Tuesday, November 20, 2012

நீயே உண்டு

சத்தம் தரும் வளையலுக்கு சந்தேகம்தெரியாது
முத்தம் தரும் வாயிக்கு முகவரி கிடையாது
தடாகத்தில் நீகுளிக்க தடா சட்டமில்லை தாமரைக்கும் உனக்கும் அதிகவேறுபாடில்லை
முல்லைப்பூ தோட்டத்தில் முத்தம்தான் கொடுத்தேன்
மொத்த பூக்களும் தர்ணா செய்ததேன்
செங்காந்தாள் பூவில்
சிறுமொட்டை தொட்டேன்

செங்கோட்டை பூராவும் சிறுதுகளாய் சிதறியதேன்
வங்கக் கடலில் மையம் கொண்ட புயல் சின்னம் வாரிச்சுருட்டி என்னை கொண்டுபோவது திண்ணம்
கன்னம் நல்ல வெண்சங்கு வண்ணம் கழுத்துக்குகீழே காலுக்கும் மேலே தங்ககிண்ணம் நிலவுக்கும் களவுக்கும் வானுண்டு பொருளுண்டு எனக்கு அணங்கு யாருண்டு நீயேஉண்டு


No comments:

Post a Comment