கப்பல் ஒட்டி,
கவி புனைந்து,
வெறும் கதருடுத்தி,
சொத்தை விட்டு,
சுகத்தை விடுத்து,
உறவை உதறி,
கொடி காத்து,
குருதி சிந்தி,
சின்னவர் உயிர் நீத்து,
சிறை சென்று,
களி தின்று,
கல்லுடைத்து,
செக்கிழுத்து,
உணவு மறுத்து,
உறங்க மறந்து,
உணர்வை கொட்டி
பெற்றுத்தந்த சுதந்திரத்தை நானும்
மதிக்கவே செய்கிறேன்..
யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Sunday, November 23, 2014
நான்
நான்?
விடை தெரியா வினாவொன்று
வழி தெரியாமல் உள்ளிருக்க,
வடிகாலின்றி எண்ணங்கள்
மனத்திரையில் மன்றாடும்.
'நான்' என்று ஏதுமில்லை;
பிறர் சொல்லும் 'நான்' நானில்லை;
மனம் கூறும் 'நான்' பிடிக்கவில்லை;
எந்தையும் தாயும் உருவாக்கிய
'நான்' தெரியத்தான் இல்லை!
பல வடிவெடுத்ததில்
என் உருவம் மறைய,
என்னை நானே தேடுகிறேன்;
என்னை நானே எதிர்க்கிறேன்!
'என்'னை 'நான்' பார்க்கும் கண்ணாடி
புகையாய் இருக்க,
பனிமூட்டம் தானோ?!
கை வீச மறைந்திடுமோ
'நான்' யார் என்று?!
Subscribe to:
Comments (Atom)