Wednesday, February 13, 2013


கள்ள மனம்

காதல் பொழுதொன்றில் கரைந்து
நீ போகின்றாய்
மோதல் கொண்டிரு மூச்சினை
ஆழ்கின்றாய் -சாதலின் வேதமாய்
சாத்வீகம் கொள்கின்றாய்
மீதம் இன்றியே நீயேன்
மூச்சினை உரிகின்றாய்..??

கூதல் குளிர்வெளியில்
போர்வைக்குள் தேங்கினாய்
போதும் ஒழி மறுத்து-முத்தப்
போதையை ஊற்றினாய்
காதில் சிணுங்கி இன்பக்
காட்சியை உளறினாய் -ஊடும்
வேதமேன் சொல்கிறாய்..??

பாயும் மனவொளியைப்-பந்தாடிப்
பார்க்கின்றாய்-உடல்
காயும் இரவொன்றில் -வெட்கங்கள்
தோய்க்கின்றாய்-நீயும் நானுமாய்
நிலவிளைத்துப் போகின்றது
ஓயா முத்தங்களின்
ஓசை வெடிக்கின்றது ...!!

சாயும் உன் கூந்தல் வலை -எனை
சாவடிக்கும் நேரமொன்றில்
வாயில் தீமூட்டி என்னில்
தெளித்திருப்பாய் -மறுகணமே
காயில் கனித்திருக்கும் சுவையொன்றைக்
கண்முன்னே காட்சி செய்வாய்-உயிர்
மேயும் உன்கண்ணில் இறங்குதென்
கள்ள மனம் ...!!

No comments:

Post a Comment