தேசத்தின் அவலம் -குழந்தைத் தொழிலாளி ...
ஞாயிறு முளைக்கையில்
வானம் மறுக்கிறோம் - அதனை
உப்புக் கடலில்
உலையிடுகிறோம் ....
செடி
மறுத்து மொட்டினை
பறிக்கிறோம் -வியர்வையில்
எறிகிறோம் ....
இளம் பனி
பெயர்த்து -பாலைவனத்தில்
படையலிடுகிறோம் ...
ஒரு கல்வித்
தலைமுறையில் -அவர்களை
வெளியேற்றுகிறோம்-வாழ்விலிருந்து ...
அதிகாரமோ ,அரசாங்கமோ
அரசியலமைப்போ ,சமூகமோ -கல்வி மறுப்பை கண்டு
கொள்ளாமல் போயின்
தேசம் செய்த துரோகம் -குழந்தைத் தொழிலாளி !!!
No comments:
Post a Comment