Wednesday, February 13, 2013


உயிரைப் போலொரு வலி

காதலெனும் புத்தகத்தை இரவல் வாங்கிப்
படிக்க வந்தவள் போல் நீ
உன் வேதனை நிரம்பி வழியும்
திருவிழாக் கூட்டம் போல் நான்
நீயே கடவுளாகிறாய்
உயிராகிறாய்
பேருருவாய் வளர்ந்து எனை தின்கிறாய்

வெற்று உயிராகி நானே
காவுகொள்ளென்று காத்திருக்கிறேன்
சொற்கொலை
மண்டியிட்டு முகம் புதைத்து
அதே கூட்டத்தில் நானுமிருக்கிறேன்
நீயுமிருக்கிறாய் அதுவுமிருக்கிறது

அதுவென்றால் எது ?
இது ....

No comments:

Post a Comment