.உச்சியில் பறக்க
யத்தனிக்கிறது என் உயிர்....!
சூடு தணிகிற இரத்தம் நிரம்பிய பிணம் ஒன்று பார்த்துக் கொண்டிருக்கிறது
கையருகே இறந்து கிடக்கிறது
என் முகங்கள்
குழந்தை முகம்
மகள் முகம்
சகோதரி முகம்
நட்பு முகம்
கவி முகம்
சிந்தனை முகம்
பிழைப்பு முகம்
காதல் முகம்
மனைவி முகம்
தாய் முகம்
வனாந்தரத் தனிமையின்
நிசப்தத்தோடு
ஒன்றை ஒன்று
பார்த்த படிஒப்பாரி தெரியா
மூளை கிழிய ஓவென ஒலிக்கும்
தனித்த இதயத்துடன்
பறக்க மறந்த பறவையாய்
உணர்வுகளில் அமிழ்ந்து
கரைகிறது நான் எனும் உயிர்
திரும்ப வரும் உத்தேசமற்றதாய்
உச்சியிலே இன்னமும்
பறந்து கொண்டிருக்கிறது
பிரிந்த உண்மை உயிர்....!
No comments:
Post a Comment