Sunday, April 6, 2014

இனியோ அலறமாட்டோம் !!  
எம் பாட்டன் முப்பாட்டன்
ஆண்ட தமிழ்நாடு!
வேற்றோனுக்கு  தாய்வீடு...
மாற்றான் மொழி பேசும்
தமிழ்நாட்டன் மொழியென்றால் ஏசும்.

ஆங்கிலேயன்  நயாகராவில்
வருக! வருக!!
தமிழன் பயாகராவில்
"WELCOME ENTRY TICKET 2 Rs/-"
ஆடுவது மானாட மயிலாட
ஆளுவது தமிழ்நாட
நடத்துவது செம்மொழிமாநாட
பாரடா! தமிழ்ப்படும் பாட்ட
தெலுங்கன் ஆள்கிறான்
கன்னடன் அடிக்கிறான்
மலையாளி வாழ்கிறேன்
தமிழன்
அலைகிறான்!அழிகிறான்!!
கேட்டால் தமிழ்நாடென்கிறான்...

தமிழ் பேசா
வேற்றோன்  நாடு!
அதற்கே தமிழீழ
தனிநாடு அண்ணன்
கட்டமைத்த செந்தமிழ்நாடு!!
தமிழர் நாதமதில்
தமிழீழமே இசைந்திடும்
குருதி கண்ட உடல்
நீர்க்கொண்ட விழி கள்
மறக்குமா? ரணங்கள்
இனியோ அலறமாட்டோம்...
அனல் கக்கும்
நெருப்பாய் போராடுவோம்!
பதுங்கும் புலிகள்
பாய புறப்படுவோம்!
பாயந்து வென்றிடுவோம்!
தாய்நாடு  புகுந்திடுவோம்!!
எதிரியை விரட்டிடுவோம்!!!
இனியோ!
அண்ணன்புலி ஈழநாட்டில்..
தம்பிபுலிகள்   தமிழ்நாட்டில்...

No comments:

Post a Comment