சிறுவயதில் தொலைத்து அம்மாவிடம் அடிவாங்கித் தந்த கழுத்து நெற் சங்கலி...
தேர்வு நேரத்தில் திருடு போன சிப்பியாய் செதுக்கிய குறிப்பேடு...
தேர்ந்த ரசனையோடு தேடித்தேடி தெரிவு செய்த கைக்குட்டை...
பிடித்தவளின் பெயரையும் பிரியத்தையும் ஒருசேர நினைவுபடுத்தும் சாவிக் கொத்து...
மௌனம் ஆகாத அழைக்கப் படவேண்டிய அனைவரின் எண்ணும் தன்னுள்ளடக்கிய தொலைந்து
போன கைபேசி...
பிரியமானவர் அசாதாரணமாக அளித்த அழகான பேனா...
கண்ணும் மனமும்
கவர்ந்தவளிடம் லயித்த மனம்...
மேலும்....அவள் ப்ரியத்தில்
மீண்டும் மீண்டும்தொலையும் நான்....என்றும் திரும்பகிட்டாதவைகள்.....!
No comments:
Post a Comment