Saturday, January 12, 2013

என்னாச்சி...... ????

என்னாச்சி....?!

பச்சரிசி பொங்க பானை பனைவெல்லம்- வாங்கியாச்சி !

மஞ்ச கொத்து இஞ்சிக் கொத்து கொல்லையில- பரிச்சாச்சி !

வாழை மரம் வாழைத்தாரு தோட்டத்தில- வெட்டியாச்சி !

கரும்புக் கட்டு ரெண்டுகட்டு கடைத்தெருவில -வாங்கியாச்சி !

மோரக் கடைஞ்சி வெண்ணையை உருக்கி நெய்யை- உறுக்கியாச்சி!

வீட்டுக்கு வெள்ளை அடுச்சி,பண்டம் பழச -ஒதுக்கியாச்சி !

மாட்டுக்கு புதுசா தாம்புக் கயிறு
மூக்கனாங் கயிறு -போட்டாச்சி !

கொம்ப சீவி புதுசாகட்சி சாயத்த பூசியாச்சி!

நெல்லிச் செடி மாஞ்செடி
வீட்டுக்கு -வெட்டியாச்சி!

கொத்து கொத்தா நெல்லுமணி
வாசலுல -கட்டியாச்சி !

அரிசி அரைச்சி திண்ணையில
மாக்கோலம் -போட்டாச்சி !

கையிரண்டுக்கும்
மருதாணி-அப்பியா­ச்சி !

இதையெல்லாம்
கனவுலதான் -கண்டாச்சி !

வயலெல்லாம்
தண்ணியில்லாம -வறண்டாச்சி !

எங்க வயிரெல்லாம்
கஞ்சியில்லாம - காஞ்சாச்சி !

எங்கவயிரெல்லாம்
வத்திபோயி -நாளாச்சி !!
வத்திபோயி நாளாச்சி !!!


No comments:

Post a Comment