Saturday, August 29, 2015

காதலிக்கும்முன்..

எட்டு மணிவரை தூக்கம்,
எடுப்பு சாப்பாடு,
குளிக்காத நாட்கள்,
shave செய்யாத முகம்,
எந்தக் கவலையும் இல்லாத மனம்,
ஜஸ்ட் பாஸ் கேஸ்,
தண்ணியாக செலவழித்த பணம்,
கனவில் ஐஸ்வர்யா ராய்,
பெண்கள் என்றால் அலட்சியம்,
அளவில்லாத வெட்டி பேச்சு,
ஏடாகூடா உடை,
கலைந்த தலைமுடி,
மூக்கின் மேல் கோவம்,
சண்டே சினிமா,
காதல் காட்சியா ரிமோட் எங்கே?,
எல்லாவற்றிற்க்கும் மேல் நானாகிய
நான்,
இவைதான் என் அடையாளங்கள் !

காதலித்தபின் ...

உறங்காத இரவுகள் (என் தலையணை
சொல்லும்),
பாதி நாட்கள் விரதம் (நீ வேண்டி),
இருமுறை குளியல் (உன் அருகே
வர),
தினமும் shaving (உன் கலரை மேட்ச்
செய்ய),
டைடானிக்கே மூழ்கிய மனம் (உன்
நினைவில்),
படிப்பில் கவனம் (உனக்காக
சம்பாதிக்க),
கஞ்சனாக மாறினேன் (உனக்கு கால்
பண்ண),
தூங்கினால்தானே கனவு வர
(அதிலும் நீ),
பெண்கள் என் சகோதரிகள் (உன்னை
தவிர),
ஊமையாகிய என் வாய் (நீ
பேசாதபோது),
கவனமான உடுப்பு (உன்னோடு
இருக்க),
கோவம் என்றால்? (புல்லைத்
தின்னும் புலி),
70mmல் உன் முகம் (சினிமா எதற்கு),
காதல் காட்சியா வால்யூம் ஏத்து
(திரையில் நாம்),
உன்னில் பாதியாகிய நான்,
யார் என்னை மாற்றியது ???

No comments:

Post a Comment