திட்டித் தீர்க்கின்றாய் -16-
(ஒரு உயிர் ஒரு கண்ணீர் )
உயிரின் ஒவ்வொரு உடைசல் வழி
பிளந்து வருகின்றதுன் வார்த்தை
இதயத்தின் ஒவ்வொரு பாகங்களையும்
கூறு போட்டுத் துளைக்கின்றதுன் பார்வை
முன்னால் வீழ்ந்த கூந்தலை
மின்னல் வேகத்தில் பின்னால் எறிந்து நீ
திட்டல் குறியானாய்
என் மனதை முறுக்கிக் கட்டிப் பந்தாக்கித்
தூர எறிந்தாய்
விரல்களை சொடுக்கி
உதடுகளை உருட்டி வார்த்தைகளில்
ஜீவிதம் கொண்டாய்
எனதுயிரே
குண்டடிபட்டுப் பிணாமாய் சாயும் என்னினம் போல்
உன் கோபத்தொனியினால் நின்றுகொண்டே
மெல்லச் சாய்கிறேன்
சந்தேகப் பொறி வரியால்
எரித்து விடுகின்றாய்
மந்தையில் மிதிபடும் மண்புழுப்போல்
துடித்துத் துண்டாகின்றேன் ,மேலும்
திட்டித்தீர்க்கின்றாய் இனி திட்டல்களல்ல
ஒரு உயிர் ஒரு கண்ணீர்
(ஒரு உயிர் ஒரு கண்ணீர் )
உயிரின் ஒவ்வொரு உடைசல் வழி
பிளந்து வருகின்றதுன் வார்த்தை
இதயத்தின் ஒவ்வொரு பாகங்களையும்
கூறு போட்டுத் துளைக்கின்றதுன் பார்வை
முன்னால் வீழ்ந்த கூந்தலை
மின்னல் வேகத்தில் பின்னால் எறிந்து நீ
திட்டல் குறியானாய்
என் மனதை முறுக்கிக் கட்டிப் பந்தாக்கித்
தூர எறிந்தாய்
விரல்களை சொடுக்கி
உதடுகளை உருட்டி வார்த்தைகளில்
ஜீவிதம் கொண்டாய்
எனதுயிரே
குண்டடிபட்டுப் பிணாமாய் சாயும் என்னினம் போல்
உன் கோபத்தொனியினால் நின்றுகொண்டே
மெல்லச் சாய்கிறேன்
சந்தேகப் பொறி வரியால்
எரித்து விடுகின்றாய்
மந்தையில் மிதிபடும் மண்புழுப்போல்
துடித்துத் துண்டாகின்றேன் ,மேலும்
திட்டித்தீர்க்கின்றாய் இனி திட்டல்களல்ல
ஒரு உயிர் ஒரு கண்ணீர்
No comments:
Post a Comment