Friday, November 22, 2013

ஜன்னலை திறந்ததில் தெரிந்தன
பஞ்சுபோல் பறக்கும்
வெண்பனித்துகள்கள்.
கைக்கெட்டும் தூரத்தில்
வந்திவிட்டது மற்றும் ஒரு பனிக்காலம்
எலும்புகள்வரை ஊடறுத்துசெல்லும்
குளிருக்கு அஞ்சாமல்,
காத்திருப்பேன் காதலுடன்
அடுத்துவரும் இளவேனில்
காலத்திற்காய

உன்னிடம் பேசக்கூடாது
என்று சபதம் செய்து ,
மானங்கெட்ட தனமாய்,
"உன்னை ரொம்ப பிடிக்கும் ,
என்கிட்டே பேசு .."
என்று அழுது உன்னிடம்
பேசிவிடும் ,
ஒவ்வொரு சண்டைப்
பொழுதுகளிலும் ,
எத்தனை தடவை
"இந்த காதலுக்கு கண் மட்டுமில்ல
சூடு ,
சொரணை எதுவுமே இல்லை "
என்று என்
மீதே உமிழ்ந்து கொண்டாலும் ,
தான் இருப்பதை நிரூபித்து
வெற்றி கண்ட மகிழ்ச்சியில்
அத்தனையையும் அட்சதைகளாய்
ஏற்றுக்கொண்டு
சிரித்துக் கொள்கிறது
இந்த காதல் !

Friday, November 15, 2013

இரும்பு சிறையில்
இருந்துகூட தப்பி விடலாம் - ஆனால்
அவள் விழி சிறையில் இருந்து தப்ப
இயலாது!!!!

காதலுக்கு பெற்றோர்
சம்மதிக்கவில்லை என்ற
பிரச்சினையே எனக்கு எழவில்லை..!
காரணம்..
.
.
.
.
.
.
என் காதலியே சம்மதிக்கவில்லை..

Wednesday, November 13, 2013

இறுக்கி இறுக்கிஅணைத்துக் கொள்கிறாய்என்னை உன்நினைவுகளில்நேரில்வந்தால் மட்டும்அதே இறுக்கத்தோடுஅணிந்து கொள்கிறாய்உன்வெட்கத்தை... இன்று மட்டுமாவதுஉன்வெட்கத்தை அவிழ்த்துவிட்டுஎன்முத்தத்தை அணிந்து கொள்வாயா நீ...

ஒவ்வொரு முறையும்
பாடத்தில் தவறு செய்யும்போது
நான் உனக்குஒரு முத்தம் தருவேன்அதே போல் பாடத்தைசரியாகச் செய்யும் போதுநீ எனக்குஒரு முத்தம் தரவேண்டும்என்று சொன்னதற்காகஇப்போதெல்லாம்தவறுகளை மட்டுமேசரியாகச் செய்கிறாயடி...

Wednesday, November 6, 2013

**என் வாழ்க்கை பகலில் உன் நினைவுகளோடு....
இரவில் நீ என் கனவுகளோடு........:)**
*என் இனிய இரவு வணக்கம் ..:)**

Monday, November 4, 2013

நீ என்னோடு கொண்டிருப்பது
காதலா?
கனவா?
மறுஜென்மமென்று ஒன்று இருந்தால்
அதில் நீ நானாக பிறந்து பார்
அப்போது தெரியுமடி என் காதலின்வேதனை..
உனக்கு ஏன் சிறகுகளில்லை? இருந்தாலும் நீ தேவதை! .....
காத்திருக்கிறேன்...
உன்னுடன் ஒரு உரையாடலுக்கான சந்தர்ப்பம் வேண்டி..!
கண்ணிரண்டை விற்றுவிட்டு
கண்ணாடியை வாங்குறோம்,
விளக்கை அணைத்துவிட்டு
வெளிச்சத்தை தேடுறோம்;
நாலும் தெரிந்தவர்கள்
தனியாளா நிக்கிறோம்,
சொந்தபந்தம் இல்லாம
செத்த பிணமா அலையுறோம்;
நல்ல நாலு ஏதுமில்லை
நிகழ்ச்சின்னு ஒண்ணுமில்லை
கல்யாண நாளைக் கூட
தொலைபேசியில் தீர்க்கிறோம்;
இயக்கிவிட்ட எந்திரமா
இரவு பகல் உழைக்கையில
வியர்வையில் சரித்திரத்தை
காய காய எழுதுறோம்;
காற்று போல மண்ணு போல
மனசெல்லாம் ஆசை ஆசை,
ஆசைப் பட்ட அத்தனையையும்
அற்ப பணத்துக்கே விற்கிறோம்;
பணமென்னும் காகிதம் தான்
விதியை கூட மாத்துதே,
வீடுமனை பல இருந்தும்
மனசு ஒத்தையாவே வாடுதே....

Friday, November 1, 2013

இனிய தீபாவளி வாழ்த்து !


 உழைப்பே மத்தாப்பு....! உண்மையே பட்டாசு...!
அறவழி வாழ்வும்......அரவணைப்பும்....
அழகாய் சுழலும்.....தரச் சக்கரம்...!
கோபம் குறைப்பது புஸ் வானம்..!
குழந்தை போல் சிரிப்பது சீனி சரம்..!
அன்பாய் பேசினால் அது அல்வா...!
பாசமாய் நேசித்தால் பால்கோவா...!
ரசித்து வாழ்ந்தால் அது ரசகுல்லா...!
இனிக்க நடந்தால் இனிய பாதுசா..! நம்
இதயம் என்பது திரு விளக்கு - நல்ல
நினைவுகள் அதிலே ஒளி தீபம்...! எனவே
நீங்கள் நினைத்தால் தினமும் தீபாவளி...!
நினைவில் ஏற்றுங்கள் நம்பிக்கை தீப ஒளி..!
அனைவருக்கும் எனது
இதயம் நிறைந்த இனிய
தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்..!