எண்ணமெல்லாம்
என்
நினைவுகளெல்லாம்
வண்ணக்கனவுகளாய்
நிறைந்து கிடக்கும்
அழகே அனார்
உனை நெருங்கி
நின் கூந்தல் விலக்கி
உன் காதோரக்கன்னத்தில்
முத்தமிட
எத்தனிக்கும்
ஒவ்வொரு முறையும்
என் கண்களை மூடாது
உன் முகத்தின்
ஸ்பரிச மாற்றங்களை
பார்த்து ரசிக்கவேண்டுமென
நினைப்பேனடி அனார்.
நான் தோற்று நீயே வெல்கிறாய்....!!
நான் தோற்கும்பொழுதும்
நீ வெல்வதில் எனக்கும்
மகிழ்ச்சியே...!!
நீ உன் கூந்தலில்அப்படி என்னடி ஒரு மயக்கமருந்தை
வைத்திருக்கிறாய்....
கை சேர்த்து காதருகே
வரும்போதே நின்கூந்தலின் ஸ்பரிசமும் வாசமும்
எனை மயக்கி என் கண்களை மூடச்செய்து எனது
முயற்சியை தோற்கடிக்கிறதடி!!!
யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Tuesday, April 23, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment