தமிழே!..
தமிழே!.. என் உயிரே!...
மனதில் தோன்றி எண்ணங்களில் உருமாறி
வார்த்தைகளில் நீ
வெளிப்படும் அழகு!.. அமுது!...
உன்னை சிந்திக்கும் நொடிதனில் வார்த்தையாக வெளிப்பட்டு
எதிரில் இருப்பவரின் மனம் கவரும் நீ கம்பீரம்!.. கலை!...
நதியின் நளினம் போல
உன் சொல்லின் வளைவும் நெளிவும்
பேசுபவரையும் மயக்கும் புவிஈர்ப்பு விசையாய்
நீ இனிமை!.. இளமை!...
சாகும் நாள் வரை உன்னை நேசித்து
சுவாசித்திட வரம் தா
என் தாயே!..என் தமிழே!...
No comments:
Post a Comment