Friday, April 19, 2013

நிலவுச் சாறில்
களவாய் நமக்குள்ளொரு பயணம்!

நட்சத்திர சிதைவு பதிக்கும்
படிக்கட்டில் நாமும் தடமாகி.....

வெண்முகில் ஒத்தடம் எடுத்து
வியர்வையும் மெல்லத் துறந்து......

ஆதவன் ஆச்சரியமாய் புல்லரித்து
இளம் பனியும் தூறல் சேர வழி விட்டு......

எண்திசைத் தென்றலும் வழி தேடி
நம் சுவாசத்தில் இடறி வீழ்ந்து....................

இறை ஆசியுடன்
இயற்கைச் சாரல் வழி நுழைந்து........

வா பயணிப்போம் காதல் தேசத்தில்
நம்முயிர் பிணைத்து!

No comments:

Post a Comment