரும் சாமியை மறந்து.... அவளின்
பின்னால் சுற்றியவன்,
"கண்ணைக்குத்தும் சாமி" என்று.... நண்பன்
சொன்னபோதும் முறைத்தவன்,
கூட்டத்தில் எட்டியெட்டி அவளைத் தேடி...
தன்னையே தொலைத்தவன்,
இன்று..... கடந்தகால நினைவுகளில்
என்னை நானே தேடுகிறேன் !!!

Tuesday, January 13, 2015

காடு கரை தந்ததை
களிப்புடனே அறுத்திட்டு
போகியன்று கழித்து
சூரியனுக்கு பொங்கலிட்டு
மனம்பொங்க மகிழும் விழா..

மாடு கண்ணு குளிப்பாடி
மஞ்ச குங்குமம் பூசி
மனசார நன்றி சொல்லும்
மகத்தான திருவிழா...

நகரத்துச் சொந்தமெல்லாம்
கிராமம் தேடி நாடி வரும்
தைப்பொங்கல் திருவிழா..

சல்லிக்கட்டு விளையாடு
சிலம்பம் சுத்தி நீயும்
இளவட்டக்கல்லு தூக்குவென
மஞ்சத்தண்ணி ஊத்தியே
ஆசையோடு அத்தபொன்ணு அழைக்க
மவுஸ் பிடிக்கும் கையாலே
மாடு பிடிக்க மாட்டேனென்று
டவுனு மச்சான் பதறி ஓட

உறவுகளை ஒன்றிணைத்து
உள்ளங்களை மகிழவைத்து
மதம் மறந்து சாதி துறந்து
தமிழரென்ற உணர்வு
தழைத்தோங்கச்செய்யும் விழா..

நீட்டமான கரும்பெடுத்து
வட்டமாய் கடித்து துப்பும்
தாத்தாக்கள் மத்தியில்
தோலுரிக்கத்தெம்பின்றி
சாறெடுத்துக்குடிக்கும்
இளந்தாரிகள் கூடும் விழா..

விவசாய நிலமெல்லாம்
விளைநிலமாய் வீடாக
தலைசாய்ந்த நெற்கதிரெல்லாம்
புகைக்கக்கும் ஆலையாக
விஷத்தை பாய்ச்சினாலும்
நாம் வாழ தன் உதிரத்தை
உணவாகத்தரும் நிலமகளுக்கு
நன்றி கூறும் விழா..

உழவன் வாழ்வதாலே
உயிர்கள் வாழுதென்றே
உலகோர்க்குப் பறை சாற்றும் விழா
நம் பொங்கல் விழா
பொங்கட்டும் பொங்கலும்
பெருகட்டும் தைமகளின் பெருமையும்...

பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

Thursday, January 8, 2015

நேதாஜியின் மர்மம்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்


எப்போதுமே மிதவாதத்துக்கும் தீவிரவாதத்துக்குமான ஆதரவில் இளைய சமுதாயம் இரண்டாவதில்தான் அதீத ஆர்வமும் ஆதரவும் கொண்டிருக்கும். நேதாஜி என்ற பேரைக்கேட்டாலே இன்றளவும் இளைஞர் கூட்டம் எழுச்சியடைவதற்கான வரலாறு மிகப்பெரியது. பிரிட்டிஷார் இந்தியாவை அடிமைப்படுத்தியிருந்தபோது காந்தி ஒரு பக்கம் அஹிம்சைப்  போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தார். அதேப்போல நாடு முழுவதும் பலவிதமான குழுக்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிராக தீவிரவாதச் செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர்.

இந்தியாவில் முதன் முதலாக ஆங்கிலேயருக்கு எதிரான தீவிரவாதப்போராட்டத்தை இராணுவப்போராட்டமாக மாற்றியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்தான். இன்றைய இந்திய இராணுவத்திற்கு அடித்தளமிட்டவரும் இவர்தான். (அவருடைய வரலாற்றைப்பற்றி எழுதுவதனால் அதற்கு தனியே ஒரு பதிவு தேவைப்படும் என்பதால் இந்தப்பதிவின் தலைப்பிற்கான சமாச்சாரத்தை பற்றி மட்டும் இதில் பார்க்கலாம்.

சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய தலைவராக வந்திருக்கவேண்டிய நேதாஜி... உண்மையிலேயே என்ன ஆனார் என்று தெரியாமலேயே 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் நடந்த ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக அவருடைய வரலாறு முடிக்கப்பட்டதுதான் இன்று வரையிலும் சுதந்திர இந்தியாவின் தீராத மர்மங்களில் நேதாஜிக்கு முதலிடம் வழங்கியிருக்கிறது.

1945ம் வருடம் நேதாஜி ஜப்பானின் தாய்பே நகரில் நடந்த ஒரு விமான விபத்தில் இறந்ததாக அரசாங்கக்குறிப்புகள் மூடப்பட்டிருக்கின்றன. ஆனால் உண்மையில் அவர் அவ்வாறு இறக்கவில்லை. உண்மையில் அப்படியொரு விமான விபத்தே நடக்கவில்லை என்று அப்போதே செய்திகள் கசிந்திருக்கின்றன. 1945ம் ஆண்டு நடைபெற்றுக்கொண்டிருந்த போரில் ஜப்பான் சரணடையும் முடிவை எடுத்த மூன்றாவது நாளில் நேதாஜி விமானவிபத்தில் இறந்ததாக வெளியிடப்பட்ட செய்தியே, ஆங்கிலோ-அமெரிக்க படைகளிடம் போர்க்கைதியாக சிக்காமலிருக்க நேதாஜியால் நடத்தப்பட்ட நாடகம்தான் என்றும் ஒரு தகவல் உலவுகிறது. நேதாஜி இறந்ததாக தகவல் வெளியான சமயத்தில் உண்மையில் அவர் ஜப்பானின் டோக்யோ நகரத்தின் வழியாக சோவியத் யூனியனுக்கு சென்று விட்டதாக தகவல் உண்டு.

இன்று வரையிலும் நேதாஜி விஷயத்தில் இந்திய மக்களுக்கு தெரியாமல் போன மர்மமாய் நீடிப்பதில் கீழ்க்காணும் விஷயங்கள் கவனிக்கப்படவேண்டியவை...

1)   தாய்வானின் அதிகாரிகள் விமான விபத்து நடந்ததாகச் சொல்லப்பட்ட தேதியில் அப்படியொரு விபத்து நடந்ததாக எந்தவித ரெக்கார்டுகளும் இல்லை என்று மறுத்திருப்பது இந்திய அரசாங்கத்தால் பெரிதாகக் கண்டுகொள்ளப்படாமல் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

2)   பிரிட்டிஷ் இண்டெலிஜென்சியின் ரகசியக்கோப்புகளில் பிரிட்டிஷ் பிரைம் மினிஸ்டர் கிளமெண்ட்ஸ் அட்லீ ‘’ போஸ் இப்போது எங்கிருக்கிறாரோ அங்கேயே இருக்கட்டும்’’ என்று முடிவெடுத்ததாக பதியப்பட்டிருக்கிறது. இது நடந்தது அக்டோபர் 1945ல். அப்படியென்றால் ஆகஸ்ட் 1945ல் போஸ் இறந்ததாகக் கூறப்பட்டது பொய்தானா?...

3)   CIA எனப்படும் சென்ட்ரல் இண்டெலிஜென்ஸ் ஏஜென்சி 1950 வரையிலும் நேதாஜிக்கான தேடுதல் வேட்டையை தொடர்ந்திருக்கிறது. உண்மையிலேயே 1945லேயே நேதாஜி இறந்திருந்தால் 1950 வரையிலும் அவரைத்தேடியிருக்க வேண்டிய அவசியமென்ன?...

