Friday, April 19, 2013

வானம் பிளந்து வீழ்கின்றது
நெருப்புக் குவியலாய்!

மரண வலியில் துடிக்கும்
உடுக்களைப் பொறுக்கி
செதுக்குகின்றேன் உன்னை!

கவியில் பூ நெய்து
வெண்புரவியில் எனையணைத்து- அடிக்கடி
பூகோள முகம் காட்டியவ
ள்.............

நிலாச் சாளரத்தின்
நினைவுகளின் நிதர்சனத்தில்
களவாய் மோகமுறிஞ்சி.............
இருள் அலைகளுக்குள் உருண்டு பிரண்டவ
ள்...........

இன்று ...............
விரோத முகவரியில் தனையிட்டு
வீம்பாய் போகின்றா
ள் திமிர் பிடித்தவள்!
.

No comments:

Post a Comment