உன் பார்வைக்காக
காலங்கள் பல காத்திருந்தேன்
உன் பதிலுக்காக
யுகங்கள் பல கடந்தேன்
உன் சம்மதம் வாங்க
ஜென்மங்கள் பல எடுத்தேன்
பரிசாக உன் புன்னகை மட்டும்
எனக்கு கொடுத்தாய்
போதுமடி அது எனக்கு
உன் பிரிவென்பது பெரிதில்லை
என்னில் உன் நினைவுகள்
ஓய்வில்லா குதிரை போல
வருஷங்கள் பல முடியலாம்
பாதைகள் மாறி போகலாம்
உன் நினைவுகள் பத்திரமாய்
என் இதய அறையில்
உனக்கான வாழ்க்கை வேறு
எனக்கான வாழ்க்கை வேறு
என்று இரயில் பாதையாய்
பிரிந்த போதிலும்
நம் நினைவுகளின் பாதை
ஓரே தொடர்கதையாய்
எல்லை இல்லா அண்டத்தில்
என் படைப்புகள் போல
சேர்ந்து வாழ்ந்த நாட்களில்
சொன்னாய் வளர்பிறை என்று
சேர்ந்து வாழும் நாட்களுக்கு
எழுதினாய் முடிவுரை இன்று
யாரோடு நான் வாழ்ந்தாலும்
யாருக்காக நீ வாழ்ந்தாலும்
என் ஜீவன் நீதானடி
உன் ஆவி நான்தானடி
பூபாலம் இசைக்க
புது பூக்கள் பூக்க
மணவாழ்க்கை இனிக்க
மனசார வாழ்த்தும்......
No comments:
Post a Comment