Tuesday, April 23, 2013

எண்ணமெல்லாம்
என்
நினைவுகளெல்லாம்
வண்ணக்கனவுகளாய்
நிறைந்து கிடக்கும்
அழகே அனார்
உனை நெருங்கி
நின் கூந்தல் விலக்கி
உன் காதோரக்கன்னத்தில்
முத்தமிட
எத்தனிக்கும்
ஒவ்வொரு முறையும்
என் கண்களை மூடாது
உன் முகத்தின்
ஸ்பரிச மாற்றங்களை
பார்த்து ரசிக்கவேண்டுமென
நினைப்பேனடி அனார்.
நான் தோற்று நீயே வெல்கிறாய்....!!
நான் தோற்கும்பொழுதும்
நீ வெல்வதில் எனக்கும்
மகிழ்ச்சியே...!!
நீ உன் கூந்தலில்அப்படி என்னடி ஒரு மயக்கமருந்தை
வைத்திருக்கிறாய்....
கை சேர்த்து காதருகே
வரும்போதே நின்கூந்தலின் ஸ்பரிசமும் வாசமும்
எனை மயக்கி என் கண்களை மூடச்செய்து எனது
முயற்சியை தோற்கடிக்கிறதடி!!!

No comments:

Post a Comment