Wednesday, January 7, 2015

ஆடித்தள்ளுபடிகளில் கூட
உடை வாங்கித்தராதவனென்று
அட்சயதிருதியைகளில் கூட
நகை வாங்கித்தராதவனென்று
பண்டிகைநாட்களில் கூட
பொருள் வாங்கித்தராதவனென்று
சம்பளதினங்களில் கூட
இனிப்பு வாங்கித்தராதவனென்று
மூகூர்த்ததினங்களில் கூட
பூக்கள் வாங்கித்தரதாவனென்று
அவளுக்கிருக்கும் ஏகவருத்தங்களுக்கு
அப்பால் சிறு தலைவலிக்கு
பதறியடித்து தைலமொன்றை
தடவிவிடும் பேரன்பும் இருக்கிறது !!

No comments:

Post a Comment