தன் வயிற்றில் தங்கிய என்னை
பத்துமாதம் பக்குவமாய் பத்தியமிருந்து
தன் பாதி உயிர் கொன்று
மீதி உயிரில் எனை ஈன்று
என் முகம் பார்த்து
மகிழ்ச்சியில் மயங்கியவள்
விழிக்கையில்......
புதிதாய் பிறக்கிறாள் அவளும்!!
உள்ளத்தில் கொண்டவனை தான்கி
உடலுக்குள் என்னுயிர் தான்கி
உலகுக்கு அறிமுகம் செய்து
இரத்தத்தை பாலாக்கி - என்
பசிதீர்த்து பாசத்தில்
பக்குவமாய் பகுத்தரிவூட்டி
பாசத்தை பங்குபோட்டவள்
அப்பா-அத்தை-மாமா என்றெல்லாம்!!
சந்திரனை வர்ணிக்காத கவிஞனில்லை
அதற்க்கு ஒளிதரும் உதயத்தை
கவனிப்பதில்லை எவரும்
ஈன்ற தாயும் இப்படித்தான்!!
கண்டவளை கொண்டு
பெத்தவளை பிரித்து
பாசத்தை நசுக்கி
வினை அறுக்கிறான் மானிடன்........
No comments:
Post a Comment