Wednesday, February 13, 2013


என் பனித்துளியின் பல்லக்கு

யாழின் இழை வழியே
வீழ்ந்த தேன் துளியில்
அவரோகணிக்கின்றாய்
உன் இசை புதிது
அது என்னை இசைக்கின்றது

பூக்களின் ஆடை
களைதலின் அந்தரங்கம்
நீ-அத்தனையும் அழகு
அமிர்தம் விழுங்கிய
சொர்க்கமும் நானும் ..!!

அலைக்காற்று கரையை
இழுப்பதைப் போல்
உன் தாவணி என்னில் விழும்
செத்தே விடுகின்றேன்
மறுஜென்மத்தில் உனக்காய்
மூச்சு விடுகின்றேன்

நீ அழகிய ஜன்னல்
தென்றல் எறிகின்றாய்
வெட்கச் சிறகு முளைத்த
அன்றில் நீ ...
கவிதைகளை பார்த்து
சிரிக்காதே தீர்ந்துவிடும்

என் பனித்துளி நீ
உன்னில் நான் உறைந்து
விடவே பார்க்கின்றேன்
பல்லக்கில் பயணப்படும்
மரண ஊர்வலம்
காதல்...!!

No comments:

Post a Comment