ஏதோ இன்று
உன்னை மறந்து விட்டேன் என்று
மனதில் இறுமாப்புடன்
இல்லை இல்லை
போலி கௌரவத்துடன்
தலை நிமிர்ந்து நடக்கின்றேன்
மனமோ எள்ளி நகையாடுகின்றது
தோற்றவனின் புலம்பல்
இவ் உலகில் மாறுபடவில்லை என்று
தெரியவில்லையடி அன்று
நான் செல்லும் பாதை
சரிதானா என்று
ஆனபோதும்
தாய் வழி நடக்கும்
சிறு குழந்தை நான் என
உன் வழித்தடம் தொடர்ந்தே
என் விழியன் தேடல் தொடர்ந்தேன்
மறு தாயாக எண்ணிவளே
மறந்துவிட்டு போனதென்ன ?
மங்கையவள் மௌனமும்
காதலே என சொல்லி
பொய்யான ஒன்றை நிஜம் என்கிறேன்
என் வாசலில் நீ வரமாட்டாய் என
மனது ஒரு ஓரமாக உணர்ந்தாலும்
மனது முழுவதுமாய் வியாபித்திருக்கிறதே
நான் உன் மேல் கொண்ட காதலின்
பச்சை குத்தப்பட்ட சில சுவடுகள் :
உன்னை மறந்து விட்டேன் என்று
மனதில் இறுமாப்புடன்
இல்லை இல்லை
போலி கௌரவத்துடன்
தலை நிமிர்ந்து நடக்கின்றேன்
மனமோ எள்ளி நகையாடுகின்றது
தோற்றவனின் புலம்பல்
இவ் உலகில் மாறுபடவில்லை என்று
தெரியவில்லையடி அன்று
நான் செல்லும் பாதை
சரிதானா என்று
ஆனபோதும்
தாய் வழி நடக்கும்
சிறு குழந்தை நான் என
உன் வழித்தடம் தொடர்ந்தே
என் விழியன் தேடல் தொடர்ந்தேன்
மறு தாயாக எண்ணிவளே
மறந்துவிட்டு போனதென்ன ?
மங்கையவள் மௌனமும்
காதலே என சொல்லி
பொய்யான ஒன்றை நிஜம் என்கிறேன்
என் வாசலில் நீ வரமாட்டாய் என
மனது ஒரு ஓரமாக உணர்ந்தாலும்
மனது முழுவதுமாய் வியாபித்திருக்கிறதே
நான் உன் மேல் கொண்ட காதலின்
பச்சை குத்தப்பட்ட சில சுவடுகள் :
No comments:
Post a Comment