4)   1946ல் கம்யூனிஸ்ட் பார்ட்டியைச் சேர்ந்த கேலாச்சர் என்பவர் ஒரு பொதுமேடையிலேயே அப்போதைய இரீஷ் பிரசிடெண்ட் டி’வலேராவை டப்ளின் நகரில் நேதாஜியை வரவேற்றதாக விமர்சித்திருக்கிறார். டி’வலேராவும் இதற்கு மறுப்பேதும் தெரிவிக்காதது கவனித்தில் கொள்ளவேண்டிய முக்கிய அம்சம். அத்தோடு மட்டுமில்லாமல் 1946க்கு பிறகு இந்தியாவிற்கு வந்திருந்த டி’வலேரா பத்திரிக்கையாளர்களிடம் ‘’நான் இங்கே போஸை சந்திப்பேன் என்று எதிர்பார்த்து வந்தேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்!

5)   பிரிட்டிஷ் இண்டெலிஜென்சின் ஒரு ரிப்போர்ட்டில் நேதாஜி எங்கிருக்கிறார் என்பது நேருவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அதனால்தான் அவர் வெளியுறவுத்துறையை மட்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு விஜயலெட்சுமி பண்டிட்டை ரஷ்யாவுக்கான இந்தியத்தூதராக நியமித்திருக்கிறார் என்று குறிப்பெழுதப்பட்டிருப்பதாக ஒரு தகவலும் உண்டு.

6)   ரஷ்யன் கம்யூனிஸ்ட் பார்ட்டியின் புரட்சியாளர் அபானி முகர்ஜீ என்பவரின் மகன் கோகா என்பவரை இந்தியத்தூதர் டாக்டர்.சத்யநாராயணா சின்ஹா சந்தித்தபோது, அவரிடத்தில் கோகா தனது தந்தையும் நேதாஜியும் சைபீரியாவில் சிறைக்கைதிகளாக பக்கத்து பக்கத்து அறைகளில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் அங்கே நேதாஜிக்கு சிறை ரெக்கார்டுகளில் ‘கிளாசி மாலங்’ என்று பெயரிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதைவிட அதிர்ச்சிகரத்தகவல் என்னவென்றால் சிறையிலிருந்து நேதாஜி பலமுறை நேருவுக்கு தான் இந்தியாவுக்கு திரும்ப விரும்புவதாகவும், தன்னை மீட்பதற்கான ஏற்பாடுகளைச்செய்யுமாறும் கடிதம் எழுதியிருக்கிறார் என்பதுத

பெண்மை

பெண்மை..!
ஐந்து இளைஞர்களுக்கு ஓர் ஆசை -
மலையேற வேண்டும் என்று.
மலை ஏறி இறங்கியபோது மழைவந்து விட்டது.
அடிவாரத்தில் இருந்த ஒரு குடிசைவீடு.
ஆசையாய் வரவேற்றான் குடிசைக்கிழவன்.
“ விடாதுமழை; இருந்து காலையில்
செல்லுங்கள் ’’ என்றான்.
தேநீர் கொடுத்தாள் கிழவனின் பேத்தி.
பதினாறுவயதுப் பட்டாம் பூச்சி. வஞ்சகத்தின்
நிழல்படியாத பிஞ்சுமுகம். பேதைமையும்
அச்சமும் பின்னி மிதக்கும் கண்கள். அவள்
பூமிக்கு மேலே ஒரு புதையல். ஐவரையும்
மேலே பரணில் படுக்கச் சொல்லிவிட்டுத்
துள்ளி மறைகிறது தாவணி மான்.
விடிகிறது; மழை ஓய்கிறது; ஐவரும்
விடைபெறும்நேரம்.
கதவின் பின்னால் நின்று கண்ணீர் மறைக்கும்
கண்களால் ஐவரையும் மாறிமாறிப் பார்க்கிறாள்
பேதைப் பெண். உள்மனதில்
ஒரு கேள்வி ஆடுகிறது:
“ உங்களில் யார் நேற்றிரவு என் பெண்மையைத்
திருடித் தின்றவன்? ’’
எப்போதோ படித்ததாக
''கவிப்பேரரசு வைரமுத்து '' சொன்ன
ஒரு கன்னடச் சிறுகதை.., என்
ஞாபகத்திலுருந்து உங்களுக்காக....,

