Monday, February 11, 2013

காதலுக்கு நன்றி.....

வற்புறுத்தி வருவதில்லை காதல்.கட்டாயபடுத்தி வாழ்வதில்லை வாழ்கை.
அது -ஒரு புரிந்துணர்தல்.

ஒரு அழகான கவிதை.நேசிக்க சுவாசிக்க நம்பிக்கையளிக்கும்,
நம்மை வாழ்வின் வேறு ஒரு பரினாமத்தை கானச்செய்யும்
உருவமில்லா குழந்தை.

சொல்லி புரிய வைப்பதில்லை,உணர்ந்து தெரிந்து கொள்ளுதல்.நன்றி கண்ணம்மா!...

உன்னால் நான் உணர்ந்த அந்த விவரிக்க இயலாத உணர்வுகள்……

என்னை எரித்தாலும் மிஞ்சும்என் சாம்பலிலும் எஞ்சி இருக்கும்.எனக்கான….,என் கவிதைக்கான….களமாக நீ இருந்ததற்கு….,

மறந்து போன
என் எழுத்துக்களை
எனக்கு மீட்டு தந்ததற்கு...
வாழ்வின் வெளிச்சம் குடுத்ததற்கு....
வாழ வேண்டும் என்ற வேகம் தந்தற்கு.....

நன்றிகள் பல..  பல!...


No comments:

Post a Comment