Wednesday, July 10, 2013

உன் மடியில் தலைவைத்து உறங்கும் சுகம் !
நீ உண்ணும் பொழுது ஒரு வாய் ஊட்டிவிட சொல்லி 
உன் எச்சிலை சாப்பிடம் சுகம் !

தினமும் காலை உன்னிடம் திட்டுக்கள் வாங்கிவிட்டு 
பள்ளி செல்லும் சுகம் !
மாலை வீடு திரும்பியதும் ஒன்றுமே நடக்காதது போல் 
என்ன தலையை வருடிக் கொடுக்கும் சுகம் !

நான் தூங்கி விட்டேன் என்று எண்ணி 
என் நெற்றியில் நீ முத்தம் கொடுக்கும் சுகம் !
இது அனைத்தும் இன்று வரை அனுபவித்துகொண்டிருக்கிறேன் 
என் தாயிடம் இருந்து.

ஏழு கழுதை வயசாச்சு இன்னம் பிள்ளைய 
கொஞ்சிகிட்டு இருக்கனு யாரு சொனாலும் 
என் பிள்ளை கிழன் ஆனாலும் எனக்கு அவன் 
 குழந்தைதான் என்று சொல்லி 

என்னை தன் வாழ்நாள் முழுக்க சுமந்துகொண்டிருக்கும் 
என் அன்னையை கடைசி காலம் வரை 
சுகமாகசுமப்பது நான் செய்த பாக்கியம்.

No comments:

Post a Comment