செவ்விதழ் அதரம் நுகர்ந்து
செம்பிறை நுதல் மத்தியில் - உன்
திரு மாங்கல்யம் சூட்டி........
திரையிட்டாய் உன்னை என்னுள்
இறை சாட்சியாய் அன்பைக் குலைத்தபடி!
என் னிரவிலு முலாவும்
பகலவன் நீயாயினன்.......மன
அகிலத்தின் உயிருமாயினன்!
கணையாழியில் உன்னைப் பூட்டியே
இணையாக இணைந்தனையே பல நாழி!- உன்
கலைமானாய் நானிங்கு பிறக்கையில்
தலைவா !
கவலையேன் என்னில் ஐயம் கோர்த்து!
சகதியில் சயனிக்கும் ஆம்பலும்
மறக்குமோ ஆதவன் காதலை..........
பாவை சிதைந்தேனுன் வார்த்தையில்
தகுமோ செந் தணல் நீ வார்ப்பது!
இடையுடைந்தது உயிரும் மெலிந்தது
உன் மௌனச் சமரில் மெய்யும் தொலைந்தது!
கருவளையம் ஆரணங்கின் எழிலுடைத்தது
பருவமும் குற்றுயிராய் வீழ்ந்தது!!
நம் பனிப்போரின் அறைகூவல்
இன்னும் அகலவேயில்லை....................
நானோ
உன்..................
சொப்பனத்தின் கதவுகளைத் தட்டியே நிற்கின்றேன்
என் சோக புலம்பலை ரசித்தபடியே!
காதல்....................
வார்த்தையல்ல வாழ்க்கை!
உணர்ந்துகொள் அன்பே!- என்
பாசம் முகம் காட்டும் உன்னிலும்
அழகாய் ஆழமாய்!!
செம்பிறை நுதல் மத்தியில் - உன்
திரு மாங்கல்யம் சூட்டி........
திரையிட்டாய் உன்னை என்னுள்
இறை சாட்சியாய் அன்பைக் குலைத்தபடி!
என் னிரவிலு முலாவும்
பகலவன் நீயாயினன்.......மன
அகிலத்தின் உயிருமாயினன்!
கணையாழியில் உன்னைப் பூட்டியே
இணையாக இணைந்தனையே பல நாழி!- உன்
கலைமானாய் நானிங்கு பிறக்கையில்
தலைவா !
கவலையேன் என்னில் ஐயம் கோர்த்து!
சகதியில் சயனிக்கும் ஆம்பலும்
மறக்குமோ ஆதவன் காதலை..........
பாவை சிதைந்தேனுன் வார்த்தையில்
தகுமோ செந் தணல் நீ வார்ப்பது!
இடையுடைந்தது உயிரும் மெலிந்தது
உன் மௌனச் சமரில் மெய்யும் தொலைந்தது!
கருவளையம் ஆரணங்கின் எழிலுடைத்தது
பருவமும் குற்றுயிராய் வீழ்ந்தது!!
நம் பனிப்போரின் அறைகூவல்
இன்னும் அகலவேயில்லை....................
நானோ
உன்..................
சொப்பனத்தின் கதவுகளைத் தட்டியே நிற்கின்றேன்
என் சோக புலம்பலை ரசித்தபடியே!
காதல்....................
வார்த்தையல்ல வாழ்க்கை!
உணர்ந்துகொள் அன்பே!- என்
பாசம் முகம் காட்டும் உன்னிலும்
அழகாய் ஆழமாய்!!
No comments:
Post a Comment