கவியாகும் காதலன்
நிச்சயமாகச் சொல்கிறேன்
நான் கவிஞனில்லை
கற்பனைக்கும் எனக்குமான
தூரம் எப்போதும் மிக மிக
அதிகமே
தொடர் சிந்தனைக்கும் எனக்கும்
என்றும்
தொடர்பு இருந்ததே இல்லை
ஆயினும்
என்னுடன் இருந்து நீ பிரிந்த
சில நிமிடங்களில்...
திரு விழா முடிந்த மறு நாளில்
அனைத்து அலங்காரங்ளையும்
இழந்து
அலங்கோலமாய்க் கிடக்கும்
வெட்டவெளி மைதானமும்
அறுவடை முடிந்து அம்மணமாகி
வானம் பார்த்து வெறித்துக்
கிடக்கும்
அடுத்த விதைப்புக்கு ஏங்கிக்
கிடக்கும்
பொட்டலான வயல்வெளியும்
கடைசிப் பேருந்தும் போய்விட
அழுது வடியும் தெரு விளக்கு
வெளிச்சத்தில்
விடியலுக்கு ஏங்கிக் கிடக்கும்
கிராமத்துப் பேருந்து
நிலையமும்
கோடை விடுமுறைப் பள்ளியும்
நீர் நின்று போன தெருவோரக்
குழாயடியும்....
இன்னும் இதுபோல் பிறவும்
தொடர்ச்சியாய் காட்சியாய்
என்னுள் நிறைய
எனக்கு கவிஞனாகி
விடுவேனோ என
பயமாயிருக்கிறது
எனக்காக இல்லையெனினும்
கவிதையைக் காப்பாற்றவாவது
என்னை விட்டுப் பிரியாதிருக்க
முயற்சி செய
No comments:
Post a Comment