Tuesday, December 25, 2012

ஏனடி

ஏனடி பெண்ணே..!
உனக்கும் எனக்குமான
நெருக்கத்தில் என்ன உரசல்?
இடைவெளியற்ற இடத்தில் ஒரு குழப்பம் ஏற்படுகிறது கண்ணே...!

எப்படியோ...  உள்ளிற்குள்
உருண்டு திரண்டு ஏதோ ஒன்று நம்மை இணைத்து வைக்கிறது
இருந்தும் நெருங்க மறுக்கின்றாய்..

என் இடப்பக்கத்திற்குரியவளே...அக்கம் பக்கம் ஆனவளே..

உன் நினைவுச் சிதறல்களுடனேயே
இடவலமெங்கும் நகர்வலம் போகின்றேன்!
வலுவான என்
காதலில் வாழ்பவளே..

என் எண்ணங்களுக்குள் விழுந்தவளே..

வண்ணங்கள் கொண்ட வாழ்க்கையில்
பிணக்கங்கள் வேண்டாமடி சகியே...!

அன்னமிடும் வேல்விழியே...
ஆலம் விழுதுகளாய் - உன்
ஞாபகங்கள் ஓயாமல் தேயாமல்
ஓங்கியே நிற்கிறது கிளியே...!

அரும்பினிலே முதிர்ந்தவளே..!
அமுதத்தினிலே நிறைந்தவளே..கடன் பட்டவனானேனடி - உன் காதலின் வலிமையிலே...
என் காலக்கடலோடு கலந்தவளே...!

மனம், உடம்பு, நேரத்தின் மீதுஆதிக்கம் செலுத்திய தமிழச்சியே!
என்னோடு எப்போதும் நீ மட்டும்தானடி..!!

No comments:

Post a Comment