Saturday, January 31, 2015

நங்கை உன் கையில்

பெண் குலத்தின் தலைவியே
பொறுமையின் இலக்கணமே
அன்ன நடை பயிலும் மாதே
அன்பின் பிறப்பிடமே
அழகின் இருப்பிடம் நீ
தனி வழியாம் உன் வழியாம்
கயல் மீனோ உன் கண்ணில்
கொவ்வை பழம் என்றோ
புன்னகை உதட்டிற்காய்
புல்லினம் கூடினவே
கன்னத்தில் குழி அழகு
கரும் கூந்தல் அதில் அழகு
முத்தான மூக்குத்தி
உன் மூக்கிற்கே தனியழகு
முழுமதி போல் முகம் இருக்க - அதில்
மூன்றாம் பிறை வடிவில்
நீள் புருவம்
புனிதம் உள்ள குணவதியே
பூவுலகின் நாயகியே
கண்ணகி நீ வாழனும்
கணவனுக்கு பெருமைகளை சேர்க்கனும்
மாமியார் போற்றனும்
மற்றவர் வாழ்த்தனும்
இல்லறம் சிறக்கவே - நாட்டில்
நல்லறம் பெருகனும்
நாளைய சந்ததி
நன்நிலை பெற்றே
நலமுடன் வாழ்வது
நங்கை உன் கையிலே

No comments:

Post a Comment