Wednesday, February 13, 2013


நம்பிக்கையாய் ஒரு நிழல்

ஒரு சில மின்மினிகள்
அந்த வெம்மை
இரவில்
எரிகின்ற
ஒன்றிரண்டு நட்சத்திரங்கள்

தூரத்தே ஒரு
தீக்குண்டம்
நுண்ணிய ஒளியில்
என் தனிமையை
தைத்துக்
கொண்டிருந்தேன்

கந்தலாடைகளாய்
மூலையில் -ஒரு
காதலும்
தைக்கப்படாத
துணி நீளமாய்
நம்பிக்கையும்....!!

அளர்வுடன்-என்
அறுந்த விரல்கள்
எதையோ நோக்கி
பயணப்பட்டன

அந்நொடியில்
எதையும் உணரமுடியவில்லை
அந்த உச்சிப்பல்லியின்
இச் இச்சென்ற
ஒலியைத் தவிர ....

அந்த இழை
வன்மையாகவும்
வேகமாயும்
இரவு பகல் பாராது
உழைத்தது

உயிரை
மனதை
வேதனையை....
தைத்து ஓய்ந்து
புலரும் நொடியில்
சிதைந்த
கின்னர நாணை
தைத்து
இசைக்கத்தொடங்கியது

No comments:

Post a Comment