Monday, May 20, 2013


எந்த சாயம்
பூசினாலும் மயங்காத
மயிலே அனார்கலி
உனை நான்
விவசாயம் செய்யப்
போகிறேனடி பேதைப்
பெண்ணே....!!
உச்சிவெயில்
உழுது நான் களைத்த
பொழுதினிலே....
கண்டாங்கி சேலைகட்டி
கை நிறைய
வளையலிட்டு
காதோரத்து முடியில்
கனகாம்பரம் நீ
வைத்து.....
கொண்டு வந்து
தந்தாயடி அந்தக்
கம்பங் கஞ்சி....அது
மந்தாரமலையை
மத்தாக்கி ஆதிசேஷனை
கயிராக்கி பாற்கடலை
கடைந்து கிடைத்த
அமுதினும் இனியதடி
கண்ணே....அதையும்
நாணிச் சிவந்த உன்
முகத்தை பார்த்துக்
கொண்டே குடிப்பது
பூலோகத்து
சொர்க்கமடி அனார்.

No comments:

Post a Comment