உனக்காய் துடித்த ஓர் இதயம்..உனக்காய் மட்டுமே துடித்த ஓர் இதயம்..
ரத்தத்தை உணவாய் மாற்றிய ஓர் இதயம்..
அதை உனக்காய் பரிமாறிய ஓர் இதயம்..
நீ கேட்டதெல்லாம் கொடுத்த ஓர் இதயம்..
செய்த சேட்டை எல்லாம் பொறுத்த ஓர் இதயம்..
இன்று துடி துடித்துக்கொண்டு இருக்கிறது தனியாக !..
இன்றும் கூட துடிக்கிறது உனக்காக ....
முதியோர் இல்லத்தில்!
என் மகன் எப்படி இருக்கிறானோ எனநினைத்து?
No comments:
Post a Comment