தீ

இழப்பென்று எதையும் நினைத்து
இறப்பென்று வரும் ? என்ற
இயந்திரத்தன வாழ்வுக்கு நடுவில் - என்
வாழ்க்கையின் சாஸ்திரவேர்கள் மட்டும்
இளமையிலேயே கருகிக் கொண்டிருப்பதேன்?
எதையோ தேடுகிறோம் என்றுணர்ந்த மனம்
எதையென்பதை மட்டும் உணர்த்த மறுத்து,
எழும்பும் அலையுடன் நீலக்கடலையும் ...
எங்கோ அதிலினையும் நீல வானையும்
எனக்குள் அடிக்கடி எடுத்துக்காட்டி
உயிருக்குள் உணர்த்தும் சேதியென்னெ?
சித்தனுக்கும் கிறுக்கனுக்கும்
ஒரு நூலிழை வித்தியாசமென்று
எங்கோ படித்த ஞாபகம்...
சித்தனா, கிறுக்கனா?
என் இன்றைய நிலையென்று
எனக்கே புரியாத மாயம்!
விழிகளை மூடித்திறக்கும் போதெல்லாம்
மூச்சுக்காற்றின் மூலஸ்தானத்தில்
முற்றிய தீயொன்று சுடர் விட்டெறிகிறது!
ஞானத் தீயா?
வேள்வித் தீயா?
காமத் தீயா?
காதல் தீயா?
ஒவ்வொருமுறை யோசிக்கும்போதும்
ஓங்கி ஒலிக்கும் ஒற்றைக் குரலொன்று-
உனக்குள் எரியும் இந்தத் " தீ " தான்
உன் உயிரை ஒருநாள் எரிக்குமென்று!

Wednesday, January 7, 2015

ஆடித்தள்ளுபடிகளில் கூட
உடை வாங்கித்தராதவனென்று
அட்சயதிருதியைகளில் கூட
நகை வாங்கித்தராதவனென்று
பண்டிகைநாட்களில் கூட
பொருள் வாங்கித்தராதவனென்று
சம்பளதினங்களில் கூட
இனிப்பு வாங்கித்தராதவனென்று
மூகூர்த்ததினங்களில் கூட
பூக்கள் வாங்கித்தரதாவனென்று
அவளுக்கிருக்கும் ஏகவருத்தங்களுக்கு
அப்பால் சிறு தலைவலிக்கு
பதறியடித்து தைலமொன்றை
தடவிவிடும் பேரன்பும் இருக்கிறது !!

பிறப்பு

பிணைந்த இதழ்களில்
உமிழ்நீரை பரிமாறத்தொடங்கிய
போது துவங்கியது அந்த
கண்ணாமூச்சியாட்டம்
அடித்தோலின் சுரப்பிகள்
வழிய அங்கிங்கு போக்கிட்டு
அலைகழித்து நீண்டது ஆட்டம்
ரெட்டைநாக்குகள் மார்பெல்லாம்
ஊர்ந்து கரும் திராட்சைகளை
துழாவி ருசித்திருந்த போது
அடிவானத்துக்கு அப்பால்
தொலைந்தே போயிருந்தது
பின் மயிர்காடுகளினூடாக
மறுமுனை நோக்கி
யோனியின் கடலை கடந்த
பெரும் யுகங்களுக்குப்பின்
காமத்தின் மெல்லிய
வெண்ணிறத்துகள்களால்
மீட்டெடுக்கப்பட்டது
நான் எனும் பிரக்ஞை !!

Friday, January 2, 2015

இதயக்குதிரை

எக்கணமும் உள்மனதில்
கடிவாளமற்ற குதிரையொன்று
கண்டபடி ஓடித்திரியும்;
எவ்வளவோ முயன்றுவிட்டேன்
நிறுத்திவிட முடியவில்லை!
இதயத்தில் கைவைத்தோரெல்லாம்
இது வெறும் இதயத்துடிப்பென்றார்;
அப்படியென்றால் ஓடட்டுமென்று
அப்படியே விட்டுவிட்டேன்;
என்றாலும் சில நாட்கள்
‘ அதுவாக நின்று விடுமா-இல்லை
அதை இழுத்துப்பிடித்து நிறுத்தலாமா? ‘
என்றபடி யோசனையொன்று
அக்குதிரை மீது சவாரி செய்யும்…!