மழை தீர்த்த
பின்பொழுதில்
நினைவின் துளிகள்
நீர்த்த பின்னே
மழையென நீ வந்து
நனைக்கும் முன்னே
வார்த்தைகளாய் வடித்தெடுக்க இயலா உணர்வொலிகள் மௌனமாய் குவிந்திருக்க காத்திருந்த கணங்கள் எல்லாம்
கை கொட்டிச் சிரித்திருக்க
நொடிப் பொழுதில் வெடித் தெழும் விம்மல்கள்
கடுகளவும் உனை அடையாது
வைத்திருந்த நேசங்கள் எல்லாம்
காற்று வந்து கலைத்தது போல் துடித்திருந்தேன்
தூரத்தில் துயரங்கள் விழித்திருக்க..
No comments:
Post a Comment