Wednesday, February 13, 2013


திட்டித் தீர்க்கின்றாய் (13)
(மௌனப் புசிப்பு)

உருண்ட விழிகளில் -என்
உலகை உருட்டி
விருந்து செய்கின்றாய்
சொற்காயம் கண்ட
உயிரில் புன்னகை
மருந்தைப் பெய்கிறாய் ...!!

காரணங்கள் கேளாது
கடைத் தெருவில்
பொம்மைகளும்
குழந்தையாய்
அடம் கொள்கின்றாய்
மீண்டும் தீ வளர்த்து
வதம் செய்கின்றாய்

உருக்கும் பார்வையில்
வறுக்கும் பாசையில்
திட்டித் தீர்க்கின்றாய்
வார்த்தைகள் ஒவ்வொன்றிலும்
கவனமாய்-பெண்மையை
கட்டிக் காக்கின்றாய்..!!

திட்டித் தீர்க்கின்றாய்
ஆரோகணத்தில்
திட்டல் இசைக்கின்றாய்
அவரோகணத்தில்
மௌனம் புசிக்கின்றாய் ....!!

No comments:

Post a Comment