Wednesday, February 13, 2013


அம்மாவை பற்றி கவிதையா

நிச்சயமாக முடியாது என்னால்

காதலை பற்றி எழுத

ஒரு காகிதமும்

சில பொய்களும் போதும்...!

அம்மா உன்னை பற்றி

எழுத உலகத்தில் உள்ள

அணைத்து காகிதங்களும் பத்தாது

என்னை பொறுத்தவரை

கடவுளை நான் நம்ப காரணமே

எதை எதையோ படைத்த அவன்

அம்மாவையும் படைததர்க்காகதான்..!

அம்மா

நான் சொன்ன

முதல் வார்த்தை..

எல்லோரும் சொல்லும்

முதல் வார்த்தை...

..மா அம்மா

நாங்கள் அன்றே சொன்ன முதல் கவிதை அம்மா..!

No comments:

Post a Comment