Sunday, April 28, 2013

ஒற்றை ரோஜாஓர் ஊரையே ஆக்கிரமிக்க முடியுமா?

அப்படித்தான் தோன்றியது அவள் என் இதயத்தை நிறைத்தபோது!

மின்மினி வெளிச்சத்திற்கு
கண்கள் இரண்டும் குருடாகுமோ?

அப்படித்தான் தோன்றியதுஅவள் என்னைப் பார்த்தபோது!

ஒரேயொரு நீர்த்துளி சூரியனுக்கே மைனஸ் டிகிரி குளிர் தருமோ?

அப்படித்தான் தோன்றியதுஅவள் என்னோடு பேசியபோது!

தென்றல் காற்று - ஒரு பனைமரத்தை வேரோடு சாய்த்திடுமோ?

அப்படித்தான் தோன்றியது அவள் என்னைத் தீண்டியபோது!

அணில் மூச்சின் வெப்பம் - ஒரு காட்டையே கொளுத்தி முடிக்குமோ?

அப்படித்தான் தோன்றுகின்றது அவளைப் பிரிந்திருக்கும­் ஒவ்வொரு கணமும்...!

No comments:

Post a Comment