Friday, January 2, 2015

இதயக்குதிரை

எக்கணமும் உள்மனதில்
கடிவாளமற்ற குதிரையொன்று
கண்டபடி ஓடித்திரியும்;
எவ்வளவோ முயன்றுவிட்டேன்
நிறுத்திவிட முடியவில்லை!
இதயத்தில் கைவைத்தோரெல்லாம்
இது வெறும் இதயத்துடிப்பென்றார்;
அப்படியென்றால் ஓடட்டுமென்று
அப்படியே விட்டுவிட்டேன்;
என்றாலும் சில நாட்கள்
‘ அதுவாக நின்று விடுமா-இல்லை
அதை இழுத்துப்பிடித்து நிறுத்தலாமா? ‘
என்றபடி யோசனையொன்று
அக்குதிரை மீது சவாரி செய்யும்…!

No comments:

Post a Comment