Friday, April 19, 2013

அடுத்தவர் பொருள் கேட்டு
அடம்பிடிப்பேன் மழலையாய்!

அடிப்பார் ஆருமின்றி
அரவணைப்பார் பெற்றவர் !

அழுகை என் ஆயுதமாய்
அதிகாரம் பண்ணும் பருவமது!!

கடுஞ்சொல் கடிந்திடார் - என்
கண்ணீர் கண்டு துடித்திடுவார்!

ஆற்றுவாள் அன்னை அழகாய்
பல பொய் சொல்லி !

அப்பாவோ வீதியுலா காட்டி
பாப்பா தேற வழிதேடுவார்!

காலம் இறக்கை கட்டியதில்
தாவணியும் உடலேறியது!

இன்றும் எனக்குப் பிடித்த அவனை
அடம்பிடிக்கின்றேன்....

முறைக்கின்றனர் முடியாதென்று....
அறைகின்றனர் கன்னம் சிவக்க!

No comments:

Post a Comment