Sunday, April 6, 2014

அணையாத செந்தணல்



முத்துக்குமரா முத்துக்குமரா
எழும்பாத உணர்ச்சி
நரம்பு புடைக்க,
தணலாகிய முத்துக்குமரா...

பொசிங்கிய உடலாலே
சதையை உணர்வாக்கிய
முத்துக்குமரா...

கரும்புலி போல கருகிய
உணர்ச்சிக்குமரா
தீயாலே தீபமாகிய
வீரக்குமரா...

குருதிக்கடல் கொப்பளிக்க
தீச்சூட்டில்
உன்னை ஏற்றினாய்...

உளம் வெதும்பும்
உடல் கொதிக்கும்
தணலிலே
உன்னைக் காட்டினாய்

வீரம்,மானம்
மனிதம் சிதைய
உன்னை நீயே
தழலாக்கினாய்...
நொடியின் கணம்
உன்னை மாய்த்து
சாவின் ரணம்
உணர்ந்துவிட்டாய்...
மனதற்றவர் மதியற்றவர்
சேர்க்கையை
உணர்த்திவிட்டாய்...
தமிழன் அணி திரள
உசுப்பிவிட்டாய்...
முத்துக்குமரா முத்துக்குமரா
உணர்ச்சி தழலென்று
காட்டிவிட்டாய்...

முடங்கிய இனத்தின்
முடிவில்
தொடங்கிவைத்தாய்...
முணங்கிய வேதனையினை
மூட்டிவிட்டாய்...
முத்துக்குமரா முத்துக்குமரா
எழுப்பிவிட்டாய்...


புலியின் தடை தகற
தழலாலே மூண்டுவந்து
பலியான உற்றார் மீள
உடல் உருக்கி
பெரும் படை திரட்டினாய்...
உளம் உருக
தமிழரை மாற்றினாய்...
முத்துக்குமரா முத்துக்குமரா
இன்றும் எங்கள்
நெஞ்சில் வாழ்கிறாய்...
தழல் சூழ்ந்த
மாவீரனாய்...

முத்துக்குமரா முத்துக்குமரா
மூண்ட தீயில்
வெடியாகிய தீக்குமரா
என்றும் உன் தழல்
அணையாது...
தமிழர் தாகம்
தணியாது...

No comments:

Post a Comment