Saturday, December 8, 2012

பெண்ணின அணங்கிய,உன்னை கண்டிட்டபொழுதினிலே,பொங்கிடும், நுரைத்தானே - என் கண்களில்தங்குதே,

தொட்டுத் தான் பார்த்திட,பட்டென்று வெடிக்குமோ?படப்படப்பும் தொடங்குமோ?பாதி வழிச்செல்ல,பாதையும் மறக்குமோ?

தமிழும், அமிழ்தும்,தவழும் இதழ்கள்,ஏதேதோ பேசுதடி,என்னிடம் கேட்காமலே,இருவழி சாலையுன்,இதழ்வழி தொடங்குமோ?

இருட்டிலும் தவறாமல்
கடக்கிறேன்,மேலுதடை மென்மையாய்,கீழுதடை மாதுளையாய்,

எறும்பாய், துரும்பாய்
உன்னுடலதில் ஊற,உலர்ந்திட்ட மேனியும்கேணியாய் மாறுமோ?முத்துக்களைப் போன்றே,ஒவ்வொன்றும் மின்னுமோ?

துடைக்கிறேன், துவைக்கிறேன்,கற்றைக் கூந்தல் நுழைந்து,கால்நகம் முடிய,ஒற்றை துளி மீறா,என்னிதழ்க் கொண்ட,

அணு அடங்கக் கூடுமோ -குமரியுன் மேனி,வாடை நுகர்ந்திட்ட,ஆடைக் கலைத்திட்ட நொடிகளில்,

அணைத்திட அணைப்போடா - நீயும் நெருங்க,நொறுங்கும் இதயமெனது,ஏனோ, சன்னம் துளைத்தப்பொத்தலாய் போனதடிஎன்னிதயமும் அதன் அறைகளும்,

இப்படியே முப்பத்தி-மூன்று, வயதும் போனதடி,தலையணை துணையொன்றே,இணையென இணைந்து,துயில்ந்த காலம் போதுமடி,அந்த துறவு துறந்து,

உன் உறவு ஒன்றே உலகு,என்க்கொண்டே உனைச்சுற்றிவலம் வந்தும்,காதல் மாங்கனி நவிலஏனோ இன்னும்நேரம் கேட்கிறாய்,சமயம் அந்த சமயம்

இன்றே கூடுமோ – உன்வாய்வழிக் காதல்மொழிஎன்காதினை நனைக்குமோ?காத்திருக்கும்,எந்தன்வாழ்வும், கவிதையும்,

இன்னும், எத்தனைபிறவிகள் எடுத்தாலும்.

No comments:

Post a Comment