Wednesday, February 13, 2013


அன்பு அவள் மொழி

ஆறுதல் அவள் வார்த்தை

இன்முகம் அவள் முகவரி

ஈடில்லாதது அவள் பாசம்

உயர்வானது அவள் பண்புநலன்

ஊக்கமளிப்பாள் உயர்வு பெற

எதிரிக்கும் காட்டுவாள் கருணைமுகம்

ஏமாற்றம் நிகழும்போதும் இன்முகம்

ஐயங்களின் எல்கைக்கப்பால் அவள்ஆன்மா

ஒற்றுமையே அவள் வேதம்

ஓடம்போல்தான் கரைசேர்ப்பாள் நம்மை

ஔரவமானது அவள் சக்தி

அஃதே அவளே அம்மா.

No comments:

Post a Comment