எத்தனை முறைதான் சாவதடி ?
துடுப்பே இல்லாத ஓடமடி - நீ
துணையாய் வந்தால் போதுமடி
அடுப்பே இல்லாத சமையலடி -நீ
அணைத்தால் அதுவே வேகுமடி
மங்கையே அச்சம் போதுமடி - நம் மஞ்சத்தில் நாணம் சாகும்மடி
அங்கத்தில் எல்லாம் அத்துப்படி- உன்
அத்தனை பல்லும் முத்து கொடி ....
இதழில் ஊரும் செந்தேனடி -உன்
இடையில் வீழ்ந்து செத்தேனடி
கழுத்தில் கருகிய மச்சமடி -கொஞ்சம்
குனிந்தால் கோபுர உச்சம்மடி
இத்தனை அழகும் பாவமடி - நான்
எத்தனை முறைதான் சாவதடி ?
பித்தனாய் ஆக்கி விட்டாயடி - உன்
வெத்திலை இதழால் தொட்டாயடி
மழைபோல் பொழியும் முத்தமடி - நம்
மஞ்சத்தில் மூன்றாம் யுத்தமடி -உன்
காதல் திணமும் தோணுமடி - நீ
கடைசி வரைக்கும் வேணுமடி ..
மடிவதில் அச்சமே இல்லையடி -உன்
மடியில் மடிந்தால் சொர்க்கமடி
செடியில் நீறுக்கு வேரில் வழி - நீ
சென்று விட்டால் எனக்கு ஏது வழி..?
No comments:
Post a Comment