திருமணம்
-------------------
வாழ்க்கைப் பாதைக்காக
தீர்மானிக்கப்பட்ட பயணம்!
கருவறைத் தரிப்புக்களுக்காய்
வழங்கப்பட்ட அனுமதி!
தனிமைச் சாளரம் தாழ்பாளிட
ஈர் மனந் திறக்கும் மங்களச் சாவி!
சரீரம் வருடி சாரீரம் தொடும்
இன்னிசை!
தாலியால் வேலியிடப்படும்
உறவுச்சாலை!
சம்பிரதாயங்களின் முகவுரையோடு
எழுதப்படும் காவியம்!
ரொக்கத்தின் கனத்தில்
இருவரிணையும் சங்கமம்!
வழித்தோன்றலின் வழிவிடலுக்காய்
வாழ்த்துத் தூவும் பூமாலை!
ஆயுள் மன்றத்தில் ஓர்முறையே
அரங்கேற்றப்படும் ஈர் மனக் கவிதை
கண்ணீரும் வெந்நீரும் பன்னீரும்
வழிந்தோடும் நீரோடை!
வாலிப வித்தைகளைக்
கட்டிப் போடும் கடிவாளம்!
கனவுச் சிறகறுத்து மனசை
நனவுக்குள் வீழ்த்தும் தேர்வுமையம்!
நான் நீயாகி........நீ நானாகும்
மனசின் மந்திரப் பிரகடனம்
-------------------
வாழ்க்கைப் பாதைக்காக
தீர்மானிக்கப்பட்ட பயணம்!
கருவறைத் தரிப்புக்களுக்காய்
வழங்கப்பட்ட அனுமதி!
தனிமைச் சாளரம் தாழ்பாளிட
ஈர் மனந் திறக்கும் மங்களச் சாவி!
சரீரம் வருடி சாரீரம் தொடும்
இன்னிசை!
தாலியால் வேலியிடப்படும்
உறவுச்சாலை!
சம்பிரதாயங்களின் முகவுரையோடு
எழுதப்படும் காவியம்!
ரொக்கத்தின் கனத்தில்
இருவரிணையும் சங்கமம்!
வழித்தோன்றலின் வழிவிடலுக்காய்
வாழ்த்துத் தூவும் பூமாலை!
ஆயுள் மன்றத்தில் ஓர்முறையே
அரங்கேற்றப்படும் ஈர் மனக் கவிதை
கண்ணீரும் வெந்நீரும் பன்னீரும்
வழிந்தோடும் நீரோடை!
வாலிப வித்தைகளைக்
கட்டிப் போடும் கடிவாளம்!
கனவுச் சிறகறுத்து மனசை
நனவுக்குள் வீழ்த்தும் தேர்வுமையம்!
நான் நீயாகி........நீ நானாகும்
மனசின் மந்திரப் பிரகடனம்
No comments:
Post a Comment